tag:blogger.com,1999:blog-36268584.post3456690469101982849..comments2023-04-04T23:35:54.394-05:00Comments on இசை இன்பம்: புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் பாடிய தியாகராஜ கீர்த்தனை!Kannabiran, Ravi Shankar (KRS)http://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comBlogger53125tag:blogger.com,1999:blog-36268584.post-14095176993982582882007-07-28T19:19:00.000-05:002007-07-28T19:19:00.000-05:00நன்றி. வியப்பளிக்கும் செய்தி. பாவேந்தரின் அருமையான...நன்றி. வியப்பளிக்கும் செய்தி. பாவேந்தரின் அருமையான மொழிமாற்றம். சிந்துபைரவி பார்த்ததன் விளைவாய் ப்ரோச்சேவாரெவருரா வைப் பின்பற்றி முருகன்மேல் ஒரு பாடல் எழுதியுள்ளேன். Google Blog Searchல் அணைக்கட்டுபாலா சென்று பார்க்கவும். மீண்டும் நன்றி.<BR/> அணைக்கட்டுபாலாanaikattubalahttps://www.blogger.com/profile/18033178539477596567noreply@blogger.comtag:blogger.com,1999:blog-36268584.post-21407550153015880732007-05-22T19:53:00.000-05:002007-05-22T19:53:00.000-05:00//nayanan said... One of the finest articles I enj...//nayanan said... <BR/>One of the finest articles I enjoyed reading. Keep it up.//<BR/><BR/>நன்றி நாக இளங்கோவன்!Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-36268584.post-83064038992273688312007-05-22T19:51:00.000-05:002007-05-22T19:51:00.000-05:00//Anonymous said... I think thygaraja's compositio...//Anonymous said... <BR/>I think thygaraja's composition...was bhakthi <BR/>But, i think bharathi dasan composition was not for the sake of bhakthi.as thamizan said, he was mainly interested in showing that Tamil can have such songs//<BR/><BR/>Rightly said...Anony!<BR/>and our case is here...<BR/>whether the intent was bhakti or something else, still Rama Nama is sweet for the ears! :-)Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-36268584.post-27871572093400172132007-05-03T03:37:00.000-05:002007-05-03T03:37:00.000-05:00Dear Kannabiran, Ravishankar:One of the finest art...Dear Kannabiran, Ravishankar:<BR/><BR/>One of the finest articles I enjoyed reading. Keep it up.<BR/><BR/>anbudan<BR/>naaga elangovannayananhttps://www.blogger.com/profile/12331165129048713846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-36268584.post-14741541275369899932007-05-02T17:53:00.000-05:002007-05-02T17:53:00.000-05:00இசைக்கு மொழி தேவையில்லை, எனவே தமிழிசை என்பதெல்லாம்...இசைக்கு மொழி தேவையில்லை, எனவே தமிழிசை என்பதெல்லாம் குறுகிய மனம் கொண்டவர்களின் கூப்பாடு என்று சொல்லிக்கொண்டிருந்தவர்கள் திடீரென்று இப்போது பொருள் புரிந்து பாடுவதுதான் முக்கியம் என்கிறார்கள்!<BR/><BR/>\\"சராசர ரூப பராத்பர" என்ற சொற்களின் ஆழம் என்ன?\\ என்று கேட்கிறார் ஜடாயு. இசைக்குப் பொருள், முக்கியம் மொழி முக்கியம் என்று ஒத்துக்கொண்டதற்கு மிகவும் நன்றி.<BR/><BR/>இந்தச் சொற்களுக்ககான பொருளை ஒரு தமிழனால் புரிந்துகொள்ள இயலும் என்று எப்படி எதிர்பார்க்கிறீர்கள்? <BR/><BR/>காந்தி பெரியார் பற்றிய கட்டுரையில் `உத்தரவு வாங்கிக்கொண்டு வந்துவிட்டோம்` என்று தமிழில் எழுதப்பட்டிருக்கும் வார்த்தைககளுக்கு உண்மையான பொருள், `போய்விட்டு வருகிறோம் என்று விடைபெறுவதா` அல்லது `கட்டளையை ஏற்றுக்கொண்டு வருவதா` என்று தெரியாமல் குழம்பிய ஜடாயு, தியாகராசரின் மராத்திய வார்த்தைகளுக்குத் தமிழர்களால் பொருள் அறிந்துகொள்ள முடியும் என்று நினைப்பது வேடிக்கையாக இருக்கிறது.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-36268584.post-31807161013675050852007-05-02T09:08:00.000-05:002007-05-02T09:08:00.000-05:00I think thygaraja's composition was an outpouring ...I think thygaraja's composition was an outpouring od devotion to the lord.the emotion or bhavam associated with thyagaraja's "marugelara" was bhakthi <BR/><BR/>But, i think bharathi dasan composition was not for the sake of bhakthi.as thamizan said, he was mainly interested in showing that Tamil can have such songs etc and translated the original composition.His intention was not to spread devotion to Lord VishnuAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-36268584.post-37641549843874295932007-05-02T00:02:00.000-05:002007-05-02T00:02:00.000-05:00//வைணவஸ்ரீ கேஆரெஸ் அவர்களே//அய்யோ, ஜடாயு சார்..இப்...//வைணவஸ்ரீ கேஆரெஸ் அவர்களே//<BR/><BR/>அய்யோ, ஜடாயு சார்..<BR/>இப்படி எல்லாம் அடியேனை வையாதீர்கள். :-)<BR/>நாயேன் தகுதி என்ன என்று எல்லார்க்கும் குறிப்பாக எனக்கும் அப்பட்டமாகத் தெரியுமே!<BR/><BR/>அவரவர் சார்பு நிலையில் அவரவர் மனத்துக்கு இனிய ஒன்றைச் சொல்லும் போது...<BR/>மாறுபாடுகள் அவ்வளவிலே நிற்பது நல்லது;<BR/>மாறுபாடுகள், வார்த்தையின் கூறுபாடுகள் ஆக வேண்டா!<BR/><BR/>இங்கு இசை இன்பம்!<BR/>இங்கு எதற்கு வசைத் துன்பம்?<BR/>எல்லார் மனத்துக்கும் இனியானைப் பாடேலோ ரெம்பாவாய்!<BR/>இசைப் பதிவு மேலும் சிறக்க நல் வழி சொல்வீர்!Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-36268584.post-64495799368364632272007-05-01T23:49:00.000-05:002007-05-01T23:49:00.000-05:00ஜடாயு சார்நல்வரவு!//என் கருத்தின் மீது முத்திரை கு...ஜடாயு சார்<BR/>நல்வரவு!<BR/><BR/>//என் கருத்தின் மீது முத்திரை குத்தும் முயற்சி தான் இங்கு நடக்கிறதே அன்றி சரியான விவாதம் இல்லை//<BR/><BR/>தங்களையோ மற்றெவரையுமோ தாழ்த்திப் பேசும் எந்தப் பின்னூட்டங்களையும் அடியேன் அனுமதிக்க மாட்டேன்.<BR/>தாங்கள் வருந்தற்க!<BR/><BR/>//இவை அழகிய முயற்சிகள், பக்தர்களால் செய்யப் பட்டவை. அதனால் போற்றத் தக்கவை//<BR/><BR/>இப்போது, விவாதம் இந்தக் கருத்துக்கு வந்து விட்டது.<BR/><BR/>பக்தர்கள் இறைவனுக்குச் செய்யும் படைப்புகள் மட்டும் தான் போற்றத் தக்கவையா? <BR/>இல்லை பக்தர் அல்லாதார், இறைவனை வசை பாடியவர்கள், ஒரு முறையாச்சும், இல்லை சும்மானாங்காட்டியும், <BR/>ஒரு பாட்டை இறைவன் பேரில் எழுதுவது நல்லதில்லையா?<BR/><BR/>//அந்தத் தமிழ் அனைத்தும் அவர் ஆத்ம அனுபூதியில் நின்று, ஆத்ம தரிசனத்தில் நின்று வந்த சொற்கள்//<BR/><BR/>மிகவும் உண்மை ஜடாயு சார்.<BR/>எம்பெருமானை ஆழ்ந்து அனுபவித்த அன்பு வார்த்தைகள் போற்றற்குரியவை என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது.<BR/><BR/>அதே சமயம் <BR/>முத்தமிழால் வைதாரையும் வாழ வைப்பான், <BR/>சிறு பேர் அழைத்தனவும் சீறி "அருளுவான்" - அல்லவா அவன்!<BR/><BR/>இந்தப் பாடலில் ராமபிரானுக்கு இழுக்கு ஏற்படுத்தும் நோக்கமோ, தியாகராஜருக்குக் களங்கம் கற்பிக்கும் நோக்கமோ எதுவுமில்லை.<BR/>என்ன, இதைப் பாடிய கவிஞர் பின்னாளில் இறைமறுப்புப் பாடல்களையும் பாடியுள்ளார். அந்த ஒரு காரணத்துக்காக இந்தப் பாடல் ஒட்டு மொத்தமாகத் தகுதியற்றதாக ஆகி விடாது என்பது தான் அடியேன் கருத்து.<BR/><BR/>நான் பாரதிதாசனார் பாடலை வைத்து, அவரைத் தமிழ்த் தியாகராஜர் என்றோ, அவர் பாடல்களை கீர்த்தனாம்ருதம் என்றோ கொண்டாடச் சொல்லவில்லை! இனி தியாகராஜர் பாடலுக்குப் பதிலாக, இந்தப் பாட்டையே பாடி விடலாம் என்றும் சொல்லவும் மாட்டேன்!<BR/><BR/>ஒரு நல்ல பெயர்ப்பு, இசை அறிமுக அன்பர்களுக்குச் சட்டென பிடித்துக் கொண்டு, மேலும் ஆர்வம் கூட்ட ஒரு முயற்சி...அவ்வளவே!<BR/><BR/>"அச்சு அசல்" என்பதை எந்த நோக்கத்தில் உரைத்தேன் என்பதையும் தெளிவுபடுத்தி விட்டேன்.<BR/>வேண்டுமானால் அந்தச் சொற்களை எடுத்தும் விடலாம்.<BR/><BR/>சற்று நேரத்துக்குப் பாட்டை எழுதியவரையும் அவர் என்ன நோக்கத்தோடு எழுதினார் என்பதையும் மறந்து விடலாம்.<BR/>ராகம் கூட முழுதும் உள்ளதா என்பதை மறந்து விடலாம்!<BR/>பாட்டை, அதன் வரிகளை மட்டும் கவனிக்கலாம்.<BR/><BR/>ஓ ராமா, நீ நாமா எந்த ருசிரா...<BR/>அதை அன்பன் சொன்னாலும், வேறு யார் சொன்னாலும் - "ராமா" அந்தப் பெயர் ருசியாகத் தான் உள்ளது!Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-36268584.post-52685647499589925352007-05-01T23:14:00.000-05:002007-05-01T23:14:00.000-05:00//வெட்டிப்பயல் said... ரெண்டு தடவை மூணு தடவைனா பரவ...//வெட்டிப்பயல் said... <BR/>ரெண்டு தடவை மூணு தடவைனா பரவாயில்லை.. அதையே 5-6 தடவைக்கு மேல பாடினா போர் அடிக்கிற மாதிரி இல்லை???//<BR/><BR/>சரிப்பா பாலாஜி, எத்தனை முறை ரிப்பீட்டு அனுமதிக்கலாம் என்று நம் சர்வேசனை வைத்து ஒரு சர்வே எடுத்திடலாம் :-)<BR/>Look into my eyes பத்து முறைக்கும் மேலாக ரீப்பிட் செய்வார்கள். அது செம ஹிட் :-)<BR/><BR/>பாண்டிய மன்னர் பாலாஜியின் சந்தேகத்தைத் தீர்த்து வைப்பவருக்கு ஆயிரம் ? பரிசு என்று அறிவித்து விடலாமா? :-)Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-36268584.post-16571189048665053542007-05-01T22:22:00.000-05:002007-05-01T22:22:00.000-05:00// சுப்ரபாதத்தைத் தமிழில் மொழிபெயர்த்து எம்.எஸ் பா...// சுப்ரபாதத்தைத் தமிழில் மொழிபெயர்த்து எம்.எஸ் பாடியிருக்கின்றார்களே...அவைகளும் இசை மற்றும் கலையின் முழுப்பரிமாணத்தைப் புரிந்து கொள்ளாமல் எடுத்த வீம்பு முயற்சியோ! // <BR/><BR/>சுப்ரபாதப் பக்திப் பனுவல் - அதில் ஒருவிதமான சந்த நயம் உள்ளது, அது "இசைப் படைப்பு" அல்ல. <BR/>இதே போல் வீரை கவிராஜ பண்டிதர் சௌந்தரிய லகரியை அற்புதமாகத் தமிழ்ச் செய்யுட்களாக எழுதியுள்ளார். கீதார்த்த சங்கிரகம் பற்றியும் இப்படியே கூறுவேன். இவை அழகிய முயற்சிகள், பக்தர்களால் செய்யப் பட்டவை. அதனால் போற்றத் தக்கவை. <BR/><BR/>// வேதம் தமிழ் செய்தவர் என்று கொண்டாடுகிறார்களே...அவர் எதில் சேர்த்தி? // <BR/><BR/>இதற்குப் பெயர் தான் கேனத் தனமாகக் கேள்வி கேட்பது என்பது. <BR/><BR/>வேதத்தை வரிவரியாக சடகோபர் மொழிபெயர்த்தாரா? இல்லை சூக்தம் சூக்தமாக ஆக்கினாரா? திருவாய்மொழியைப் படித்திருக்கிறீரா? <BR/><BR/>அந்தத் தமிழ் அனைத்தும் அவர் ஆத்ம அனுபூதியில் நின்று, ஆத்ம தரிசனத்தில் நின்று வந்த சொற்கள். இதனால் வேதமந்திரங்களை உள்ளுணர்வில் பெற்ற ரிஷிகளைப் போல அவரும் "மந்திர திரஷ்டா" ஆகிறார். அவரது வாய்மொழிகள் மந்திரங்கள் ஆகின்றன - நிறைமொழி மாந்தர் அருளிய மறைமொழி என்பதாக. அவை "வேதத்திற்கு நிகரான" என்ற பொருளிலேயே "வேதம் தமிழ் செய்த" என்று கூறப் படுகின்றனவே தவிர, மொழியாக்கம் என்ற அளவில் அல்ல. வைணவஸ்ரீ கேஆரெஸ் அவர்களே, சரிதானே? <BR/><BR/>என் கருத்தின் மீது முத்திரை குத்தும் முயற்சி தான் இங்கு நடக்கிறதே அன்றி சரியான விவாதம் இல்லை. பாரதி தாசனின் இத்தகைய மொழிபெயர்ப்புகள் கண்டிப்பாக வீம்பு தான் - அதில் ஒரு கவித்துவ நேர்மையும் எல்லை, தியாகையரின் பாடலில் கரைந்து உருகிய ஒரு ரசிக உள்ளமும் இல்லை. "ஸ்ரீரங்கநாதரையும் தில்லை நடராசரையும் பீரங்கி வைத்துப் பிளக்க வேண்டும்" என்று கூவிய ஒரு குருட்டு வெறிக் கூச்சல் கவிஞரிடம் இத்தகைய ஆழ்தலை எதிர்பார்ப்பதும் தவறுதான்!ஜடாயுhttps://www.blogger.com/profile/03221239000215336928noreply@blogger.comtag:blogger.com,1999:blog-36268584.post-7220321148954001052007-05-01T12:33:00.000-05:002007-05-01T12:33:00.000-05:00//வந்துட்டார் ஐயா நம்ம பாலாஜி :-)இனி களை கட்டி விட...//<BR/>வந்துட்டார் ஐயா நம்ம பாலாஜி :-)<BR/>இனி களை கட்டி விடும்!<BR/><BR/>ஒரே வரிய திரும்ப திரும்ப பாடினா உங்களுக்குக் கோவம் வருதா பாலாஜி? :-) இது இங்கன்னு இல்ல...எல்லா நாட்டிலேயும் உள்ளது தான்...மரபுப் பாடல்களிலும் சரி...சினிமாப் பாடல்களிலும் சரி...<BR/><BR/>ஏன் நீங்களே கண்ணன் பாட்டில் இட்ட கனக் கச்சிதமான கவிதை..அதில் கூட "ஏ தில்லா தாங்கு தாங்கு" என்று திரும்ப திரும்ப பாடுறாங்களே! - அது ஏன் பாலாஜி? :-)//<BR/><BR/>ரெண்டு தடவை மூணு தடவைனா பரவாயில்லை.. அதையே 5-6 தடவைக்கு மேல பாடினா போர் அடிக்கிற மாதிரி இல்லை???<BR/><BR/>தில்லா தாங்கு தாங்குனு 2 தடவைக்கு மேல பாடறதில்லை ;)வெட்டிப்பயல்https://www.blogger.com/profile/11825121520834091816noreply@blogger.comtag:blogger.com,1999:blog-36268584.post-75610996240031198912007-05-01T11:32:00.000-05:002007-05-01T11:32:00.000-05:00//VSK said... இப்பாடலின் மூலம், தியாகராஜரின் பெரும...//VSK said... <BR/>இப்பாடலின் மூலம், தியாகராஜரின் பெருமைக்கு எந்தவொரு களங்கமும் கற்பிக்கப் படவில்லை.<BR/>மூலப்பாடலை அறிமுகப்படுத்தி, அதனைப் புரிய வைத்து, அப்பாடலையும் கற்றுக்கொள்ள, அல்லது கேட்க ஒரு ஆவலையே தூண்டிவிடுகிறது// <BR/><BR/>மிகச் சரியான வார்த்தைகள் SK ஐயா!<BR/>வசைத் துன்பம் நிற்கட்டும்!<BR/>இசை இன்பம் பெருகட்டும்!Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-36268584.post-43821740607278153752007-05-01T11:29:00.000-05:002007-05-01T11:29:00.000-05:00கருத்துக்கு நன்றி தமிழன்!கருத்துக்கு நன்றி தமிழன்!Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-36268584.post-57929790600098168902007-05-01T11:25:00.000-05:002007-05-01T11:25:00.000-05:00// வெட்டிப்பயல் said... எனக்கு ஒரு சந்தேகம்...எதுக...// வெட்டிப்பயல் said... <BR/>எனக்கு ஒரு சந்தேகம்...<BR/>எதுக்கு ஒரே வரிய திரும்ப திரும்ப பாடறாங்க?//<BR/><BR/>வந்துட்டார் ஐயா நம்ம பாலாஜி :-)<BR/>இனி களை கட்டி விடும்!<BR/><BR/>ஒரே வரிய திரும்ப திரும்ப பாடினா உங்களுக்குக் கோவம் வருதா பாலாஜி? :-) இது இங்கன்னு இல்ல...எல்லா நாட்டிலேயும் உள்ளது தான்...மரபுப் பாடல்களிலும் சரி...சினிமாப் பாடல்களிலும் சரி...<BR/><BR/>ஏன் நீங்களே கண்ணன் பாட்டில் இட்ட கனக் கச்சிதமான கவிதை..அதில் கூட "ஏ தில்லா தாங்கு தாங்கு" என்று திரும்ப திரும்ப பாடுறாங்களே! - அது ஏன் பாலாஜி? :-)Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-36268584.post-13555838526994528062007-05-01T11:19:00.000-05:002007-05-01T11:19:00.000-05:00//ஓகை said... சிறந்த பதிவு. நன்றி.'அச்சு அசலாக' என...//ஓகை said... <BR/>சிறந்த பதிவு. நன்றி.<BR/>'அச்சு அசலாக' என்பது தவறுதான். உயர்வு நவிற்சியாகக் கூட அது பொருந்தவில்லை. <BR/>ஏனெனில் இசை என்ற கட்டுக்குள் அதே பொருள் தருகின்ற தமிழ்ச் சொற்களைப் போட்டு அதே பாடலுணர்வும் வரவேண்டுமென்பது மிகக் கடினம்.// <BR/><BR/>உண்மை தான் ஓகை ஐயா!<BR/>"அச்சு அசலாக" என்னும் சொற்கள் - இது போன்ற புரிதலுக்குக் காரணியாய் இருக்கலாம்.<BR/>இத்தனைக்கும் "கீர்த்தனையின் <B>மொழி பெயர்ப்பு</B> அச்சு அசலாக", என்று மொழி பெயர்ப்பு மட்டும் தான் அப்படி இருப்பதாக இட்டேன்.<BR/><BR/>வருகைக்குக் கருத்துக்கும் நன்றி.Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-36268584.post-9399103314335026242007-05-01T11:14:00.000-05:002007-05-01T11:14:00.000-05:00//இராம.கி said... எல்லாவிடத்தும் வலைத் தமிழ்க் கும...//இராம.கி said... <BR/>எல்லாவிடத்தும் வலைத் தமிழ்க் குமுகத்தைப் பிரித்து, கிடாச் சண்டை போடச் சிலர் முயன்று கொண்டிருக்கும் நேரத்தில் உங்களின் இணக்கச் செய்கை போற்றத் தகுந்தது//<BR/><BR/>வாங்க, இராம.கி ஐயா!<BR/>அடியேன் எண்ண ஓட்டத்தைச் சரியாகப் புரிந்து கொண்டு, வாழ்த்தியமைக்கு நன்றி.<BR/><BR/>//பாரதிதாசன் பல்கலைக் கழகத்தின் பாரதிதாசன் உயராய்வு மையத்தால் அந்தப் பொத்தகம் வெளியிடப்பெற்றது. (நீங்கள் தேடிக் கொண்டிருக்கும் முருகன் பாடலும் அதில் இருக்கிறது.) //<BR/><BR/>முருகன் பாடலுக்கு வழி காட்டியமைக்கு நன்றி.<BR/>அப்புத்தகத்தைப் பெற முயல்கிறேன்!Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-36268584.post-50297924000272805372007-05-01T10:04:00.000-05:002007-05-01T10:04:00.000-05:00வாக்கேயக்காரர் என்ற சொல் நான் புரிந்து கொண்ட வகையி...வாக்கேயக்காரர் என்ற சொல் நான் புரிந்து கொண்ட வகையில் 'ஒரே நேரத்தில் பாடலையும் இசையும் படைப்பவர்' என்ற பொருளைத் தர பயன்படுகிறது. ஒரு சமையலைப் போன்று காட்டாக புலவு, சோறும் சுவையுமாகக் கலந்திருப்பதைப் போன்று இசையும் கருத்தும் மொழியும் இணைந்து கிடைப்பவை கீர்த்தனைகள் என்பது என் புரிதல். இவற்றின் முழுச்சுவையோ அல்லது மூலத்தின் சுவையோ மொழியாக்கங்களில் முழுமையாகக் கிடைப்பது அரிது.<BR/><BR/>இது ஒரு அரிய மொழியாக்கம்.ஓகைhttps://www.blogger.com/profile/01365297775457332565noreply@blogger.comtag:blogger.com,1999:blog-36268584.post-35524739820659117072007-05-01T09:49:00.000-05:002007-05-01T09:49:00.000-05:00//ஏதொன்றையும் குல நோக்கிலும், காவியாடி வழியேயும் ப...//ஏதொன்றையும் குல நோக்கிலும், காவியாடி வழியேயும் பார்த்தே பழக்கப் பட்டவர்கள், காழ்ப்பும், குல உயர்ச்சியும் தொனிக்க இப்படி எழுதிக் கொண்டுதான் இருப்பார்கள். "இணக்கமாய் யாரேனும் ஒருவர் நிகழ்வுகளையும் செய்திகளையும்" கூறினால் இவர்களுக்குப் பொறுக்கவே பொறுக்காது. "நாங்கள் எப்பவுமே தனி; நீ எவ்வளவு முட்டினாலும் நாங்கள் இருக்கும் இடத்திற்கு நீ எம்பவே முடியாது; எனவே இருக்கும் இடத்தில் நீ இருந்து கொள்" என்று பொருள்பட, மாற்றாரைத் தட்டிக் கொண்டே இந்துத்துவம் பேசுவதில் இவர்களை மிஞ்ச யாரும் கிடையாது. இவர்களின் சொல்லுக்குச் சொல் நாம் மறுமொழித்துக் கொண்டு இருக்கலாம். ஆனால், அது கொஞ்ச நேரத்தில் சலித்துப் போகும்; நம் உருப்படியான வேலையைத் தொலைப்பதாய் ஆகிப் போய்விடும். மேலும் அவை நாகரிகத்தில் அது பொருந்தாது போய் விடும். எனவே வேறு புலனத்தில் நாம் நகர்ந்து போவதே நல்லது. //<BR/><BR/>கண்ணுக்குக் கண்!ஓகைhttps://www.blogger.com/profile/01365297775457332565noreply@blogger.comtag:blogger.com,1999:blog-36268584.post-10451641682627517492007-05-01T09:47:00.000-05:002007-05-01T09:47:00.000-05:00சிறந்த பதிவு. நன்றி.பாரதிதாசன் இதை புரட்சிக்கவிஞரா...சிறந்த பதிவு. நன்றி.<BR/><BR/>பாரதிதாசன் இதை புரட்சிக்கவிஞராக இருந்தபோதுதான் இப்படி மொழி பெயர்த்தார் என்பதை நானும் பல இடங்களில் படித்திருக்கிறேன்.<BR/><BR/>'அச்சு அசலாக' என்பது தவறுதான். உயர்வு நவிற்சியாகக் கூட அது பொருந்தவில்லை. ஏனெனில் இசை என்ற கட்டுக்குள் அதே பொருள் தருகின்ற தமிழ்ச் சொற்களைப் போட்டு அதே பாடலுணர்வும் வரவேண்டுமென்பது மிகக் கடினம். முக்கியமாக தெலுங்குக் கீர்த்த்னைகள் அளவுக்கு செங்கிருதச் சொற்களை தமிழிசைப் பாடல்களில் நான் கண்டதில்லை. தெலுங்குக் கீர்த்தனைகளில் பெருமளவில் செங்கிருதச் சொற்கள் இருக்கின்றன. <BR/><BR/>ஜடாயுவின் கண்டனம் எனக்கு ஏற்புடையதில்லை. அவர் சொல்லும் ஸ்வராட்சரமெல்லாம் மொழியாக்கப் பாடல்களில் எதிர்பார்ப்பது எவ்வகையில் சரி?<BR/><BR/>ஜிரா சரியாகச் சொல்லியிருக்கிறார்.ஓகைhttps://www.blogger.com/profile/01365297775457332565noreply@blogger.comtag:blogger.com,1999:blog-36268584.post-14907782556477247122007-05-01T00:47:00.000-05:002007-05-01T00:47:00.000-05:00பாவேந்தரின் பிறந்த நாளை ஒட்டி, அவர் மொழிபெயர்த்த த...பாவேந்தரின் பிறந்த நாளை ஒட்டி, அவர் மொழிபெயர்த்த தியாகராச கீர்த்தனைகளைச் சுட்டி, ஓர் இணக்கநிலையை உருவாக்க முயன்ற உங்கள் இடுகைக்கு நன்றி. எல்லாவிடத்தும் வலைத் தமிழ்க் குமுகத்தைப் பிரித்து, கிடாச் சண்டை போடச் சிலர் முயன்று கொண்டிருக்கும் நேரத்தில் உங்களின் இணக்கச் செய்கை போற்றத் தகுந்தது. <BR/><BR/>பாவேந்தர் - தியாகராச கீர்த்தனை பற்றிய செய்தியை என்னுடைய தமிழிசை - ஒரு பார்வை என்ற இடுகையில் (மொத்தம் 4 பகுதி) குறித்திருக்கிறேன். ஒருமுறை படித்துப் பாருங்கள். தியாகராசர் கீர்த்தனைகள் சிலவற்றைப் பாவேந்தர் தமிழாக்கம் செய்த நிகழ்வைப் பலரும் வெவ்வேறு காலத்தில் பதிவு செய்திருக்கிறார்கள். (காட்டாகப் புலவர் இளங்குமரன் தன்னுடைய "தமிழிசை இயக்கம்" என்ற பொத்தகத்தில் பதிவு செய்திருப்பார்.) <BR/><BR/>பாவேந்தர் நடந்து வந்த பாதை நெடுந்தொலைவு உள்ளது. பாரதியின் மறைவிற்கு அப்புறம், நம்பா மதத்திற்கு வந்து சேர்ந்த பின்னாலும் கூட, நண்பர்கள் கேட்டுக் கொண்டதற்காக, பல பத்திப் பாடல்களை பாவேந்தர் பாடியிருக்கிறார். அவர் புரட்சிக் கவிஞராய் அறியப் பட்ட பிறகு தான், இதைப் பாடினார். அப்படிப் பாடியது ஒன்றும் வியப்பானது இல்லை. இந்த நிகழ்வு நடந்தது 1935ம் ஆண்டு ஆகும். பாவேந்தரின் வரலாறு தெரியாமல், அவர் ஆக்கங்களைப் பரவலாய்ப் படிக்காமல், இங்கே ஒருவர் செய்தது போல, முட்டாள் தனமாகப் புறம் கூறி அவர் பெருமையைக் குலைப்பது பலகாலம் நடந்திருக்கிறது. இவர்களுக்கெல்லாம் நாம் சொல்லி ஒன்றும் தெரியப் போவதில்லை. ஏதொன்றையும் குல நோக்கிலும், காவியாடி வழியேயும் பார்த்தே பழக்கப் பட்டவர்கள், காழ்ப்பும், குல உயர்ச்சியும் தொனிக்க இப்படி எழுதிக் கொண்டுதான் இருப்பார்கள். "இணக்கமாய் யாரேனும் ஒருவர் நிகழ்வுகளையும் செய்திகளையும்" கூறினால் இவர்களுக்குப் பொறுக்கவே பொறுக்காது. "நாங்கள் எப்பவுமே தனி; நீ எவ்வளவு முட்டினாலும் நாங்கள் இருக்கும் இடத்திற்கு நீ எம்பவே முடியாது; எனவே இருக்கும் இடத்தில் நீ இருந்து கொள்" என்று பொருள்பட, மாற்றாரைத் தட்டிக் கொண்டே இந்துத்துவம் பேசுவதில் இவர்களை மிஞ்ச யாரும் கிடையாது. இவர்களின் சொல்லுக்குச் சொல் நாம் மறுமொழித்துக் கொண்டு இருக்கலாம். ஆனால், அது கொஞ்ச நேரத்தில் சலித்துப் போகும்; நம் உருப்படியான வேலையைத் தொலைப்பதாய் ஆகிப் போய்விடும். மேலும் அவை நாகரிகத்தில் அது பொருந்தாது போய் விடும். எனவே வேறு புலனத்தில் நாம் நகர்ந்து போவதே நல்லது. <BR/><BR/>பாவேந்தர் மொழிபெயர்த்த தியாகராசரின் பத்துக் கீர்த்தனைகளையும் படிக்க வேண்டுமானால், "பாவேந்தர் பாரதிதாசனின் பழம் புதுப்பாடல்கள்" என்ற நூலைப் பாருங்கள். அது முனைவர் இரா. இளவரசால் தொகுத்துப் 2005ல் பதிக்கப் பெற்றது. பாரதிதாசன் பல்கலைக் கழகத்தின் பாரதிதாசன் உயராய்வு மையத்தால் அந்தப் பொத்தகம் வெளியிடப்பெற்றது. (நீங்கள் தேடிக் கொண்டிருக்கும் முருகன் பாடலும் அதில் இருக்கிறது.) சுரம், அராகம், தாளம் ஆகியவற்றோடு தான் அந்த நூலில் சீர்த்தனைகள் கொடுக்கப் பட்டிருக்கின்றன. குறிப்பிட்ட பாடல்களை நானே இங்கு தட்டச்சித் தருவது முறையல்ல; அப்புறம் இது போன்ற நூல்களைப் பலரும் வாங்குவது குறைந்து போகும். தேடிப் பாருங்கள். கிடைக்காது போனால் சொல்லுங்கள், நான் தட்டச்சித் தருகிறேன். <BR/><BR/>முட்டாள் தனமாய்ச் சொன்ன நண்பர் ஏதேதோ வெற்று முழக்கச் சொற்களை (jargon) போட்டு, "வாக்கேயக்காரர் வேறு, கவிஞர் வேறு" என்று சொல்லியிருந்தார். அவருடைய முன்னிகையைப் (comment) படிக்கும் போது, கோவம் வருகிறது. முழு மறுமொழியைத் தவிர்க்கிறேன். <BR/><BR/>"வாக்கேயக் காரர்" என்றால் என்னவென்று இவருக்குத் தெரியுமோ? இப்படிச் சொற்களைக் கொட்டிப் பம்மிக் கொண்டிருந்தால் எப்படி? பழமை காப்பாற்றப் பட்டுவிடுமோ? மெட்டுக்குப் பாட்டுப் போடுவது வாக்கேயம்; அதாவது வாக்குப் போடுவது; சொல்லை இழைப்பது. (வாக்கேயம் என்பது தமிழ்த் தொடக்கும் வடமொழி முடிபும் கொண்ட சொல்.) வாக்கேயக்காரரைத் தான் பாட்டுக்காரன் என்று தமிழில் சொல்லுகிறோம். ஆங்கிலத்தில் lyricist என்று சொல்லுவார்கள். பாட்டுக்காரரும், இசை அமைத்தவரும், பாடகரும் வெவ்வேறு ஆளாகவும் இருக்கலாம், ஒரே ஆளாகவும் இருக்கலாம். <BR/><BR/>இசையமைத்தவனைப் பழந்தமிழில் பண்ணன் என்பார்கள் (composer என்ற சொல் இதற்குத் தான் பொருந்தும். அது பாட்டுக் காரனுக்குப் பொருந்தாது); பாடியவன் பாணன். பாடத் தெரியாமற் சொற்களை எழுதியவன் புலவன். (ஆனாலும் புலவனுக்குச் சந்தமும் இசையும் தெரியாமற் சொற்களைப் போடமுடியாது. இந்தக் காலத்துப் புதுக் கவிதை என்பது பாடல் அல்ல.) பரிபாடலைப் படித்தால் நான் சொல்ல வருவது புரியும். பாவேந்தர் பாரதிதாசன் ஆழ்ந்த தாள அறிவு கொண்டவர்; இசையறிந்தவர். எப்படிப் பார்த்தாலும் அவர் பாணரே. மணிப் பவளத்தில் சொல்ல வேண்டுமானால், அவர் ஒரு வாக்கேயக் காரரே. ஆனால் பண்ணராய் இருந்ததில்லை. <BR/><BR/>அன்புடன்,<BR/>இராம.கி.இராம.கிhttps://www.blogger.com/profile/08088989884913612849noreply@blogger.comtag:blogger.com,1999:blog-36268584.post-86007100366400641382007-04-30T22:35:00.000-05:002007-04-30T22:35:00.000-05:00இசை இன்பம் மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு துவங்கப்பட...இசை இன்பம் மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு துவங்கப்பட்ட இந்தப் பதிவுகளில் தேவையற்ற சர்ச்சை தவிர்க்கப்பட வேண்டியது.<BR/><BR/>இப்பாடலின் மூலம், தியாகராஜரின் பெருமைக்கு எந்தவொரு களங்கமும் கற்பிக்கப் படவில்லை.<BR/><BR/>புரட்சிக்கவிஞரின் தமிழாக்கம் இப்பாடலுக்கு...ஸாஹித்யத்திற்கு ... மேலும் சிறப்பையே அளித்திருக்கிறது!<BR/><BR/>மூலப்பாடலை அறிமுகப்படுத்தி, அதனைப் புரிய வைத்து, அப்பாடலையும் கற்றுக்கொள்ள, அல்லது கேட்க ஒரு ஆவலையே தூண்டிவிடுகிறது என்றால் மிகையில்லை.<BR/><BR/>தங்களது சீரான பணிக்கு என் வாழ்த்துகள் ரவி!VSKhttps://www.blogger.com/profile/14988197272523406250noreply@blogger.comtag:blogger.com,1999:blog-36268584.post-2726675700014296962007-04-30T22:11:00.000-05:002007-04-30T22:11:00.000-05:00This comment has been removed by the author.VSKhttps://www.blogger.com/profile/14988197272523406250noreply@blogger.comtag:blogger.com,1999:blog-36268584.post-50289130152612398032007-04-30T21:18:00.000-05:002007-04-30T21:18:00.000-05:00//துளசி கோபால் said... இது ரெண்டு புத்தகமா வந்துரு...//துளசி கோபால் said... <BR/>இது ரெண்டு புத்தகமா வந்துருக்கு. என்னிடம் இருக்கு. யாருக்காவது எந்தப் பாட்டுக்காவது 'பொருள்'<BR/>வேணுமுன்னாச் சொல்லுங்க.//<BR/><BR/>டீச்சர். ஐ ஆம் தி வெயிட்டிங்...<BR/>அடுத்த பல பதிவுகளுக்குத் தேவைப்படுமே! நன்றி!<BR/>ஹூம்..."பொருள்" வைத்துள்ள உங்களிடமே இசை இன்பத்தை ஒப்படைத்தால் என்னன்னும் யோசிக்கிறேன்! :-)Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-36268584.post-52788405901541110412007-04-30T21:15:00.000-05:002007-04-30T21:15:00.000-05:00// இராமநாதன் said... முதல் தடவையாக கேள்விப்படுகிறே...// இராமநாதன் said... <BR/>முதல் தடவையாக கேள்விப்படுகிறேன்.<BR/>தகவலுக்கும் பாடலுக்கும் நன்றி... //<BR/><BR/>வாங்க மருத்துவரே!<BR/>நானும் முதல் முறையாகத் தான் இதைக் கேள்விப்பட்டேன்...உடனே இட்டேன்!Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-36268584.post-49049334902651758142007-04-30T21:13:00.000-05:002007-04-30T21:13:00.000-05:00//ஷைலஜா said... பாரதிதாசன் பாடலை மருகேலரா போலவே பா...//ஷைலஜா said... <BR/>பாரதிதாசன் பாடலை மருகேலரா போலவே பாடிப்பார்த்தேன் ஓரளவு நன்றாகவே வருகிறது//<BR/><BR/>ஆகா...நீங்க சொன்னாச் சரி தான்..<BR/>நன்றி ஷைலஜா!Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.com