கர்னாடக இசை, 100 வயலின், ஒரு வெஸ்டர்ன் பீட்!
மதுரையில் கைவண்டி இழுப்பவர்கள்/மிதிப்பவர்கள் (ரிக்ஷாகாரர்கள்) எல்லாரும் சேர்ந்து, ஒரு கர்னாடக இசைப் பாடகரிடம்,
எங்களுக்காக இதைப் பாடுங்களேன் என்று கேட்டார்கள்.
வியப்பாக உள்ளதா?
குத்திசைப் பாட்டுக்குத் துள்ளாட்டம் போடுவோர், இதற்கும் துள்ளாட்டம் போட்டபடிக் கேட்டு ரசித்தனர் என்றால் நம்ப முடிகிறதா?
அப்படி என்ன பாட்டு? யாரிடம் கேட்டார்கள்??
பாட்டு ஒரு வெஸ்டர்ன் பீட்.
கேட்டது மதுரை மணி ஐயர் என்ற புகழ் பெற்ற கலைஞரிடம்.
பொதுவாக இது Madurai Mani Note என்று பிரபலம் ஆகியது.
ஆனாலும் இந்த நோட் அவரே புனைந்தது கிடையாது!
முத்தையா பாகவதர் என்பவர் தாம் அதை உருவாக்கியது.
இருப்பினும் பிரபலப்படுத்தியதால் மதுரை மணி நோட் என்றே ஆகி விட்டது! இதோ நீங்களும் கேளுங்கள் - எதில் வேண்டுமானாலும்!
* SAXOPHONE
** CLARINET
*** VIOLIN
**** GUITAR
* மதுரை மணி அவர்களே பாடுவது
** நித்ய ஸ்ரீ பாடுவது
இதே பாடலை, தில்லானா மோகனாம்பாள் படத்தில், சிவாஜி வாசிப்பார்.
ஆங்கிலேயர் ஆடும் நடனப் பார்ட்டியில் கலந்து கொள்ளாது, மக்களுக்காக வெளியில் நின்று நாதசுரம் வாசிப்பார்.
அதில் மயங்கும் வெளிநாட்டுக்காரர்கள், அவர்கள் இசையை நாதசுரத்தில் வாசிக்க முடியுமா என்று கேட்க,
அப்போது இந்த மதுரை மணி நேட்டைத் தான் சிவாஜி வாசிப்பார்.
இப்படிப் பல நாட்டு இசைக் குறிப்புகளையும் தன்னகத்தே கொண்டு திகழ்வது தான் நம் இசை!
என்ன... இது ஒரு நுண்கலை என்பதால், சற்று புரிந்து கொள்ள முற்பட வேண்டும்!
அன்பு ஈனும் ஆர்வம் உடைமை - அது ஈனும்
நண்பென்னும் நாடாச் சிறப்பு
என்ற குறளைப் போல், அன்பு இருந்தால் ஆர்வம் வந்து விடும்!
முன்பு போல், அதிகமாக இலக்கணம் எல்லாம் பேசாமல், ரசிகர்களைக் கருத்தில் கொண்டும் இப்போதெல்லாம், பல கர்னாடக/தமிழிசைக் கச்சேரிகள் நடக்கின்றன.
சினிமாவிலும் இதன் சாயல்கள் நிறைய வருகின்றன. ராஜா கையாளாத ராகங்களா?
வரும் பதிவுகளில், இது போல் நிறைய இசை ஆர்வம் / இசை உந்துதல் பதிவுகளை எல்லாம் பார்க்கலாம்.
ரசிக்கத் துவங்கி விட்டால், ருசிக்கத் துவங்கி விடலாம்! :-)
சரி, இதை எதற்கு இப்போது சொல்கிறாய் என்று கேட்கிறீர்களா?
விடயம் இருக்கிறது!
வயதான பின்பு கூட, திடீர் என்று இசையில் ஆசை முளைக்கிறது அல்லவா? எங்கு போய் கற்றுக் கொண்டால், கொஞ்சம் புரிகிற மாதிரி சொல்லித் தருவார்கள் என்று ஒரு கேள்வி எழும்!
சென்னையில் ஒருவர்... பலதரப்பட்ட வயதினரையும் வைத்துக் கொண்டு, சுமார் 150-200 பேர்.....சிறுவர், பொடியர், பெரியவர் எல்லாரும் தான்...வயலின் கச்சேரிகள் செய்கிறார்.
தனிக் கச்சேரி எதுவும் கிடையாது!
எல்லாமே குழுவோடு இணைந்து ஒரு Ensemble தான்!
அயல்நாட்டு வாத்தியம் வயலின்! இது எப்படி நம் இசைக்குள் வந்தது?
நண்பர் CVR இது பற்றி முன்னரே ஒரு பதிவு போட்டிருந்தார்...
பார்க்காதவங்க ஒரு எட்டு போய் பாத்துட்டு வாங்க!
ஒரு 100 வயலின்களை ஒரு சேர மீட்டினால் எப்படி இருக்கும்?
அதுவும் அதை வாசிப்பதில் பாதி பேர் பொடிசுகள்!
நீங்களே பாருங்க!
எல்லாரும் மேற் சொன்ன மதுரை மணியின் வெஸ்டர்ன் நோட்டைத் தான் வாசிக்கறாங்க!
சென்னையில், CARVA என்கிற ஒரு அமைப்பு.
CA Rajasekar Violin Academy என்பதே CARVA. அங்கு தான் இந்தப் பயிற்சி!
இதோ அவர்கள் வலைதளம்: http://www.carvatrust.org/
பயிலும் எந்த மாணவரையும் திறமையை வைத்துக் கூட பேதம் பார்ப்பதில்லை!
சீனியர், ஜூனியர் எல்லாரும் ஒன்றாகவே வாசிக்கிறார்கள் இந்த Ensemble-இல்.
மார்கழியில், கூட்டமாக இருக்கும் என்ற காரணத்தால்,
வைகாசி மாதத்தில் எல்லா மாணவர்களுடனும் திருவையாறு சென்று, அங்கே தியாகராஜர் நினைவிடத்தில் இசை அஞ்சலியும் செய்கிறார்கள்!
பீத்தோவன் தீம் இசை ஒன்றையும் வாசிக்கது பாருங்க அந்தக் குழு!
என்ன, இப்ப சொல்லுங்க, இசை இன்பம் தானே?
(Video Courtesy: KS Balachandran, CARVA)