tag:blogger.com,1999:blog-362685842024-02-18T21:34:37.592-05:00இசை இன்பம்இசையின் ஸ்வரங்கள் தேனா?<br>
இசைக்கும் குயில் நீ தானா?<br>Kannabiran, Ravi Shankar (KRS)http://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comBlogger59125tag:blogger.com,1999:blog-36268584.post-33234631405714299502010-05-26T19:04:00.004-05:002010-06-29T20:53:03.470-05:00இசையின் அங்கங்களும் ரசிகசிகாமணி கந்தனும்இசை ரசனை எல்லோருக்கும் உண்டு.<br />உங்களுக்கும், எனக்கும், ஏன் என்னப்பன் குமரக்கடவுளுக்கும் கூடத்தான்!<br /><br />குமாரசாமியின் இசை ரசனைக்கு, 'ரசிகசிகாமணி' என்றொடு பட்டம் கொடுத்த பாடல் ஒன்று உள்ளது. நாம் இங்கே பார்க்கவிருக்கும் அப்பாடல் கோடீஸ்வரஐயரால் இயற்றப்பட்டது. இவர் 72 மேளகர்த்தா இராகங்களிலும் பாடல்களைப் புனைந்த பெருமை பெற்றவர். இவரைப் பற்றிய குறிப்புகளை முன்பொருமுறை என் வாசகத்தில் பார்த்திருக்கிறோம் <a href="http://jeevagv.blogspot.com/2008/07/blog-post.html">இங்கே</a>. இப்பாடல், 62வது மேளகர்த்தா இராகமாகிய ரிஷபப்பிரியா இராகத்தில் அமைந்துள்ளது. இவரது மற்ற பாடல்களைப் போலவே, இந்த பாடலிலும் இராக முத்திரையினைக் காணலாம். மேலும் 'கவி குஞ்சரதாசன்' எனப்பாடல் இயற்றியவர் முத்திரையினையும் காணலாம்.<br /><br /><span style="font-weight: bold;">எடுப்பு</span><br /><span style="color: rgb(0, 0, 153); font-weight: bold;">கன நய தேசிக கானரசிக சிகாமணி நீயே கந்தா</span><br /><span style="color: rgb(0, 0, 153); font-weight: bold;">எனக்கருள் நீயே தினம்</span><br /><br /><span style="font-weight: bold;">தொடுப்பு</span><br /><span style="color: rgb(0, 153, 0); font-weight: bold;">கனிநய சொல்பொருள் கனகம்பீரம்</span><br /><span style="color: rgb(0, 153, 0); font-weight: bold;">இனிய சுருதியோடு இயை லய தீர</span><br /><br /><span style="font-weight: bold;">முடிப்பு</span><br /><span style="font-weight: bold; color: rgb(204, 51, 204);">ஸட்ஜ ரிஷபப்பிரிய காந்தார மத்யம</span><br /><span style="font-weight: bold; color: rgb(204, 51, 204);">பஞ்சம த்வைத நிஷாத வித</span><br /><span style="font-weight: bold; color: rgb(204, 51, 204);">சப்தஸ்வர சங்கீத கவி குஞ்சரதாசன்</span><br /><span style="font-weight: bold; color: rgb(204, 51, 204);">அனவரதம் தரும் நின்னருள் மய</span><br />-----------------------------<br />* பாடலை M.L.வசந்தகுமாரி அவர்கள் பாடிட <a href="http://ww.smashits.com/player/flash/flashplayer.cfm?SongIds=6636">இங்கு</a> கேட்கலாம்.<br />* சஞ்சய் சுப்ரமணியம் அவர்கள் பாடிட <a href="http://itunes.apple.com/us/album/gananayaka-desika/id19980323">இங்கு</a> கேட்கலாம்.<br />-----------------------------<br />"கன, நய, தேசிக" என்பது மூன்று விதமான இராகப் பிரிவுகளைக் குறிப்பதாகும்.<br />இதுபோன்ற மூன்று விதமான இராகப் பிரிவுகளையும் ரசிக்கும் ரசிகசிகாமணியாம் கந்தன்! கலைமாமணி பட்டத்திற்கு ஏங்கும் கலைஞர்கள் ஒருபுறமிருக்க, கந்தன் மட்டும் இசை விரும்பும் ரசிகனாகவே இருக்கிறான்!!!:-)<br /><br />ஒரு பாடல் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கான இலக்கணத்தினைச் சொல்லும் பாடலிது!<br /><br /><span style="font-weight: bold;">என்னவெல்லாம் இருக்கும்?:</span><br />சொல்<br />பொருள்<br />சுருதி<br /><br /><span style="font-weight: bold;">எப்படியெல்லாம் இருக்க வேண்டும்?</span><br />சொல்லிலும் பொருளிலும் - கனிநயம் நிறைந்திருக்க வேண்டும். <br />அது கேட்போரை இழுக்கும் வகையில் கம்பீரமாக இருக்க வேண்டும்.<br />இனிமையான சுருதியினைக் கொண்டிருக்க வேண்டும்.<br />இவையெல்லாம் ஒன்றோடு ஒன்று இயல்பாக கலந்திருக்க வேண்டும்.<br /><br />சப்த சுரங்களான ஷட்ஜம், ரிஷபம், காந்தாரம், மத்யமம், பஞ்சமம், தைவதம் மற்றும் நிஷாதம் - ஆகியவற்றின் சஞ்சாரங்களில் அமையப்பெற்ற இசையென்னும் இனிமை ததும்பும் சங்கமத்தில், குஞ்சரகவி'யின் தாசனாகிய அடியேன் 'குஞ்சரதாசன்', எப்பொழுதும் பாடிப்புகழுவது யாதெனில், குன்று தோறும் வளரும் குமரக் கடவுளின் குன்றா அருள்தனையேயாம்.<br /><br />"கனிநயம்": <br />சொல்லும் சொல்லதில் *கனி*யிருத்தி, காய் விலக்கிடுவீர் என்பார் வள்ளுவர். <br />கனிவான சொற்புழக்கம் கனியான சொல்லினைத் தரும்.<br />அக்கனியோடு சேரும் நயம், பூவோடு சேரும் நார் போல. பூவினைத் தாங்கித் திகழச் செய்யும் மறைபொருள் போலே. <br />நயமெனில் யாது?<br />நன்மை பயக்கும் யாதும் நயமென இயம்பும் நாலடியார்.<br />கனிவான சொல்லினை புழங்கும் பாங்கினை கனிநயம் என்போம்.<br />கனிநயத்தில் அன்பும், அருளும் மிளிரட்டும். அது குமரனருளைப் பாடட்டும்.<br /><br />--------------------------------------------------<br />இந்தப் பாடலைப் பார்க்கும்போது, தியாகராஜரின் ஆரபி இராக 'நாதசுதாரசம்' கிருதியும் நினைவுக்கு வருவதை தவிர்க்க இயலாதது. அப்பாடலில் அவர் சொல்லுவதாவது:<br /><br />வேத புராண ஆகம சாஸ்திரங்களுக்கு ஆதாரமான <br />நாதமே இராமன் என்ற பெயரில் மனித உருவானது.<br /><br />"சுரங்கள் ஏழும் இராமனின் திருமேனியில் மணிகளாகவும்<br />இராகம் அவனது கோதண்டமாகவும்<br />கன, நய, தேசிகம் ஆகிய பிரிவுகள் நாணின் முப்பிரிகளாகவும், ரஜஸ், தமஸ், சத்வம் எனும் முக்குணங்களாகவும்,<br />கதிகள் அம்புகளாகவும் அமையப்பெற்றுள்ளது" <br />என்றெலாம் இசையின் அங்கங்களை, தனது மனம் விரும்பும் மகாபுருஷனிடம் கண்டு களிக்கிறார்.<br />---------------<br />இப்பாடலை, ராதா ஜெயலக்ஷ்மி அவர்கள் பாடிட இங்கு கேட்கலாம்:<br /><div style="padding:5px;background-color:#D3D3D3"><object classid="clsid:D27CDB6E-AE6D-11cf-96B8-444553540000" codebase="http://download.macromedia.com/pub/shockwave/cabs/flash/swflash.cab#version=7,0,19,0" name="raaga_swf" width="300" height="250"><param name="movie" value="http://www.raaga.com/player4/std-embed/embed-pl.swf" /><param name="flashvars" value="idsnew=200893&mode=100&q=1" /><param name="quality" value="high" /><param name="wmode" value="transparent" /><embed play="false" swliveconnect="true" id="raagaswf" wmode="transparent" name="raagaswf" src="http://www.raaga.com/player4/std-embed/embed-pl.swf" quality="high" bgcolor="#000000" width="300" height="250" type="application/x-shockwave-flash" flashvars="idsnew=200893&mode=100&q=1"></embed></object></div><br /><br />கத்ரி கோபால்நாத் அவர்களின் சாக்ஸபோனில் இப்பாடலிசை தவழ்வதை <a href="http://www.musicindiaonline.com/#/album/11-Classical_Carnatic_Instrumental/3746-Kadri_Gopalnath/">இந்த பாடல் தொகுதியில் இருந்து</a>கேட்கலாம்.jeevagvhttp://www.blogger.com/profile/02747964167117423246noreply@blogger.com7tag:blogger.com,1999:blog-36268584.post-72646695927787767962009-12-15T22:46:00.007-05:002009-12-16T03:52:17.967-05:00ஒரு சர்வாதிகாரியின் சிம்பொனிசின்ன வயசுல ஓடியாடித் திரிஞ்ச காலத்துல, எங்க வயக்காடுகளில், அப்புறம் ஸ்கூல் லீவுல பசங்களோட காட்டுக்கு மாடு மேய்க்கப் போன சமயங்கள்ல, இந்த இசையமைப்புக்களை பல முறை கேட்டுருக்கேன். <br /><br />அப்பல்லாம் அதோட அருமையும் பெருமையும் புரியல.<br />புரிய வந்த சமயத்துல... படுக்கையே வாழ்வாகிப் போச்சு. (I am telling the fact.! yaar!!! Not feelings of India!!!!!!! ) <br /><br />இப்பவும் இந்த மாதிரி இசை, திடீர்னு பக்கத்துல எங்கயாச்சும் கேக்கற சந்தர்ப்பத்துல மெய்மறந்து, கேக்க ஆரம்பிச்சிடுவேன். <br /><br />நான் சொல்றதுக்கு முன்னாடியே, அந்த சர்வாதிகாரி யாருன்னு புரிஞ்சுட்டு இருப்பீங்களே...!<br /><br />பிரபஞ்ச மகாசக்தி என்கிற, கடவுள் என்கிற , இன்னும் கணக்கில்லாத என்கிற-க்களைப் போட்டாலும்... அந்த எல்லாம் வல்ல சர்வாதிகாரிக்கு நம்மால பெயர் வைக்க ஏலுமோ? ஹ்ம்.<br /><br />What an Orchestration? <br />எத்தினி இசையமைப்பாளர்கள் இணைஞ்சாலும் இப்படி ஒரு சிம்பொனி பண்ண முடியுமோ?<br /><br />ஒகே! மக்களே... கேட்டுப்- பாஆஆருங்க!<br /><br />(முடிஞ்சா ஹெட்போன் மாட்டிட்டு)<br /><br /><object width="425" height="344"><param name="movie" value="http://www.youtube.com/v/rL4Z9d9oObY&hl=en_US&fs=1&"></param><param name="allowFullScreen" value="true"></param><param name="allowscriptaccess" value="always"></param><embed src="http://www.youtube.com/v/rL4Z9d9oObY&hl=en_US&fs=1&" type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="true" width="425" height="344"></embed></object><br /><br />இதோ இன்னொண்ணு.<br /><br /><object width="425" height="344"><param name="movie" value="http://www.youtube.com/v/mSB71jNq-yQ&hl=en_US&fs=1&"></param><param name="allowFullScreen" value="true"></param><param name="allowscriptaccess" value="always"></param><embed src="http://www.youtube.com/v/mSB71jNq-yQ&hl=en_US&fs=1&" type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="true" width="425" height="344"></embed></object><br /><br />இம்மாதிரி இசை யாராவது வச்சுருந்தா... எனக்கு அனுப்பி வைக்க முடியுமா...?<br /><br />-------------------------------------------------------------------------------------<br /><br /><br /><br />அப்புறம் எனக்குப் பிடிச்ச இன்னொரு இசை. உலகம் தோன்றுமுன்பாக இது தோன்றியதாக சொல்றாங்க. இதைக் கொஞ்ச நேரம் கேட்டீங்கன்னா, ஆட்டோமேட்டிக்கா..., தியான நிலைக்குப் போயிடுவீங்க. <br /><br />இது பத்தி சொல்ல நிறைய்ய்ய இருக்கு. <br />ஒற்றைக் கையினால் ரொம்ப தட்டச்ச முடியாத காரணத்தால....<br />தவிரவும் என்னைவிட இந்த topic- ஐ அவர் எழுதினா நல்லா இருக்குமென்கிற காரணத்தால...<br /><br />இதன் அருமை பெருமைகளை பட்டியலிட்டு ஒரு தனிப் பதிவாக இடுமாறு நம்ம மகாவிஷ்ணு-கே. ஆர். எஸ்- கிட்ட வேண்டிக்கறேன். (ஏற்கெனவே இட்டிருந்தா சுட்டி கொடுங்க)<br /><br />இசை கேக்கலாமா????<br /><br /><object width="425" height="344"><param name="movie" value="http://www.youtube.com/v/Jas1d_inzMg&hl=en_US&fs=1&"></param><param name="allowFullScreen" value="true"></param><param name="allowscriptaccess" value="always"></param><embed src="http://www.youtube.com/v/Jas1d_inzMg&hl=en_US&fs=1&" type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="true" width="425" height="344"></embed></object><br /><br />-------------------------------------------------------------------------------------<br /><br /><br />இதுவும் தியானத்துக்கு உதவும். <br /><br />காயத்ரி கோவிந்தராஜன் அவர்களின் வீணை..... அடடா.... என்னமாய்த் தாலாட்டுது...!<br /><br />கேளுங்க..! கேளுங்க..! கேட்டுக்கிட்டே இருங்க.<br /><object width="560" height="340"><param name="movie" value="http://www.youtube.com/v/QUeMuFa0VSM&hl=en_US&fs=1&"></param><param name="allowFullScreen" value="true"></param><param name="allowscriptaccess" value="always"></param><embed src="http://www.youtube.com/v/QUeMuFa0VSM&hl=en_US&fs=1&" type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="true" width="560" height="340"></embed></object>+Ve Anthony Muthuhttp://www.blogger.com/profile/03316912421055901645noreply@blogger.com15tag:blogger.com,1999:blog-36268584.post-23649790873098645792009-05-09T08:46:00.004-05:002009-05-09T09:45:58.578-05:00உளறினாலும் அழகிய பாட்டு வருமா?ரொம்ப நாள் ஆச்சு இசை இன்பத்துல பதிவு போட்டு.. ( என்னோட ப்ளாக்ல கூட பதிவு போட்டு ரொம்ப நாள் ஆனது வேற கதை)... ஏர்டல் சூப்பர் சிங்கர் எத்தனை பேரு பார்கறீங்கனு தெரியாது ... என்னை மாதிரி ஆளுங்க பாட தெரியாததுனால இந்த மாதிரி நிகழ்ச்சி எல்லாம் நல்ல பார்பாங்கனு நினைக்கிறேன் .. அதை பார்த்ததுனால வந்த வினை தான் உங்களுக்கு எல்லாம் இந்த பதிவு.. (விதி யாரை விட்டுது).. சரி சரி விஷயத்துக்கு வரேன்.. <br /><strong>ஹரிஹரன்</strong> சார் எப்படி பாடுவார்னு எல்லாருக்கும் தெரியும்.... அவரை கௌரவபடுத்தும் வகையில் அவர் பாடிய பாடல்கள் பாடனும்னு ஒரு சுற்று.. அதுல ஒருத்தர் பாடினது உதயா படத்துல வர "<strong>உதயா உதயா உள</strong>றுகிறேன்" பாட்டு மிக அருமையாக இருந்தது.. நீங்களும் கேளுங்களேன்.. <strong>சாதனா சர்கமும் </strong>சேர்ந்து பாடி இருக்காங்க. நான் மிகவும் ரசிச்ச பாட்டு.. கேட்டுட்டு உங்க கருத்துகளை சொல்லுங்களேன்..<br /><br />உதயா உதயா உளறுகிறேன்<br />உயிரால் உனையே எழுதுதிறேன் <br />காதல் <br /><br />காதல் ...தீண்டவே .... காதல் ...தீண்டவே <br />கடல் தாகம் தீர்ந்ததே <br />உன்னாலே தன்னாலே <br />உதயா உதயா உளறுகிறேன்<br />உயிரால் உனையே எழுதுதிறேன் <br />காதல் காதல் காதல்<br /><br />உன் பாதி வாழ்கிறேன் <br />என் பாதி தேய்கிறேன் <br />உன்னாலே தன்னாலே <br />என்னாளும் ...<br />உதயா உதயா உளறுகிறேன்<br />உயிரால் உனையே எழுதுதிறேன் <br />காதல் காதல் காதல்<br /><br />என்னை தொலைத்துவிட்டேன்<br />ஏன் உன்னை அடைந்துவிட்டேன் <br />உன்னை அடைந்ததனால் <br />என் என்னை தொலைத்துவிட்டேன் <br />ஏனோ ஏனேனோ தொலைந்தே நீந்தேனோ <br />ஏனோ ஏனேனோ மீண்டும் தொலைவேனோ <br />ஆயுள் ஆனவளே<br />உன் கூந்தல் இருட்டில் என் கிழக்கு தொலைந்தும் <br />காதல்...தீண்டவே <br />மூச்சின் குழிகளிலே ... உயிர் ஊற்றி அனுப்பிவைத்தேன் <br />கூச்சம் வருகையிலே ...உடல் மாற்றி நுழைந்துவிட்டேன் <br />ஏனோ ஏனேனோ ஏதோ ஆனேனோ <br />ஏனோ ஏனேனோ நீயாய் ஆனேனோ <br />தாயுமானவனே <br />என் நெற்றி பாலையில் ஊற்றை திறந்து <br />காதல்...<br />காதல். ..தீண்டவே... காதல்...தீண்டவே<br />கடல் தாகம் தீர்ந்ததே <br />உன்னாலே தன்னாலே <br />உயிரே உயிரே உளறுகிறேன்<br />உளறியும் கவிதைகள் எழுதுகிறேன்<br /><br />உதயா உதயா உளறுகிறேன்<br />உயிரால் உனையே எழுதுகிறேன் <br />காதல் ...காதல் ...<br /><br /><object width="425" height="344"><param name="movie" value="http://www.youtube.com/v/tyklQRnTFo0&hl=en&fs=1"></param><param name="allowFullScreen" value="true"></param><param name="allowscriptaccess" value="always"></param><embed src="http://www.youtube.com/v/tyklQRnTFo0&hl=en&fs=1" type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="true" width="425" height="344"></embed></object>dubukudisciplehttp://www.blogger.com/profile/13770296346603971106noreply@blogger.com6tag:blogger.com,1999:blog-36268584.post-2403797854333263862008-12-30T08:49:00.001-05:002010-03-01T14:49:53.508-05:00தமிழிசை வரலாறு - 5 - சிலப்பதிகாரம் முதல் சிவன் வரைஇத்தொடரின் இறுதிப் பகுதியினை எட்டி விட்டோம். இந்தப் பகுதியில் சென்ற மூன்று நூற்றாண்டுகளில் தமிழிசைப் பாடல்களை இயற்றிய அருந்தமிழ்க் கவிகளின் பாடல்கள் சிலவற்றை திருமதி. சௌம்யா அவர்கள் பாடிக் காட்டுகிறார்.<br /><br /><span style="font-weight: bold;">9. இராம நாடகம்</span><br />இயற்றியவர் : அருணாசலக் கவிராயர் (1711-1779)<br />பாடல் : <a href="http://www.musicindiaonline.com/p/x/WJC2zDq-AS.As1NMvHdW/">ஏன் பள்ளி கொண்டீரய்யா, ஸ்ரீரங்கநாதா!</a><br />இராகம் : மோகனம்<br /><br />அருணாசலக் கவிராயரைப் பற்றி ஏற்கனவே இட்ட பதிவினை <a href="http://jeevagv.blogspot.com/search/label/%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF">இங்கே </a>பார்க்கவும்.<br /><br /><span style="font-weight: bold;">10. மாரிமுத்தாப்பிள்ளை</span> (1712 - 1787)<br />பாடல் : காலைத் தூக்கி நின்றாடும் தெய்வமே<br />இராகம் - யதுகுலகாம்போதி<br /><br /><span style="font-weight: bold;">11. முத்துத்தாண்டவர்</span> (1560(?) - 1640(?))<br />பாடல் : இத்தனை துலாபாரமாய்<br />இராகம்: தன்யாசி<br /><br />பாடல்: ஆடிக்கொண்டார் அந்த வேடிக்கை காண கண் ஆயிரம் வேண்டாமோ!<br />இராகம் : மயாமாளவகௌளை<br /><br />மாரிமுத்தாப்பிள்ளை மற்றும் முத்துத்தாண்டவர் அவர்கள் இருவரைப் பற்றிய பதிவினை <a href="http://jeevagv.blogspot.com/2008/07/blog-post_31.html">இங்கே </a>பார்க்கவும்.<br /><br />இவர்கள் மூவரும் - தமிழ் மூவர் என தமிழ் இசை அறிஞர்களால் பெருமைப்படுத்தப் பட்டவர்கள். தமிழில் கிருதி வடிவினை (பல்லவி - அனுபல்லவி - சரணம் என்ற பாடல் வடிவு) அறிமுகப் படுத்தியவர்கள்.<br /><br /><span style="font-weight: bold;">12. கோபால கிருஷ்ண பாரதி</span> (1811 - 1896)<br />பாடல் : யாருக்குத்தான் தெரியும், அவர் மகிமை<br />இராகம் : தேவமனோகரி<br />இவர் இயற்றிய நந்தனார் சரித்திரக் கீர்த்தனைகள் மிகவும் பிரசிதம். ஆழ்ந்த தத்துவப் பொருள் நிறைந்தவை இவரது பாடல்கள். மேலும் இரண்டு நாயன்மார்கள் (நீலகண்ட நாயனார், காரைக்கால் அம்மையார்) சரித்திரங்களையும் படைத்துள்ளார்.<br /><br /><span style="font-weight: bold;">13. அண்ணாமலை ரெட்டியார்</span> (1865-1891)<br />இவரது காவடிச் சிந்து பாடல்கள் மிகவும் பிரபலம். 'காவடிச் சிந்தின் தந்தை' எனவே இவரை அழைக்கலாம்!. 'சென்னிகுளம்' என்ற இவரது ஊர்ப்பெயரை, இவரது பாடல்களில் காணலாம். இவர், தமது, 26ஆவது, வயதிலேயே இறந்தார் என்பது வருத்தத்திற்குரிய இழப்பாகும்.<br /><br />இசைத்தமிழின் இனிதானதொரு அங்கம் சிந்து. பாடுவதற்கு எளிதானது. இதில் ஐந்து பகுதிகள் அடங்கும் : பல்லவி, அனுபல்லவி, பின்பு மூன்று கண்ணிகள் கொண்ட சரணம். காவடிச் சிந்து, என்பது, சிந்தில் ஒருவகை. இதில் பல்லவியும், அனுபல்லவியும் இல்லாமல், சரண வரிகள் மட்டுமே.<br /><br />பாடல் : பூமி மெச்சிடும் (காவடிச்சிந்து)<br />இப்பாடலின் இருந்து மூன்று கண்ணிகள்:<br /><div style="text-align: center; color: rgb(0, 0, 153);">பூமி மெச்சிடும் அண்ணாமலைக்கோர் துணையானவன்<br />மயில் வாகனன், ஒரு கானவன் - எனப்<br />புனத்தைக் காக்கும் வள்ளி<br />தனத்தைப் பார்க்க மெல்லப் போனவன்.<br /><br />தென்றலான புலி வந்து கோபமொடு சீறுதே<br />தடுமாறுதே; இதழ் ஊறுதே - மெத்தத்<br />தீமையாம் இருளினில்<br />காமலாகிரியும் மீறுதே.<br /><br />மார வேளினாலே கோர மனகாம் வாதையே<br />எனும் தீதையே தீரத் தூதையே! - சொல்லி<br />வாட்டம் தீர் குகனைக்<br />கூட்டி வாடியடி கோதையே!<br /></div><br />(இப்பாடல் 5:40 இல் தொடங்குகிறது)<br /><object height="344" width="425"><param name="movie" value="http://www.youtube.com/v/WFErOmPkzbg&hl=en&fs=1"><param name="allowFullScreen" value="true"><param name="allowscriptaccess" value="always"><embed src="http://www.youtube.com/v/WFErOmPkzbg&hl=en&fs=1" type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="true" height="344" width="425"></embed></object><br /><br /><span style="font-weight: bold;">14. பாபநாசன் சிவன்</span> (1890 - 1973)<br />'தமிழ் தியாகராஜர்' எனப் போற்றப் படும் பாபநாசம் சிவன் அவர்கள், நிறைய தமிழ்ப் பாடல்களை, மூம்மூர்த்திகள் போல, தமிழுக்கு இயற்றித் தந்தவர்கள். மூம்மூர்த்திகளின் பாதிப்பால், மற்ற திராவிட மொழிப் பாடல்களே, தென்னிந்திய இசையில் பிரபலமாகி இருந்தது. தமிழிலும் அதைப்போன்ற கீர்த்தனைகளைப் பாடிட முடியும் என்பதை நிரூபித்திக் காட்டியவர். கிருதி, வர்ணம், பதம், ஜவளி என பற்பல இசை வடிவங்களிலும், பற்பல இராகங்களிலும் தமிழில் இசைத்துக் காட்டிய பெருமை இவரைச் சாரும்.<br /><br />பாடல் : <a href="http://www.musicindiaonline.com/p/x/QJI2QXppXt.As1NMvHdW/">கஜவதனா கருணாசதனா</a><br />இராகம் : ஸ்ரீரஞ்சனி<br /><br /><div style="text-align: center;"><span style="font-weight: bold;">எடுப்பு</span><br /></div><div style="text-align: center; color: rgb(153, 51, 153); font-weight: bold;">கஜவதனா கருணா சதனா<br />சங்கரபாலா லம்போதர சுந்தர -<br />ஸ்ரீ கஜவதனா கருணா சதனா<br /></div><br /><div style="text-align: center;"><span style="font-weight: bold;">தொடுப்பு</span><br /></div><div style="text-align: center; color: rgb(153, 0, 0);"><span style="font-weight: bold;">அஜனமரேந்திரனும் முனிவரும் பணியும்</span><br /><span style="font-weight: bold;">பங்கஜ சரணா, சரணம் சரணம்!</span><br /></div><br /><div style="text-align: center;"><span style="font-weight: bold;">முடிப்பு</span><br /></div><div style="text-align: center; color: rgb(0, 153, 0);"><span style="font-weight: bold;">நீயே மூவுலகிற்கு ஆதாரம்</span><br /><span style="font-weight: bold;">நீயே சிவாகம மந்திர சாரம்</span><br /><span style="font-weight: bold;">நீயே வாழ்வில் என் ஜீவாதாரம்</span><br /><span style="font-weight: bold;">நீயருள்வாய் சுமுகா, ஓம்கார</span><br /><span style="font-weight: bold;">கஜவதனா கருணா சதனா!</span><br /></div><br /><span style="font-weight: bold;">15. மகாகவி பாரதி</span> (1882 - 1921)<br />பாடல்: வாழிய செந்தமிழ்<br /><br /><div style="text-align: center;"><span style="color: rgb(51, 51, 255);">வாழிய செந்தமிழ்! வாழ்கநற் றமிழர்!</span><br /><span style="color: rgb(51, 51, 255);">வாழிய பாரத மணித்திரு நாடு!</span><br /><span style="color: rgb(51, 51, 255);">வந்தே மாதரம்! வந்தே மாதரம்!</span><br /></div><br />(இதைவிடவும் இனிதாக நிறைவு செய்ய இயலுமோ!, அழகாக திருமதி.சௌம்யா அவர்கள் நிறைவு செய்தார், இவ்வாறாக, 'சிலப்பதிகாரம் முதல் சிவன் வரை' என்ற தலைப்பிட்ட இந்நிகழ்ச்சியை.)<br />இப்படியொரு அருமையான நிகழ்ச்சியை வழங்குவதற்கான மூல காரணம், அவருக்கு அமைந்த அருமையான குரு - டாக்டர் எஸ்.இராமநாதன் அவர்கள் மற்றும் திருமதி.முக்தா, அவர்களை இங்கே குறிப்பிடுகிறார். குறிப்பாக இராமநாதன் அவர்களின் சிலப்பதிகார இசை ஆராய்ச்சிகள், அவற்றில் இருந்து நாம் அறியக் கிடைக்கும் பண்டைத் தமிழரின் இசை நுணுக்கங்கள்.<br /><br /><object height="344" width="425"><param name="movie" value="http://www.youtube.com/v/D02udWy1ojs&hl=en&fs=1"><param name="allowFullScreen" value="true"><param name="allowscriptaccess" value="always"><embed src="http://www.youtube.com/v/D02udWy1ojs&hl=en&fs=1" type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="true" height="344" width="425"></embed></object>jeevagvhttp://www.blogger.com/profile/02747964167117423246noreply@blogger.com3tag:blogger.com,1999:blog-36268584.post-10593016450040087962008-12-27T10:11:00.001-05:002010-03-01T14:49:53.515-05:00தமிழிசை வரலாறு - 4 - திருவாசகமும் திருப்புகழும்இந்தத் தொடரில், திருமதி. சௌம்யா அவர்கள் 'சிலப்பதிகாரம் முதல் சிவன் வரை' என்ற தலைப்பில் தொகுத்து வழங்கிய பாடல்களைப் பார்த்து வருகிறோம். இந்தப் பகுதியில் திருவாசகம் மற்றும் திருப்புகழ்.<br /><br /><span style="font-weight: bold;">6. திருவாசகம்</span><br />ஏற்கனவே, சமயக் குரவர் நால்வரில், மூவரைப் பார்த்து விட்டோம். இப்போது நாம் பார்க்கவிருப்பது, நான்காவது நபர் - திருவாசகம் தந்து அன்பர் மனதை உருக்கிய மணிவாசகர்! மணிவாசகரின் காலத்தைப் பற்றி முரணான கருத்துக்கள் இருப்பினும், பொதுவாக அவர், 9 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவர் என கருதப் படுகிறது. சமயக் குரவர் நால்வரின் காலத்தைப் பற்றி மேலும் படிக்க <a href="http://www.thevaaram.org/thirumurai_1/ani/03naalvar3.htm">இந்தக்</a> கட்டுரையை நாடவும்.<br /><br />எட்டாம் திருமுறை<br />இயற்றியவர் : மணிவாசகர் (மாணிக்கவாசகர்)<br />இராகம் : மோகனம்<br /><br /><div style="text-align: center;"><span style="color: rgb(0, 51, 0); font-weight: bold;">பார்பாடும் பாதாளர்</span><br /><span style="color: rgb(0, 51, 0); font-weight: bold;"> பாடும்விண்ணோர் தம்பாடும்</span><br /><span style="color: rgb(0, 51, 0); font-weight: bold;">ஆர்பாடுஞ் சாரா</span><br /><span style="color: rgb(0, 51, 0); font-weight: bold;"> வகையருளி ஆண்டுகொண்ட</span><br /><span style="color: rgb(0, 51, 0); font-weight: bold;">நேர்பாடல் பாடி</span><br /><span style="color: rgb(0, 51, 0); font-weight: bold;"> நினைப்பரிய தனிப்பெரியோன்</span><br /><span style="color: rgb(0, 51, 0); font-weight: bold;">சீர்பாடல் பாடிநாம்</span><br /><span style="color: rgb(0, 51, 0); font-weight: bold;"> தெள்ளேணங் கொட்டாமோ. </span><br /></div><br /><br />இத்திருவாசகம் தன்னில், தன்னை ஆட்கொண்டு அருளிய சிவபெருமானின் நேர்மையையும், சிறப்பினையும் நாம் 'தெள்ளேணம்' கொட்டுவோம் என்கிறார் அருள் மணிவாசகர்.<br />பாடலின் பொருளை <a href="http://www.thevaaram.org/thirumurai_1/search_view.php?thiru=8&Song_idField=8111013&padhi=11">இங்கே</a> பார்க்கவும்.<br />அது என்ன 'தெள்ளேணம்'?<br />கைகளால் கும்மி அடித்துப் பாடுவோம் அல்லவா, அப்படிப் பாடுவது தான் 'தெள்ளேணம்'.<br />பண்டைத் தமிழர், குழல் வைத்துப் பாடினர், யாழ் வைத்து பாடினர், பறை முழக்கினர்,<br />ஏன் எந்த இசை வாத்தியமும் இல்லாமலும், தன் கைகளைத் தட்டியே, இசை எழுப்பினர்!<br />இவர், கைகள் மட்டுமல்லாமல், காலையும் தட்டுவர். அப்போது, காலில் அணிந்திருந்த கழலும் இசை எழுப்பும்!<br />இப்படியாக, நமது இசைக்கு, அன்றாட வாழ்வில் நிகழும் நாட்டுப்புறப் பாடலும் வளம் சேர்க்கும்.<br />~~~~~~~~~~~~~~~~<br /><span style="font-weight: bold;">7. திருப்புகழ்</span><br />சந்தங்களின் இமயம் அருளாளர் அருணகிரியின் திருப்புகழில் இருந்து அடுத்த பாடல். இப்பாடலை திருமதி.சௌம்யா அவர்கள், இரண்டு வேகத்திலும் பாடுவது அருமை. சந்தத்திற்கு இசைந்து வருவது போல், எத்தனை எத்தனை அருமையான சொல்லாடல்கள். புதுமையான சொற்களும், பழமையான் சொற்களும், புகுந்து விளையாடும் இவர் பாக்களில்.<br />தமிழால் திருப்புகழுக்கு பெருமையா, அல்லது, திருப்புகழால் தமிழுக்குப் பெருமையா எனப் பட்டிமன்றமே வைக்கலாம். முன்னது தொடக்கம், பின்னது முடிபு என்பேன் நான். இந்தப் பாடலின் தான் பாருங்களேன், எத்தனை மூன்றெழுத்துச் சொற்கள்! மூன்றெழுத்துல் என் மூச்சிருக்கும்?!<br /><br />இயற்றியவர் : அருணகிரி நாதர் (பதினைந்தாம் நூற்றாண்டு)<br />இராகம் : ஹமீர் கல்யாணி<br />தலம் : பழநி<br /><br /><div style="text-align: center; color: rgb(255, 0, 0);"><br /><span style="font-weight: bold;">தமரு மமரு மனையு மினிய</span><br /><span style="font-weight: bold;">தனமு மரசும் ...... அயலாகத்</span><br /><br /><span style="font-weight: bold;">தறுகண் மறலி முறுகு கயிறு</span><br /><span style="font-weight: bold;">தலையை வளைய ...... எறியாதே</span><br /><br /><span style="font-weight: bold;">கமல விமல மரக தமணி</span><br /><span style="font-weight: bold;">கனக மருவு ...... மிருபாதங்</span><br /><br /><span style="font-weight: bold;">கருத அருளி யெனது தனிமை</span><br /><span style="font-weight: bold;">கழிய அறிவு ...... தரவேணும்</span><br /><br /><span style="font-weight: bold;">குமர சமர முருக பரம</span><br /><span style="font-weight: bold;">குலவு பழநி ...... மலையோனே</span><br /><br /><span style="font-weight: bold;">கொடிய பகடு முடிய முடுகு</span><br /><span style="font-weight: bold;">குறவர் சிறுமி ...... மணவாளா</span><br /><br /><span style="font-weight: bold;">அமர ரிடரு மவுண ருடலு</span><br /><span style="font-weight: bold;">மழிய அமர்செய் ...... தருள்வோனே</span><br /><br /><span style="font-weight: bold;">அறமு நிறமு மயிலு மயிலு</span><br /><span style="font-weight: bold;">மழகு முடைய ...... பெருமாளே.</span><br /></div><br /><br />பாடலைக் கேட்டவாறு, பொருளைப் பார்க்கலாமா?<br />(பாடல் 0:40 இல் தொடங்குகிறது)<br /><object height="344" width="425"><param name="movie" value="http://www.youtube.com/v/WFErOmPkzbg&hl=en&fs=1"><param name="allowFullScreen" value="true"><param name="allowscriptaccess" value="always"><embed src="http://www.youtube.com/v/WFErOmPkzbg&hl=en&fs=1" type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="true" height="344" width="425"></embed></object><br /><br /><u>அருஞ்சொற்பதம்:</u><br /><span style="font-style: italic;">தமர் : சுற்றம்</span><br /><span style="font-style: italic;">தறு : கொடுமை, வன்மை</span><br /><span style="font-style: italic;">மறலி : காலன் (யமன்)</span><br /><span style="font-style: italic;">முறுகு : கடினம்; திண்ணிய</span><br /><span style="font-style: italic;">சமர் : போர்</span><br /><span style="font-style: italic;">குலவு : ஒளிர்ந்து</span><br /><span style="font-style: italic;">பகடு : வலிமையான; ஆண் யானை</span><br /><span style="font-style: italic;">முடுகு : விரைந்து</span><br /><span style="font-style: italic;">அவுணர் : அசுரர்</span><br /><span style="font-style: italic;">அமர் : போர்</span><br /><span style="font-style: italic;">அயில் : வேல்</span><br /><br />நம் குடும்பமும், உறவினர்களும், நண்பர்களுமாக சேர்ந்து வாழ்கிறோம். ஆக சுற்றத்தோடு வாழ்கிறோம். மேலும், பல பொருள் ஈட்டி, செல்வம் தனைச் சேர்த்து வாழ்கிறோம். மேலும், அவரவர், தமது தகுதிக்கேற்ப, மற்றவரை மேலாண்மை செய்து, ஆட்சியும் செய்து வருகிறோம்.<br /><br />சுற்றம், செல்வம், ஆட்சி - இந்த மூன்றும், நமக்கு அயலாகப் போவது எப்போது? அதாவது, நம்மை விட்டுப் போவது - கொடுமையான கூற்றுவன், தன் பாசக்கயிற்றைக் கொண்டு, நம் தலைக்குமேல் ஏறிந்து, சுருக்கிடும் பொழுது.<br /><br />அப்படிக் கூற்றுவன், அந்தக் கடினமான பாசக்கயிறை எறியாமல் இருக்க என்ன செய்ய?<br />தாமரை போன்று அழகானவனும், மாசற்ற, மரகதமணி மற்றும் தங்கத்தைப் போன்றவனுமான முருகனின் திருவடிகளை நினைத்துக் கொண்டிருக்க வேண்டும்.<br />அதற்கான அருளினை, குமரா, நீயே தரவேண்டும். உன்னைப்பிரிந்து வாடும் என் தனிமை அகலும் படியாக அறிவினைத் தர வேண்டும்.<br /><br />இங்கே கந்தனை நான்கு பெயர்களால் அழைத்து, பாடற்தலத்தினைச் சொல்லுகிறார்:<br />குமரா, சமரா (போர்வீரா), முருகா, பரமனே,<br />குலவும் - ஒளிர்ந்து, திகழ்ந்து விளங்கும் பழநிமலை தனில் உறைவோன் - என.<br /><br />அச்சுறுத்தும் யானையை, (வள்ளிக்காக) உன் செயல் முடிய, விரைந்து வரச் செய்தவனே,<br />அமரர்(தேவர்) துன்பங்களையும், அசுரர்களின் உடலினையும் (ஆணவத்தினையும்), ஒருசேர அழிந்திடும்படி, போர் செய்து அருள்வோனே,<br /><br />அறமும், நிறமும், வேலும், மயிலும், அழகும், உடைய கந்த பெருமாளே!<br />~~~~~~~<br /><span style="font-weight: bold;">8. சித்தர் பாடல்கள்</span><br />பாடல் : நாதர் முடி மேலிருக்கும் நல்லபாம்பே<br />இராகம் : புன்னாகவரளி<br />இயற்றியவர் : பாம்பாட்டிச் சித்தர்<br /><br />நாதர்முடி மேல் இருக்கும் நாகப் பாம்பே!<br />நச்சுப்பையை வைத்திருக்கும் நல்ல பாம்பே!<br />பாதலத்தில் குடிபுகும் நல்ல பாம்பே!<br />பாடிப்பாடி நின்று ஆடு பாம்பே!<br />ஆடு பாம்பே, தெளிந்தாடு பாம்பே!<br /><br />(அடுத்த பகுதியில் தமிழ் மூவர். அப்பகுதியில் இத்தொடர் நிறையும் என நினைக்கிறேன், பார்க்கலாம்.)jeevagvhttp://www.blogger.com/profile/02747964167117423246noreply@blogger.com4tag:blogger.com,1999:blog-36268584.post-21490051237146237552008-12-25T10:25:00.002-05:002010-03-01T14:49:53.520-05:00தமிழிசை வரலாறு - 3 : பிரபந்தம் & கம்பன்சென்ற பகுதியில் திருமதி.சௌம்யா அவர்கள், தேவாரத் திருமுறைகளில் இருந்து பாடல்களை வழங்குவதைப் பார்த்தோம். As a Sequel, இப்பகுதியில் தமிழ்மறையாம் நாலாயிர திவ்யப் பிரபந்தத்தில் இருந்து பாடல்களை வழங்குகிறார்.<br /><br /><strong style="color: rgb(153, 51, 0);"><br /><span style="font-weight: normal;">"...பசுங்கதிர் மதியமொடு சுடர் கண்ணாக</span><br /><span style="font-weight: normal;"> இயன்ற எல்லாம் பயின்றகத்தடக்கிய</span><br /><span style="font-weight: normal;"> வேத முதல்வன் என்ப</span><br /><span style="font-weight: normal;"> தீதற விளங்கிய திகிரியோனே"</span></strong><br /><br />என்ற சங்ககாலப் பாடலின் வழி வரும் ஆழ்வார் பாசுரங்களின் (பா + சுரம் = பாசுரம் = இசைப்பா!) திரட்டில் இருந்து, இரண்டு பாடல்கள் இசைக்கப் பார்க்க விருக்கிறோம்.<br />இப்பாடல்களுக்கு இசை அமைத்தது, இந்நிகழ்ச்சியில் வயலின் வாசிக்கும், <a href="http://www.embarkannan.com/">எம்பார் எஸ்.கண்ணன்</a> அவர்களேயாம்!.<br /><br />4. திவ்யப் பிரபந்தம்<br /><br />முதல் பாடல்:<br />இயற்றியவர் : நம்மாழ்வார்<br />தலம் : வானமாமலை<br />இராகம் : கௌளை<br /><div style="text-align: center;"><span style="color: rgb(204, 0, 0);">நோற்ற நோன்பிலேன் நுண்ணறி விலேனாகிலும்</span><br /><span style="color: rgb(204, 0, 0);">இனி யுன்னைவிட்டு,ஒன்றும்</span><br /><span style="color: rgb(204, 0, 0);">ஆற்ற கின்றிலேன் அரவினணை யம்மானே,</span><br /><span style="color: rgb(204, 0, 0);">சேற்றுத் தாமரை செந்நெ லூடுமலர் சிரீவர மங்கலநகர்,</span><br /><span style="color: rgb(204, 0, 0);">வீற்றிருந்த எந்தாய். உனக்கு மிகையல்லே னங்கே.</span><br /></div><br /><br />நம்மாழ்வாரின் இப்பாசுரம் துதிப்பது நாங்குநேரியில் வீற்றிருக்கும் 'தோத்தாத்ரி நாதன்' எனும் திருநாமம் கொண்ட திருமாலை. இத்தலம் 108 திவ்ய தேசங்களில் ஒன்று. இத்தலத்திற்கு இதர பெயர்கள் வானமாமலை, திருசிரீவரமங்கை ஆகியவை - திருநெல்வேலிக்குத் தெற்கே உள்ளது. இத்தலத்தின் தீர்த்தம் சேற்றுத்தாமரைத் தீர்த்தம். ஆதிசேஷன் இத்தலத்தில் தவமியற்றி, திருமாலுக்கு அணையாக இருக்கும் பேறு பெற்றானாம். இத்தலத்தின் சாத்தப்படும் சடாரியில் நம்மாழ்வாரின் உருவம் பொறிக்கப்பட்டிருக்கும்.<br /><br /><br /><a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://3.bp.blogspot.com/_KnBZDR_WpFM/SVMHV9omAWI/AAAAAAAACRM/PUDInnRGyu4/s1600-h/kulasekara.jpg"><img style="float:right; margin:0 0 10px 10px;cursor:pointer; cursor:hand;width: 235px; height: 320px;" src="http://3.bp.blogspot.com/_KnBZDR_WpFM/SVMHV9omAWI/AAAAAAAACRM/PUDInnRGyu4/s320/kulasekara.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5283574861739196770" /></a><br />அடுத்த பாடல்:<br />இயற்றியவர் : குலசேகர ஆழ்வார்<br />இராகம் : தோடி<br /><div style="text-align: center;"><br /><span style="color: rgb(0, 153, 0);"> என்னை வருக வெனக்குறித்திட்டு</span><br /><span style="color: rgb(0, 153, 0);"> இனமலர் முல்லையின் பந்தர் நீழல்</span><br /><span style="color: rgb(0, 153, 0);"> மன்னி அவளைப் புணரப்புக்கு</span><br /><span style="color: rgb(0, 153, 0);"> மற்றென்னைக் கண்டு உழறா நெகிழ்ந்தாய்</span><br /><span style="color: rgb(0, 153, 0);"> பொன்னிற ஆடையைக் கையில்தாங்கிப்</span><br /><span style="color: rgb(0, 153, 0);"> பொய் அச்சம் காட்டிநீ போதியேலும்</span><br /><span style="color: rgb(0, 153, 0);"> இன்னம் என் கையகத்து ஈங்கொருநாள்</span><br /><span style="color: rgb(0, 153, 0);"> வருதியேல் என்சினம் தீர்வன்நானே</span></div><br /><br />இந்தப் பாடலுக்கு நாட்டியமாடிப் பார்க்க வேண்டும். அழகான முக பாவங்களைக் காட்டிட ஏதுவானதொரு பாடல். இயலும், இசையும், நாடகமும் - முத்தமிழும் ஒன்றே சங்கமிக்க, இனியதொரு களனாய் இப்பாடல் அமைந்திருக்கிறது!<br /><br />பொருளைப் பாருங்களேன்!:<br /><span style="font-style: italic;">கண்ணா, என்னை ஒரு இடத்திற்கு வருமாறு சொன்னாய்.</span><br /><span style="font-style: italic;">நீயோ, அந்த குளிர்ந்த முல்லை மலர் பந்தலில் மறைந்தவாறு, </span><br /><span style="font-style: italic;">அங்கே நெடுநேரம் காத்திருந்த வேறோருவரை அணைத்துக் கொண்டிருந்தாய். </span><br /><span style="font-style: italic;">என்னை நீ பார்த்தும், மெல்ல விடுவித்துக் கொண்டாய். உன் பொன்னிற ஆடையைத் தாங்கி, ஏதோ, என்னைக் கண்டு அச்சம் கொண்டு விலகுவது போல், பொய் நாடகமாடுகிறாய்.</span><br /><span style="font-style: italic;">என்றேனும் ஒருநாள், நீ என்னருகே வருவாய் அல்லவா, அன்று பார்த்துக்கொள்கிறேன்! </span><br /><span style="font-style: italic;">என் சினத்தை அப்போது, தீர்த்துக்கொள்கிறேன்!</span><br /><br />நித்திலமான இப்பாடல்களை இங்கே கேட்கலாம்:<br /><br /><object height="344" width="425"><param name="movie" value="http://www.youtube.com/v/7SVusrN4WiY&hl=en&fs=1"><param name="allowFullScreen" value="true"><param name="allowscriptaccess" value="always"><embed src="http://www.youtube.com/v/7SVusrN4WiY&hl=en&fs=1" type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="true" height="344" width="425"></embed></object><br /><br />ஞானத்தில் முதிர்ந்த பெரியோர்கள் அருளிய அமுதம் மறைகளாம். தமிழ்மறையாய் தீந்தமிழ் சோற்களை, செந்நெல் விதையாய் விதைத்து, விளைந்தது அல்லவோ, இவ்வாழ்வார் பாசுரங்கள்!<strong style="color: rgb(153, 51, 0);"></strong><br /><br />5. கம்ப இராமாயணம்<br />இராகம் : நாட்டை<br /><br /><div style="text-align: center;"><span style="color: rgb(51, 51, 153);">உலகம் யாவையும் தாமுள ஆக்கலும் </span><br /><span style="color: rgb(51, 51, 153);"> நிலைபெ றுத்தலும் நீங்கலும் நீங்கலா </span><br /><span style="color: rgb(51, 51, 153);"> அலகி லாவிளை யாட்டுடை யாரவர் </span><br /><span style="color: rgb(51, 51, 153);"> தலைவ ரன்னவர்க் கேசரண் நாங்களே.</span><br /></div><br /><br />தமிழிசை வரலாறு, இப்போது பனிரெண்டாம் நூற்றாண்டை அடைந்திருக்கிறது! 'விருத்தத்திற்கு கம்பன்' எனச் சொல்லும் அளவிற்கு, மரபுக் கவிகளின் மகுடமாம், கவிச்சக்ரவர்த்தி கம்பனின் இராமகாதை வாழ்த்துப்பாடலை பாடுகிறார். 'உலகம் யாவையும்' எனக் கம்பர் பாடத் துவங்கி, விரிந்து, பரந்து, உயர்ந்தோங்கி நிற்கும் அவரது காவியம் போல், தமிழும், இசையும் ஒருங்கே பற்பல நூற்றாண்டுகளுக்கு பட்டொளி வீசிப் பறந்திடக் காணீர்.<br /><br />(அடுத்த பகுதியில் தமிழிசை வரலாறு தொடர்கிறது...)jeevagvhttp://www.blogger.com/profile/02747964167117423246noreply@blogger.com3tag:blogger.com,1999:blog-36268584.post-18345819369946621012008-12-22T21:07:00.001-05:002010-03-01T14:49:53.526-05:00தமிழிசை வரலாறு - 2 : தேவாரம்சென்ற பகுதியில் திருமதி சௌம்யா அவர்கள், சிலப்பதிகாரப் பாடல்களில் கிரகபேத எடுத்துக்காட்டுகளை எடுத்துரைத்து, பாடிக் காட்டியதைக் கேட்டும் பார்த்தும் இரசித்தோம்.<br /><br />இந்தப் பகுதியில், சங்க காலத்தில் இருந்து, தேவாரப் பதிகங்களின் காலகட்டத்திற்குச் செல்கிறோம். கிட்டத்தட்ட, இரண்டு முதல் ஐந்து நூற்றாண்டுகளுக்குப் பிறகு, சைவ சமயக் குரவர்களின் தமிழிசைப் பாடல்களை பாடக் கேட்கவிருக்கிறோம்.<br /><br />3. தேவாரம்<br />நான்காம் திருமுறை தேவாரப் பாடல் (திருவையாறு தலம்)<br />இயற்றியவர் : திருநாவுக்கரசர்<br />பண் : கௌசிகம் (இராகம்: பைரவி)<br /><div style="text-align: center;"><span style="color: rgb(102, 0, 0);">"களித்துக் கலந்ததோர் காதற்கசிவோடு காவிரிவாய்க்</span><br /><span style="color: rgb(102, 0, 0);">குளித்துத் தொழுது முன்நின்ற இப்பத்தரைக் கோதில் செந்தேன்</span><br /><span style="color: rgb(102, 0, 0);">தெளித்துச் சுவையது ஊட்டி அமரர்கள் சூழியிருப்ப</span><br /><span style="color: rgb(102, 0, 0);">அளித்துப் பெருஞ்செல்வமாக்கும் ஐயாறன் அடித்தலமே" </span><br /></div><br />(பாடலின் பொருளினை <a href="http://www.thevaaram.org/thirumurai_1/search_view.php?thiru=4&Song_idField=4092007&padhi=092">இங்கே</a> பார்க்கவும்.)<br />மூன்றாம் திருமுறை தேவாரப் பாடல் (சீர்காழி தலம்)<br />இயற்றியவர் : திருஞான சம்பந்தர்<br />பண் : கௌசிகம் (இராகம்: பைரவி)<br /><div style="text-align: center; color: rgb(0, 153, 0);">யாமாமாநீ யாமாமா யாழீகாமா காணாகா<br />காணாகாமா காழீயா மாமாயாநீ மாமாயா. <br /></div>(இது பதிகத்தின் முதல் பாடல் மட்டுமே, இதைப்போல இன்னும் பத்து பாடல்கள் உள. பாடலின் முதலெழுத்தும், கடையெழுத்தும் ஒன்றாக இருப்பதைக் கவனிக்க. இப்படிப்பட்ட பாடலுக்கு என்ன பெயர்?)<br />(பாடலின் பொருளினை <a href="http://www.thevaaram.org/thirumurai_1/songview.php?thiru=3&Song_idField=31170&padhi=117&startLimit=1&limitPerPage=1&sortBy=&sortOrder=DESC">இங்கே</a> பார்க்கவும்.)<br /><br />நான்காம் திருமுறை தேவாரப் பாடல் (<span class="heading">திருவொற்றியூர்</span> தலம்)<br />இயற்றியவர் : திருநாவுக்கரசர்<br />இராகம் : நவ்ரோஜ்<br /><div style="text-align: center;"><span style="color: rgb(0, 0, 153);">மனமெனும் தோணி பற்றி மதியெனுங் கோலை ஊன்றிச்</span><br /><span style="color: rgb(0, 0, 153);"> சினமெனும் சரக்கை யேற்றிச் செறிகட லோடும் போது</span><br /><span style="color: rgb(0, 0, 153);"> மனனெனும் பாறை தாக்கி மறியும்போ தறிய வொண்ணா</span><br /><span style="color: rgb(0, 0, 153);"> துனையுனு முணர்வை நல்கா யொற்றியூ ருடைய கோவே.</span><br /></div>(பாடலின் பொருளினை <a href="http://www.thevaaram.org/thirumurai_1/search_view.php?thiru=4&Song_idField=4046002&padhi=046">இங்கே</a> பார்க்கவும்.)<br /><object height="344" width="425"><param name="movie" value="http://www.youtube.com/v/e8eVslD-nrU&hl=en&fs=1"><param name="allowFullScreen" value="true"><param name="allowscriptaccess" value="always"><embed src="http://www.youtube.com/v/e8eVslD-nrU&hl=en&fs=1" type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="true" height="344" width="425"></embed></object><br />(முடிவில், நம் இசையின் சுர நுணுக்கங்களையும், அவற்றில் தொக்கி நிற்கும் உயர் கணிதத்தினையும், அறிவியலையும் சௌம்யா அவர்கள் தொட்டுப் போவதைப் பார்க்கலாம்.)<br /><br />ஏழாம் திருமுறை தேவாரப் பாடல் (திருவாரூர் தலம்)<br />இயற்றியவர் : சுந்தரர்<br /><br />(விருத்தம்)<br /><div style="text-align: center; color: rgb(51, 51, 255);">ஏழிசையாய் இசைப்பயனாய்<br /> இன்னமுதாய் என்னுடைய<br />தோழனுமாய் யான்செய்யுந்<br /> துரிசுகளுக் குடனாகி<br />மாழையொண்கண் பரவையைத்<br /> தந்தாண்டானை மதியில்லா<br />ஏழையேன் பிரிந்திருக்கேன்<br /> என்ஆரூர் இறைவனையே.<br /><br />பண் : பழம் பஞ்சுரம் (இராகம்: சங்கராபரணம்)<br /><br />பத்திமையும் மடிமையையுங்<br />கைவிடுவான் பாவியேன்<br />பொத்தினநோ யதுஇதனைப்<br />பொருளறிந்தேன் போய்த்தொழுவேன்<br />முத்தினைமா மணிதன்னை<br />வயிரத்தை மூர்க்கனேன்<br />எத்தனைநாள் பிரிந்திருக்கேன்<br />என்ஆரூர் இறைவனையே<br /></div><br />மேலே குறிப்பிட்ட இரண்டு பாடலும் ஒரே பதிகத்தில் இடம் பெறுபவை. முதல் பாடலின் பொருளை <a href="http://www.thevaaram.org/thirumurai_1/songview.php?thiru=7&Song_idField=70510&padhi=051&startLimit=10&limitPerPage=1&sortBy=&sortOrder=DESC">இங்கேயும்</a>, இரண்டாம் பாடலின் பொருளை <a href="http://www.thevaaram.org/thirumurai_1/songview.php?thiru=7&Song_idField=70510&padhi=051&startLimit=1&limitPerPage=1&sortBy=&sortOrder=DESC">இங்கேயும்</a> பார்க்கலாம். <br /><br /><object width="425" height="344"><param name="movie" value="http://www.youtube.com/v/NyghXk3hxTg&hl=en&fs=1"></param><param name="allowFullScreen" value="true"></param><param name="allowscriptaccess" value="always"></param><embed src="http://www.youtube.com/v/NyghXk3hxTg&hl=en&fs=1" type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="true" width="425" height="344"></embed></object><br /><br />சைவம், ஒரு கண்ணென்றால், வைணவம் இன்னொரு கண்ணல்லவா!<br />இதுவரை சிவனடியார்களின் இசைத் தொண்டினால் தமிழிசை பெற்ற செல்வங்களைப் பார்த்தோம்.<br />அடுத்து வைணவப் பெருந்தகைகளான, ஆழ்வார்கள் படைத்திடும் அமுதினை அடுத்த பகுதியில் தொடர்வதினை கேட்டு மகிழ்வோம்!jeevagvhttp://www.blogger.com/profile/02747964167117423246noreply@blogger.com4tag:blogger.com,1999:blog-36268584.post-89326813096219563842008-12-21T08:45:00.002-05:002010-03-01T14:49:53.531-05:00தமிழிசை வரலாறு - 1 : சங்க காலம்ஜெயா டி.வி மார்கழி மகா உற்சவம் 2008 நிகழ்ச்சியில், நேற்று, 'சிலப்பதிகாரம் முதல் சிவன்' வரை என்ற தலைப்பில் திருமதி.சௌம்யா அவர்கள் சங்க கால இலக்கியம் முதல் பாபநாசம் சிவன் வரை, தமிழிசை வரலாற்றின் முக்கியமான மைல்கற்களை தொட்டுப் போகும்படியானதொரு தொகுப்பினை தந்திருந்தார்கள்.<br /><br />வாய்ப்பாட்டு : எஸ். சௌம்யா<br />வயலின் : எம்பார் எஸ். கண்ணன்<br />மிருதங்கம் : நெய்வேலி ஆர். நாராயணன்<br /><br />சௌம்யா அவர்கள் பாடிய பாடல்களும், நிகழ்வில் அவர் சொன்ன முக்கிய குறிப்புகளும்:<br />1. அகநானூறு பாடல் : <a href="http://www.maalaisudar.com/staticpage.php?id=2631&section=25&%20catid=78"><span style="font-weight: bold;">ஆடமைக் குயின்ற</span>...</a><br />இயற்றியவர் : கபிலர்<br /><br /><div style="text-align: center; color: rgb(0, 0, 153);">ஆடமைக் குயின்ற அவிர்துளை மருங்கின்<br />கோடை அவ்வளி குழலிசை யாக<br />பாடுஇன் அருவிப் பனிநீர் இன்னிசைத்<br />தோடமை முழவின் துதைகுரல் ஆக<br /></div><br />2. சிலப்பதிகாரம் : கன்று குணிலாக்... (ஆய்ச்சியர் குரவை)<br />இயற்றியவர் : இளங்கோ அடிகள்<br />இராகம் : மோகனம்<br /><div style="text-align: center; color: rgb(153, 0, 0);"><span class="postbody">கன்று குணிலாக் கனியுதிர்த்த மாயவன் </span><br /><span class="postbody"> இன்றுநம் ஆனுள் வருமேல் அவன்வாயில் </span><br /><span class="postbody"> கொன்றையந் தீங்குழல் கேளாமோ தோழீ; </span><br /><br /></div>(மோகனத்தின் சுரஸ்தானங்களை கிரகபேதம் செய்ய வரும் மத்யமாவதி, அதற்கு எடுத்துக்காட்டு போல, சிலம்பின் இன்னொரு பாடலை காட்டினார்.)<br />இராகம் : மத்யமாவதி<br /><div style="text-align: center; color: rgb(153, 0, 0);"><span style="color: rgb(0, 153, 0);" class="postbody">இறுமென் சாயல் நுடங்க நுடங்கி </span><br /><span style="color: rgb(0, 153, 0);" class="postbody"> அறுவை யொளித்தான் வடிவென் கோயாம் </span><br /><span style="color: rgb(0, 153, 0);" class="postbody"> அறுவை யொளித்தான் அயர அயரும் </span><br /><span style="color: rgb(0, 153, 0);" class="postbody"> நறுமென் சாயல் முகமென் கோயாம்; </span><br /><span class="postbody">வஞ்சஞ் செய்தான் தொழுனைப் புனலுள் <br />நெஞ்சங் கவர்ந்தாள் நிறையென் கோயாம்<br />நெஞ்சங் கவர்ந்தாள் நிறையும் வளையும்<br />வஞ்சஞ் செய்தான் வடிவென் கோயாம்; </span><br /></div>(மோகன இராகத்திலிருந்து கிரக பேதம் செய்து ஹிந்தோளாம் இராகத்தினை அடைவதை இன்னொரு சிலப்பதிகாரப் பாடலைப் பாடுகிறார்.)<br />இராகம் : ஹிந்தோளம்<br /><div style="text-align: center; color: rgb(0, 102, 0);">கதிர்திகிரி யான்மறைத்த கடல்வண்ணன் இடத்துளாள்<br />மதிபுரையு நறுமேனித் தம்முனோன் வலத்துளாள்<br />பொதியவிழ் மலர்க்கூந்தற் பிஞ்ஞைசீர் புறங்காப்பார்<br />முதுமறைதேர் நாரதனார் முந்தைமுறை நரம்புளர்வார்;<br /><span style="color: rgb(102, 0, 204);" class="postbody">மயிலெருத் துறழ்மேனி மாயவன் வலத்துளாள் <br />பயிலிதழ் மலர்மேனித் தம்முனோன் இடத்துளாள்<br />கயிலெருத்தம் கோட்டியநம் பின்னைசீர் புறங்காப்பார்<br />குயிலுவருள் நாரதனார் கொளைபுணர்சீர் நரம்புளர்வார்; </span><br /></div><br /><br /><object width="425" height="344"><param name="movie" value="http://www.youtube.com/v/NdHmEMPbvHA&hl=en&fs=1"></param><param name="allowFullScreen" value="true"></param><param name="allowscriptaccess" value="always"></param><embed src="http://www.youtube.com/v/NdHmEMPbvHA&hl=en&fs=1" type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="true" width="425" height="344"></embed></object><br /><br />சிலப்பதிகாரத்தில் அன்றைக்கே, கிரக பேதத்தினை விளக்கிடும் எடுத்துக்காட்டாக, பாடலை இயற்றி இருக்கிறார்கள்! பாடல்களும் இயைபு தரும் பண்களைப் பற்றி நன்கு அறிந்து பாடல்களை இயற்றி இருக்கிறார்கள்! இவையெல்லாம் நமது தமிழிசை எத்தனை உன்னதமான நிலையில் இருந்திருக்க வேண்டும் என்பதனை நினைத்துப் பார்க்க, பெருமையாக இருக்கிறது.<br /><br />(அடுத்த பகுதியில் தேவாரப் பாடல்களின் கால கட்டத்தில் தமிழிசை வரலாறு தொடர்வதினைப் பார்க்கலாம்...)jeevagvhttp://www.blogger.com/profile/02747964167117423246noreply@blogger.com6tag:blogger.com,1999:blog-36268584.post-76524273329075573502008-12-16T21:22:00.003-05:002010-03-01T14:49:53.537-05:00தமிழிசைப் பாவலர் பலர்!<span style="font-size:180%;">ந</span>மது இசை வரலாற்றைத் திருப்பிப் பார்க்கையில், எண்ணற்ற இறையடியாளர்களின் இனிய இசைத் தொண்டினைக் கேட்டுப் பூரிக்கலாம். இன்று, நேற்று என்றில்லாமல், பற்பல நூற்றாண்டுகளாக, தாங்களும் பாடிப் பூரித்ததோடு, இறவாப் பாடல்கள் மூலம் நம்மையும், இசையின் இனிய நாதத்தினை மகிழ்ந்து பருகும் படியாக செய்து விட்டுப் போயிருக்கிறார்கள். வரப்போகும் சந்ததிக்கு, இசைச் செல்வத்தினை சேர்த்து வைத்துவிட்டுப் போன நம் மூதாதையர்களுக்கு எத்துணை நன்றி செலுத்தினாலும், அது போதாது.<br /><br />இந்தப் பகுதியில், இரண்டு பாடல்களைப் பார்க்கப்போகிறோம். ஒன்று அக்காலாத்துப் பாடல், இன்னொன்று இக்காலத்துப் பாடல். முதல் பாடலில், முதற்காலத்தில் இருந்த, மாகவிகளின் பட்டியலைப் பார்க்கலாம். இரண்டாவது பாடலில், முதற்காலத்திற்கு, அடுத்த காலகட்டத்தில் வந்துதித்த மகாகவிகளின் பட்டியலைப் பார்க்கலாம்.<br /><br />இது என்ன பாடலா, அல்லது பட்டியலா? இரண்டும் தாங்க!. இந்தப் பட்டியலில் இடம் பெரும், மகாகவிகளின் பல பாடல்களை நாம் கேட்டிருக்கிறோம். ஆனால், அவர்களைப் பற்றிய பாடலை?. இங்கே, அப்படிப்பட்ட, ஒரு பாடல்... இல்லை, இல்லை, இரண்டு பாடல் பார்க்கப் போகிறோம்! ப்ளாஷ்பேக்-குக்கு ரெடியா?<br /><br />முதல் பாடல்:<br /><span style="color: rgb(255, 102, 0);">இயற்றியவர்: சுத்தானந்த பாரதி</span><br /><span style="color: rgb(255, 102, 0);">இராகம் : கர்நாடக தேவகாந்தாரி.</span><br /><br /><div align="justify"><span style="font-weight: bold;"><span style="font-weight: bold;"></span>எடுப்பு</span><br /><span style="color: rgb(204, 0, 0);">எப்படிப் பாடினாரோ அடியார் அப்படிப் பாட நான் </span></div><div align="justify"><span style="color: rgb(204, 0, 0);">ஆசை கொண்டேன் சிவனே</span><br /><br /><span style="font-weight: bold;">தொடுப்பு</span><br /><span style="color: rgb(0, 102, 0);">அப்பரும் சுந்தரரும் ஆளுடைப் பிள்ளையும் </span></div><div align="justify"><span style="color: rgb(0, 102, 0);">அருள் மணி வாசகரும் பொருளுணர்ந்து உன்னையே</span><br /><br /><span style="font-weight: bold;">முடிப்பு</span><br /><span style="color: rgb(0, 0, 153);">குருமணி சங்கரரும் அருமை தாயுமானாரும் </span></div><div style="color: rgb(0, 0, 153);" align="justify">அருணகிரி நாதரும் அருட்ஜோதி வள்ளலும்</div><div style="color: rgb(0, 0, 153);" align="justify">கருணைக்கடல் பெருகி காதலினால் உருகி </div><div align="justify"><span style="color: rgb(0, 0, 153);">கனித்தமிழ் சொல்லினால் இனிதுனை அனுதினம்</span><br />(எப்படிப் பாடினாரோ!)<br />~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~<br />இப்பாடலை இயற்றியவர் சுத்தானந்த பாரதியார் அவர்கள் (1897-1990). யோகி சுத்தானந்தர், இவரோ பெரிய கவி. பக்தியாளரும், சுதந்திரப் போராட்ட வீரரும் கூட. புதுவை அரவிந்த ஆசரமத்தில் சுமார் 23 ஆண்டுகள் தங்கி இருக்கையில், யோக நெறிதனை பின்பற்றி, அவற்றில் உச்சங்களை எட்டினாராம். 1914இல், மகாத்மா காந்தியுடன் ஏற்பட்ட சந்திப்பிற்குப் பிறகு, சிலகாலம் அரசியலில் ஆர்வம் செலுத்தினாலும், சிலகாலத்தில் முழுமையாக ஆன்மீகத்தில் ஆழ்ந்திடலானார். அரவிந்த ஆசரமத்தில் <a href="http://www.dlshq.org/saints/siva.htm">சுவாமி சிவானந்தர்</a>, இவரை அங்கு சந்தித்து இருக்கிறார்.<br />சுத்தானந்த பாரதியார் இயற்றிய பாடல்களில் சில:<br />* அருள் புரிவாய் (ஹம்சத்வனி)<br />* சகலகலா வாணியே (கேதாரம்)<br />* தூக்கிய திருவடி (சங்கராபரணம்)<br />* ஜங்கார சுருதி செய்குவாய் (<a href="http://isaiinbam.blogspot.com/search/label/%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BF">பூர்விகல்யாணி</a>)<br /><br />சுத்தானந்த பாரதி, தனக்கு முன் வந்த இறையடியாளர்கள், எப்படியெல்லாம் சிவனைப் பாடிக் கொண்டாடினர். ஆகா, அவற்றில் மயங்கி, அவர்களைப் போலவே எனக்கும் பாட ஆசை வந்ததே என்கிறார். தொடுப்பில் அவர் சொல்லும், நான்கு பேரும் திருமுறைகள் தந்த சமயக் குரவராவர். (அப்பர், சுந்தரர், சம்பந்தர் & மணிவாசகர்.). முடிப்பில், அவர் சொல்லும் நால்வரும், பெரும் ஞானியர். காலத்தை வென்று நிற்பவர்கள். முதலில் மணியான குருவாம் ஆதி சங்கரரில் தொடங்குகிறார். இவர் தமிழில் ஏதும் பாடல் இயற்றாவிட்டாலும், பின்னர் வரப்போகும் அத்வைத பாரம்பரியத்தின் முன்னோடி என்பதால், சுத்தானந்தர், சங்கரரில் துவங்கியிருக்க வேண்டும். அடுத்தது தாயுமானவர். அவரின் கண்ணிகளும், ஆனந்தக் களிப்பும் சொல்லில் அடங்கா சுகம் தருபவை. அருணகிரியாரின் சந்தத்திலோ அழகன் முருகனின் பாதார விந்தமே, தாளம் போடும். அருட்பெரும் ஜோதியார் அருளிய திருவருட்பாக்களோ, நன்னெறிக்கு வித்திடுவதோடு, அருள்நெறியும் தந்திடும். வள்ளலார் என்றவுடன், அடுத்த வார்த்தை, 'கருணை' என்று வந்திருக்கும் பொருத்தத்தினை என்னென்று சொல்வேன்!<br /><br />ஆலாபனையுடன், இப்பாடலை, சங்கீத கலாநிதி, டி.கே.பட்டம்மாள் அவர்கள் பாடிட இங்கு கேட்கலாம்:<br /><div style="width: 220px; height: 55px;"><object height="55" width="220"><param name="movie" value="http://www.deezer.com/embedded/small-widget-v2.swf?idSong=1489895&colorBackground=0x555552&textColor1=0xFFFFFF&colorVolume=0x39D1FD&autoplay=0"><embed src="http://www.deezer.com/embedded/small-widget-v2.swf?idSong=1489895&colorBackground=0x525252&textColor1=0xFFFFFF&colorVolume=0x39D1FD&autoplay=0" type="application/x-shockwave-flash" height="55" width="220"></embed></object></div><br /><br />மெல்லிசையில், பாடலை நித்யஸ்ரீ மஹாதேவன் அவர்கள் பாடிட <a href="http://www.musicindiaonline.com/p/x/aJx2x4Xzmt.As1NMvHdW/">இங்கு</a> கேட்கலாம்.<br /><br />அடுத்த பாடல்:<br />இப்பாடலில், 18 முதல் 19 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த தமிழ்க் கவிகளை திரு.சேதுராமன் சுப்ரமணியன் அவர்கள் பாடுகிறார். திரு.சேதுராமன் சுப்ரமணியன் - இவர் ஒரு அறிவியல் வல்லுனர். இவரது ப்ளாகர் பக்கத்தினை <a href="http://www.blogger.com/profile/18181313304955187022">இங்கு</a> பார்க்கலாம்.<br /><br /><span style="font-weight: bold;">எடுப்பு</span><br /><span style="color: rgb(153, 0, 0);">எப்படிப் புனைந்தீரோ ராமய்யா!</span><br /><span style="color: rgb(153, 0, 0);">அப்படி நானெழுத ஆசை கொண்டேன் சிவனே!</span><br />(எப்படி..)<br /><br /><span style="font-weight: bold;">தொடுப்பு</span><br /><span style="color: rgb(204, 51, 204);">கோபால கிருஷ்ணனும் நீலகண்ட சிவனும்</span><br /><span style="color: rgb(204, 51, 204);">அருணாசலக் கவியும் கண்டறிந்த பொருள் தனையே</span><br />(எப்படி..)<br /><br /><span style="font-weight: bold;">முடிப்பு</span><br /><span style="color: rgb(255, 0, 0);">சுப்ரமண்ய பாரதியும் சுத்தானந்த பாரதியும்</span><br /><span style="color: rgb(255, 0, 0);">கவிகுஞ்சர பாரதியும் கோடீஸ்வர அய்யரும்</span><br /><span style="color: rgb(255, 0, 0);">பாசமுடன் எழுதி பரிவுடனே பாடிய</span><br /><span style="color: rgb(255, 0, 0);">கனித்தமிழ்ச் சொற்களால் இறைவனின் புகழ் பாட</span><br />(எப்படி..)</div><br /><br />முன்பு கேட்ட 'எப்படிப் பாடினாரோ' பாடலைப் போலவே இந்தப் பாடலையும் இயற்றியுள்ளார். அதே இராகத்தில் பாடிப் பார்க்கவும். இந்தப் பாடலின் எடுப்பிலேயே, தமிழ்த் தியாகராஜர், பாபநாசம் சிவன் (1890-1973) அவர்களை அழைக்கிறார். 'ராமய்யா' என்பது பாபநாசம் சிவன் அவர்களின் இயற்பெயர். சிவனாரின் காலத்திலும், அவருக்கு முற்பட்ட காலத்திலும் அருந்தமிழ் கவிகளை இயற்றிய தமிழிசைக் கவிஞர்களையும் இப்பாடல் குறிப்பிட்டு, அக்கவிகளுக்குப் பெருமை சேர்க்கிறது.<br /><br />தொடுப்பில் தொடுக்கப்பட்டுள்ளோர்:<br /><a href="http://jeevagv.blogspot.com/search/label/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%A3%20%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BF">கோபால கிருஷ்ண பாரதி</a> (1811-1896) - நந்தனார் சரித்திரக் கீர்த்தனைகளை இயற்றியவர்.<br /><a href="http://jeevagv.blogspot.com/search/label/%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B2%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%20%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D">நீலகண்ட சிவன் </a>(1839-1900)<br /><a href="http://jeevagv.blogspot.com/search/label/%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF">அருணாசலக் கவியார்</a> (1711-1779) - இராம நாடகக் கீர்த்தனைகளை இயற்றியவர்.<br /><br />அடுத்து முடிப்பில், தொடுக்கப்பட்டுள்ளோர்:<br /><a href="http://en.wikipedia.org/wiki/Subramanya_Bharathy">சுப்ரமணிய பாரதி </a>(1882, 1921),<br />சுத்தானந்த பாரதி (1897-1990),<br /><a href="http://en.wikipedia.org/wiki/Kavi_Kunjara_Bharati">கவிகுஞ்சர பாரதி </a>(1810-1896) மற்றும்<br /><a href="http://jeevagv.blogspot.com/search/label/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%80%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%20%E0%AE%90%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D">கோடீஸ்வர ஐயர் </a>(1870-1936)<br /><br />இவர்களும், இன்னும் பற்பல கவிகளும் தந்துள்ள சாகாவரம் பெற்ற பாக்கள் தான் எத்தனை எத்தனை! அத்தனையும் செவிகளில் நிறைத்து மகிழ, உள்ளம் விழையுது. அவற்றைக் கேட்டிட நெஞ்சம் குழையுது!.jeevagvhttp://www.blogger.com/profile/02747964167117423246noreply@blogger.com9tag:blogger.com,1999:blog-36268584.post-22147386735646945942008-10-12T08:00:00.002-05:002010-03-01T14:49:53.543-05:00தமிழ் மூவர்<a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj21l9KP76qHm47X0bOz8L_9wiq8OxJvo2WLjH0h70zmcwXB4a_1m4Yuk4WYplRWEuVF3PwB2GGkV8UYCDQ5NsNvs7XOvxOLSty4oE5WIw9-Vud8pndvoy7SNOALs7Qkg3EFFQkTg/s1600-h/muthuThAndavar.jpg"><img style="margin: 0pt 0pt 10px 10px; float: right; cursor: pointer;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj21l9KP76qHm47X0bOz8L_9wiq8OxJvo2WLjH0h70zmcwXB4a_1m4Yuk4WYplRWEuVF3PwB2GGkV8UYCDQ5NsNvs7XOvxOLSty4oE5WIw9-Vud8pndvoy7SNOALs7Qkg3EFFQkTg/s400/muthuThAndavar.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5229152298183663586" border="0" /></a> <span style="font-size:180%;">த</span>மிழிசையின் மும்மூர்த்திகள் என நாம் பெருமையுடன் அழைக்கும் தமிழ் மூவர் பற்றி இங்கே பார்க்கவிருக்கிறோம்.<br />'தமிழ் மூவர்' என்றும் 'தமிழிசை மும்மூர்த்திகள்' என்றும் வழங்கப்படுவோர் :<br />முத்துத்தாண்டவர், மாரிமுத்தாப்பிள்ளை, அருணாசலக் கவியார் - ஆகியோராவர். (இவர்களோடு, பாபவினாசம் முதலியார் அவர்களையும் சேர்த்து 'தமிழ் நால்வர்' எனவும் வழங்குவதுண்டு.) தமிழில் கிருதிகளை உருவாக்கிய முன்னோடிகளான இவர்களின் தமிழிசைத் தொண்டு அளவிடற்கரியது.<br /><br /><span style="font-size:180%;">மு</span>த்துத்தாண்டவர் தில்லை சிதம்பரநாதனை ஏராளமான பாடல்களில் பாடி இருக்கிறார். இன்றைக்கும் நம் பாடல்களில் வழங்கி வரும் 'பல்லவி - அனுபல்லவி - சரணம்', என்கிற முறையை முதன்முதனில் தமிழில் இவர் இயற்றிய பாடல்களில் பார்க்கிறபடியால், இவரே 'கிருதி' முறைக்கு முன்னோடி என்பர். குறிப்பிட்ட தாளத்தில் பாடல்களை இசைப்பதும் இவர் காலத்தில், வழக்கில் நிலைத்தது. தமிழிசைத் தலைநகரான 'சீர்காழி' யில் வாழ்ந்தவர் இவர்.<br /><br />முத்துத்தாண்டவரின் பாடல்களில் நான் கேட்டுச் சுவைத்தவையில் சில:<br />சேவிக்க வேண்டுமய்யா சிதம்பரம் - ஆந்தோளிகா<br />ஈசனே கோடி சூரிய பிரகாசனே - நளினகாந்தி<br />ஆடிக்கொண்டார் அந்த வேடிக்கை காண - மாயாமாளவகௌளை<br /><br />'ஆடிக்கொண்டார்' பாடலை இங்கு, திருமதி.சுதா ரகுநாதன் அவர்கள் பாடிடக் கேட்கலாம்:<br />MusicIndiaOnline தளச் சுட்டி <a href="http://www.musicindiaonline.com/p/x/RJb2vzBVCd.As1NMvHdW/">இங்கே</a>.<br /><br /><span style="font-size:180%;">மா</span>ரிமுத்தாப்பிள்ளை அவர்களும் தில்லை நடராஜப் பெருமான் மீது பல பாடல்களை இயற்றியுள்ளார். இவரது காலம் 1712 முதல் 1787 வரையாகும். இவரது தில்லைப் பாடல் தொகுதிக்குப் பெயர் 'புலியூர் வெண்பா' ஆகும்.<br /><br />இவர் இயற்றிய பாடல்களில் சில:<br />காலைத் தூக்கி நின்றாடும் தெய்வமே - யதுகுல காம்போஜி<br />தரிசித்தளவில் - லதாங்கி<br />இன்னமும் ஒரு தலம் இருக்கும் - சுருட்டி<br /><br />'இன்னமும் ஒரு தலம்' பாடலில், சிதம்பரத் தலத்தின் பெருமையை எங்கனம் எடுத்துரைக்கிறார் பார்ப்போம். எத்தனைத் தலம் இருந்தாலும், சிவகாமி அன்பில் உறை சிற்சபை வாசனின் தில்லைத் தலத்திற்கு ஈடான தலமுண்டோ என வினா எழுப்பி, அதற்கான விடையும் தருகிறார். வெண்மதியும், தாமரையும், கற்பக மரமும் எப்படித் தனித்துவம் வாய்ந்ததாய் அவனியிலே திகழ்கிறதோ, அப்படியே, புண்டரீகபுரம் எனச்சொல்லப்படும் தில்லைச் சிதம்பரம் என்கிறார்.<br /><br /><span style="font-weight: bold;"><u>விருத்தம்:</u></span><br />கற்பூரமும்....<br /><a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgxFJYp1VqR51GQA0EtB8gstc1O9TnAWfnMvnamhX2bAf5L-9MivUuVgLDa-PScPzqrbOl1s_IzQfue3ifx3zyDkZtk5DPLe-mrdtL024qDZkuWOciXqSWPMSr-BH0l95vC3BKYIQ/s1600-h/NatarajaHA.jpg"><img style="margin: 0pt 0pt 10px 10px; float: right; cursor: pointer;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgxFJYp1VqR51GQA0EtB8gstc1O9TnAWfnMvnamhX2bAf5L-9MivUuVgLDa-PScPzqrbOl1s_IzQfue3ifx3zyDkZtk5DPLe-mrdtL024qDZkuWOciXqSWPMSr-BH0l95vC3BKYIQ/s320/NatarajaHA.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5229164628773520450" border="0" /></a><br /><span style="color: rgb(255, 0, 0);">உப்பும் கற்பூரமும் ஒன்றைப்போல் இருந்தாலும்</span><br /><br /><span style="color: rgb(255, 0, 0);">ஊரெங்கும் பெரிதாய் கற்பூரம் தனைச் சொல்வாரே...!</span><br /><br /><span style="color: rgb(255, 0, 0);">அப்படிப்போல அனேகத்தலம் இருந்தாலும், அந்த</span><br /><br /><span style="color: rgb(255, 0, 0);">அல்லல் வினைத் தொலைக்கும் தில்லைப்பதிக்கு நேரோ...?</span><br /><br /><span style="font-weight: bold;"><u>எடுப்பு:</u></span><br /><span style="color: rgb(0, 153, 0);">இன்னமும் ஒரு தலம் இருக்கும் என்றொருகாலே,</span><br /><br /><span style="color: rgb(0, 153, 0);">ஏன் மலைக்கிறாய் மனமே?</span><br /><br /><span style="font-weight: bold;"><br /><u>தொடுப்பு:</u></span><br /><span style="color: rgb(0, 0, 153);">சொன்ன சொன்ன தலங்கள் எங்கும் ஓடிக்களைத்து</span><br /><br /><span style="color: rgb(0, 0, 153);">சோதித்தறிந்தால், இந்த ஆதிசிதம்பரம் போல்</span><br /><br /><span style="color: rgb(0, 0, 153);">(இன்னமும் ஒரு தலம்...)</span><br /><br /><span style="font-weight: bold;"><u>முடிப்பு:</u></span><br /><span style="color: rgb(255, 102, 0);">விண்ணுலகத்தில் நீ(ள்)நிலமெலாம் கூடினும்</span><br /><br /><span style="color: rgb(255, 102, 0);">வெண்ணிறமாம் ஒரு தண்மதி முன்னில்லாது</span><br /><br /><span style="color: rgb(255, 102, 0);">தண்ணுலவிய அல்லித் திரளாய்ப் பூத்தாலும்</span><br /><br /><span style="color: rgb(255, 102, 0);">ஒருதாமரைக்கு ஒவ்வாது</span><br /><br /><span style="color: rgb(255, 102, 0);">மண்ணுலகத்தில் உள்ள தருக்கள் அனைத்தும் கூடி</span><br /><br /><span style="color: rgb(255, 102, 0);">மருவுலவும் கற்பகத் தருவுக்கு இணை வராது</span><br /><br /><span style="color: rgb(255, 102, 0);">புண்ணிய தலங்கள் பல இருந்தாலும் நடேசன் வாழும்</span><br /><br /><span style="color: rgb(255, 102, 0);">புண்டரீகபுரம் போல் கண்டுசொல்ல வேறேது?</span><br /><span style="color: rgb(255, 102, 0);">(இன்னமும் ஒரு தலம்...)</span><br /><br /><br />இங்கே இந்தப் பாடலை இசைப்பேரொளி திரு.சஞ்சய் சுப்ரமணியம் பாடிடக் கேட்கலாம்:<br /><br /><object height="344" width="425"><param name="movie" value="http://www.youtube.com/v/Xi3bYcDgtNA&hl=en&fs=1"><param name="allowFullScreen" value="true"><embed src="http://www.youtube.com/v/Xi3bYcDgtNA&hl=en&fs=1" type="application/x-shockwave-flash" allowfullscreen="true" height="344" width="425"></embed></object><br /><br />அந்த கடைசி இரண்டு வரிகளை சஞ்சய் பாடிட எப்படியெல்லாம் மனம் இளகுகிறது!<br />*கண்டுசொல்ல வேறேது?* கண்ணுக்கினியனாய், கண் கண்ட தெய்வமாய் காலைத்தூக்கி ஆடும் கனகசபாபதிக்கு நேர் ஏதுவென நேர்ந்திடும் நம் மனம் நெகிழ்ந்திடுதே இப்பாடல் கேட்டு!<br /><br /><a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg14IMmBkSbJORLp3j9UKqhJEM76z5pz6SPVgE1K40GM0X_ng1AQJP_TRsf2jgoPpQTlKGeSTR6abmvnyfAt0rHyF1oZ2p8zrbEslDg3zbXzqkkiZWWywNOP_5VNPpECR-mvTiOWw/s1600-h/arunachalakavirayar_small.jpg"><img style="margin: 0pt 0pt 10px 10px; float: right; cursor: pointer;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg14IMmBkSbJORLp3j9UKqhJEM76z5pz6SPVgE1K40GM0X_ng1AQJP_TRsf2jgoPpQTlKGeSTR6abmvnyfAt0rHyF1oZ2p8zrbEslDg3zbXzqkkiZWWywNOP_5VNPpECR-mvTiOWw/s320/arunachalakavirayar_small.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5237868060669818994" border="0" /></a> <span style="font-size:180%;">அ</span>ருணாசலக் கவிராயர் (1711-1779) தில்லையாடியில் பிறந்து சீர்காழியில் வாழ்ந்தவர். பல இசைப்பாடல்கள் இயற்றியும் பாடியும் பெரும்புகழ் பெற்றவர். இவரது ஆக்கங்களில் முக்கியமாக குறிப்பிடப் பட வேண்டியது, '<span style="font-weight: bold; color: rgb(51, 0, 51);">இராம நாடகக் கீர்த்தனம்</span>' எனப்படும் இசைக் காவியம். இராமயணத்தில் வரும் முக்கிய நிகழ்சிகளை மையமாக வைத்துக்கொண்டு, அவற்றை கீர்த்தனைப் பாடல்களாக இயற்றியுள்ளார். இப்பாடல்களை இவர் இயற்றியும், தன் உதவியாளர்களைக் கொண்டு அவற்றுக்கு இசை அமைத்தும், இவற்றை மக்களிடையே பரப்பினார். நடனம் மற்றும் நாட்டிய நாடகங்களிலும், கச்சேரிகளிலும் இன்றளவும் இப்பாடல்களைப் பாடக் கேட்கலாம். கம்பரைப்போலவே, இவரும் தனது இராம நாடகக் கீர்த்தனையை <span style="color: rgb(204, 0, 0); font-weight: bold;">திருவரங்கக் கோயிலில் </span>அரங்கேற்றினார் என்பது குறிப்பிடத் தக்கது. இந்த அரங்கேற்றத்தின் போது பாடியதுதான் புகழ்பெற்ற 'ஏன் பள்ளி கொண்டீரய்யா' பாடல். '<span style="color: rgb(0, 102, 0);">கடன்பட்டார் நெஞ்சம்போல் கலங்கினான் இலங்கை வேந்தன்</span>' போன்ற புகழ் பெற்ற வரிகளுக்குச் சொந்தக்காரர் கவிராயர்.<br /><br />முன்னொரு முறை தஞ்சைக் கோட்டையை ஆற்காடு நவாபின் படைகள் முற்றுகை இட்டபோது, தஞ்சைப்படையினருக்கு, மன உறுதியையும், ஊக்கத்தையும் தருவதற்காக, அருணாசலக் கவியாரை அழைத்து சிப்பாய்களுக்கு முன்னால் பாடச் சொன்னார்களாம். அவரும் 'அனுமன் விஜயம்' என்கிற தலைப்பில் சொற்பொழிவாற்றி, 'அந்த ராவணனைக் கண்டு சும்மா போனால், என்ன அனுமன் நானே?' என்ற அடாணா கீர்த்தனத்தைப் பாடியபோது வீரர்களிடையே ஓர் எழுச்சி ஏற்பட்டதாம். தொடர்ந்து,<br />'அடிக்காமலும், கைகளை<br />ஒடிக்காமலும், நெஞ்சிலே<br />இடிக்காமலும், என் கோபம்<br />முடிக்காமலும் போவேனோ?'<br />என்று பாடியபோது, வீரர்கள் எழுந்து ஆரவாரம் செய்தனராம்.<br />"<span style="font-weight: bold; color: rgb(153, 0, 0);">ராமசாமியின் தூதன் நானடா ராவணா</span>!", என்று மோகனராகத்தில் பாடியபோது, அனேக வீரர்கள் வீர உணர்ச்சியில் மூழ்கிப்போயினராம். பின்னர் நடந்த போரில், தஞ்சை வீரர்கள், 'பாய்ந்தானே அனுமான்', என்ற வாக்கியத்தையே படைமுழக்கமாக முழக்கிக்கொண்டு எதிரிகளின்மீது பாய்ந்து வெற்றி பெற்றதும் வரலாறு.<br /><br />சீர்காழிக் கலம்பகம், சீர்காழி அந்தாதி, தியாகராசர் வண்ணம், சம்பந்தர்பிள்ளைத் தமிழ், சீர்காழி புராணம், சிர்காழிக்கோவை, அனுமான் பிள்ளைத் தமிழ், அசோமுகி நாடகம் என்பன இவர் இயற்றிய இதர நூல்கள்.<br /><br />இவரது பாடல்களில் என் மனதைக் கவர்ந்தவை:<br /><ul><li>ஏன் பள்ளி கொண்டீர் ஐயா - ஸ்ரீ ரங்கநாதரே நீர், ஏன் பள்ளி கொண்டீர் ஐயா.<br />இராகம் : மோகனம், தாளம் : ஆதி<br />பாடுபவர் : சுதா ரகுநாதன்<br />பாடலை <a href="http://www.musicindiaonline.com/p/x/jUQ2fEYj_d.As1NMvHdW/">இங்கு</a> கேட்கலாம்.<br /><br /></li><li>ஆரோ இவர் ஆரோ - என்ன பேரோ அறியேனே<br />இராகம் : பைரவி, தாளம் : ஆதி<br />பாடுபவர் : எம்.எஸ்.சுப்புலஷ்மி<br />பாடலை <a href="http://www.musicindiaonline.com/p/x/-qX2d--KYS.As1NMvHdW/">இங்கு</a> கேட்கலாம்.<br /><br /></li><li>கண்டேன் கண்டேன் கண்டேன் சீதையை, இராகவா<br />இராகம் : வசந்தா, தாளம் : ஆதி<br />பாடுபவர் : சௌம்யா<br />பாடலை <a href="http://www.musicindiaonline.com/p/x/uJp2INScHS.As1NMvHdW/">இங்கு</a> கேட்கலாம்.<br /><br /></li><li>இராமனுக்கு மன்னன் முடி தரித்தாலே, நன்மையுண்டொருகாலே<br />இராகம் : ஹிந்தோளம், தாளம் : ஆதி<br />பாடுபவர் : நித்யஸ்ரீ மஹாதேவன்<br />பாடலை <a href="http://www.musicindiaonline.com/p/x/wqm2TgTiGt.As1NMvHdW/">இங்கு</a> கேட்கலாம்.<br /><br /></li></ul>பொதுவாக கச்சேரியின் இறுதியில் மங்களப் பாடலாக 'நீ நாம ரூபமுலகு நித்திய ஜய மங்களம்' அல்லது 'பவமான சுதடு படு பாதார விந்த முலகு' பாடலையோ பாடுவார்கள். அருணாசலக்கவிராயரோ இசை நிகழ்ச்சிகளில் பாடி நிறைவு செய்வதற்காகவே தமிழில் அருமையான ஒரு மங்களப்பாடலைத் தந்துள்ளார்:<br /><br /><u style="color: rgb(0, 153, 0);">எடுப்பு / பல்லவி</u><br /><span style="color: rgb(0, 51, 0);">ஸ்ரீராமச் சந்திரனுக்கு ஜய மங்களம்- நல்ல</span><br /><span style="color: rgb(0, 51, 0);">திவ்விய முகச் சந்திரனுக்கு சுப மங்களம்</span><br /><br /><u style="color: rgb(0, 153, 0);">தொடுப்பு / அனுபல்லவி</u><br /><span style="color: rgb(0, 0, 153);">மாராபி ராமனுக்கு மன்னு பரந்தாமனுக்கு</span><br /><span style="color: rgb(0, 0, 153);">ஈராறு நாமனுக்கு இரவிகுல சோமனுக்கு</span><br /><br /><u style="color: rgb(0, 153, 0);">முடிப்பு </u><br />(சஹானா சரணம்)<br /><span style="color: rgb(102, 0, 0);">கொண்டல் மணி வண்ணனுக்கு கண்ணனுக்கு மங்களம் </span><br /><span style="color: rgb(102, 0, 0);">கோசலை குமாரனுக்கு வீரனுக்கு மங்களம்</span><br /><span style="color: rgb(102, 0, 0);">புண்டரீக தாளனுக்கு பூச்சக்கர வாளனுக்குத்</span><br /><span style="color: rgb(102, 0, 0);">தண்டுளுவதோளனுக்கு</span><br /><span style="color: rgb(102, 0, 0);">ஜானகி மனாளனுக்கு</span><br /><span style="color: rgb(102, 0, 0);">ஸ்ரீராமச் சந்திரனுக்கு ஜய மங்களம்.</span><br />(மத்யமாவதி சரணம்)<br /><span style="color: rgb(0, 0, 153);">பகிரண்டநாதனுக்கு வேதனுக்கு மங்களம்</span><br /><span style="color: rgb(0, 0, 153);">பரதனாம் அன்பனுக்கு முன்பனுக்கு மங்களம்</span><br /><span style="color: rgb(0, 0, 153);">சகல உல்லாசனுக்குந் தருமந்தஹாசனுக்கு</span><br /><span style="color: rgb(0, 0, 153);">அகில விலாசனுக்கு அயோத்யாவாசனுக்கு </span><br /><span style="color: rgb(0, 0, 153);">ஸ்ரீராமச் சந்திரனுக்கு ஜய மங்களம்.</span>jeevagvhttp://www.blogger.com/profile/02747964167117423246noreply@blogger.com7tag:blogger.com,1999:blog-36268584.post-83006201810780328322008-09-22T19:56:00.003-05:002009-01-16T14:55:20.044-05:00புதிரா? புனிதமா?? - தமிழ்ச் சினிமாவில் குன்னக்குடி வைத்தியநாதன்!<p>முடிவுகள் அறிவிச்சாச்சே! விடைகள் கீழே போல்டு செய்யப்பட்டுள்ளன!<br /><br /><strong><u>வெற்றியாளர்கள்:</u></strong> (அனைத்து விடைகளையும் சரியாகச் சொன்னவர்கள்):<br />1. தியாகராஜன்<br />2. ஜிரா<br />3. முகிலரசி-தமிழரசன்<br />4. ப்ரசன்னா<br />5. திராச<br /><br />வென்றவர்க்கு வாழ்த்துக்கள் என்று மட்டும் சொல்லிக் கொண்டு,<br /><strong>ஐயா குன்னக்குடி அவர்களின் இன்னுயிர், அவர் மிகவும் போற்றி வணங்கிய முருகப் பெருமான் திருவடிக் கழல்களில் இளைப்பாறி, காற்சிலம்பு கிண்கிணி கீதமாய் இசைக்க அஞ்சலிகள்!</strong><br /></p><hr size="0"><br /><br />மக்கள்ஸ்! இன்று, புதிரா புனிதமா, மாதவிப் பந்தலில் இருந்து, கொஞ்சம் இசை இன்பத்திற்கு ஷிஃப்டு ஆகிறது! அண்மையில் (Sep 8, 2008) மறைந்த இசைக் கலைஞர், பத்ம ஸ்ரீ, <strong>ஐயா குன்னக்குடி வைத்தியநாதன் அவர்கள் நினைவாக ஒரு சிறப்புப் புதிரா புனிதமா!<br /></strong>குன்னக்குடி பற்றி ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பார்வை! அதுவே அவரின் பெரிய வெற்றியும் கூட!<br /><br />* அவர் நெற்றியில் திருநீறும் குங்குமமும், அவர் ஜிலுஜிலு சட்டைகளும், அவர் செய்யும் அங்க சேட்டைகளும், குழந்தைகளை மட்டுமில்லை, இக்கால இளைஞர்களையும் வெகுவாகவே கவரும்! :)<br /><strong>அவர் கச்சேரியில் செவிக்கு மட்டும் விருந்து இல்லை! கண்களுக்கும் விருந்து தான்! :)</strong><br /><br />* அவர் இசை, பலதரப்பட்ட ரசிகர்களைக் கவர்ந்திழுக்கும்! தூய இசை வல்லுனர்கள், குன்னக்குடி செய்யும் வித்தைகளை ஒப்பா விட்டாலும், குன்னக்குடியின் ஜனரஞ்சகத்தையோ, இசை எளிமையையோ மறுக்கவே முடியாது!<br /><strong>மெல்லிசைக்கும், மேடை இசைக்கும் பாலம் போட்டவர் குன்னக்குடி!</strong><br /><br /><br /><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjK-_yLw1CjNNTMbGZYGLhMAjSydaUPXRw4pqitkcNY_8qoht_NimQjZCUY-jfM-vjc50pqHcRr9tPg08Mj95KYPHxpDk1f_c6Xx8puiwc6e9icHBjq3nrDE1ddqnwaX_mc8M6_/s1600-h/photoenlarge06.jpg"><img id="BLOGGER_PHOTO_ID_5249012296109477058" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; CURSOR: hand; TEXT-ALIGN: center" alt="" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjK-_yLw1CjNNTMbGZYGLhMAjSydaUPXRw4pqitkcNY_8qoht_NimQjZCUY-jfM-vjc50pqHcRr9tPg08Mj95KYPHxpDk1f_c6Xx8puiwc6e9icHBjq3nrDE1ddqnwaX_mc8M6_/s320/photoenlarge06.jpg" border="0" /></a><br />* வயலின் என்றால், ஏதோ தலைவர்கள் மறையும் போது மட்டும் தொலைக்காட்சியில் வாசிப்பது என்று இருந்த ஒரு நிலையை மாற்றிக் காட்டியவர் குன்னக்குடி!<br /><strong>வயலின் என்னும் பக்க வாத்தியம், பக்கா வாத்தியம் ஆனது!</strong><br /><br />* சின்ன வயலினுக்கு, பெரிய தவில் என்ற நினைத்துப் பார்க்க முடியாத ஜோடிப் பொருத்தம் எல்லாம் ஏற்படுத்திக் காட்டிய Experimenter தான் குன்னக்குடி!<br /><br />*<strong> தமிழிசைக்கு அவர் ஆற்றிய பணி அளவில்லாதது!</strong> தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத் தலைவராகவும் இருந்திருக்கிறார்! திருவையாறு தியாகராஜ ஆராதனையை பல ஆண்டுகள் நன்முறையில் நடத்திக் காட்டியவரும் கூட!<br /><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjW_6qjDWBpOWMmhWgLh_WC6npY94YN1VV5qBYFjJVGyN5yzZU5khrjY3q6mcm1H12vnNfhyphenhyphenqY0a7e54GHOudwey-rCt7DUVZIBbiCP2I4ZlrVnI9kJ74gy1LniG-9gDUWTgKEI/s1600-h/photoenlarge17.jpg"><img id="BLOGGER_PHOTO_ID_5249012297881307874" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; CURSOR: hand; TEXT-ALIGN: center" alt="" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjW_6qjDWBpOWMmhWgLh_WC6npY94YN1VV5qBYFjJVGyN5yzZU5khrjY3q6mcm1H12vnNfhyphenhyphenqY0a7e54GHOudwey-rCt7DUVZIBbiCP2I4ZlrVnI9kJ74gy1LniG-9gDUWTgKEI/s320/photoenlarge17.jpg" border="0" /></a><br />புகழில் சிக்கிய குன்னக்குடி, சர்ச்சைகளிலும் சிக்கிக் கொள்வதில் வல்லவர்!<br />திரைப்பட நடிகை சுகன்யா-வை வைத்து அவர் ஒரு படம் எடுத்து, அது வெளி வராமலே போனது-ன்னு நினைக்கிறேன்! அதில் சுகன்யா-வை, தியாகராஜ ஆராதனைப் பந்தலில் உட்கார வைத்துத் தனியாக ஒளிப்பதிவு செய்தது, பெரும் கலாட்டா ஆனது! :)<br /><br />எது எப்படியோ, குறைகளும் நிறைகளும் உள்ளவர்கள் தான் இசைக் கலைஞர்களும்! குணம் நாடிக் குற்றமும் நாடி, அவற்றுள் மிகை நாடி, மிக்க கொளல் வேண்டும்!<br />கர்நாடக/தமிழிசைகளை எளிய மக்களும் ரசிக்கச் செய்து, அவற்றை <strong>இலக்கண இசையாய் மட்டும் இல்லாமல், மக்கள் இசையாக்கிய மாபெரும் கலைஞரை, வணங்கி மகிழ்வோம்!<br /></strong><br />சென்னை புரசைவாக்கத்தில், எங்கள் தெருவில், கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தை என்று அவர் வாசித்த போது,<br />சாமியே சரணம் ஐயப்பா என்ற சரண கோஷத்தையும் வயலினில் விரலை வளைத்தே கொடுத்த அட்டகாசம் இன்றும் என் நினைவில் இருக்கு!<br /><br />அவர் மறைந்த போது, இசை இன்பம் வலைப்பூவில் அஞ்சலிப் பதிவு ஒன்று இட எண்ணி இருந்தேன். வேறு பல காரணங்களால் இட முடியாமற் போனது. அதான் இப்போ இந்தப் புதிரா புனிதமா? <strong>பார்க்கலாம், தமிழ் சினிமா ரசிகர்கள், குன்னக்குடியை எத்தனை தூரம் அறிந்திருக்கிறார்கள் என்று!<br /><br />ஓவர் டு குன்னக்குடி! விடைகள், நாளை இரவு (நியூயார்க் நேரப்படி)!</strong><br /><hr size="0"><br /><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgdR_IPLuF2BG0B6kVpAI8GAhkO2ihv8yhPErBI_TGL-q_tY0rmtn6nWeAjZeFPomF4qEVHqwzOVfvNse5t3f6y9lIIBPB3DiviWG0Olzn_2mjXTSRLdcYcENT7SB7LucApnYSw/s1600-h/kunnakudi.jpg"><img id="BLOGGER_PHOTO_ID_5249012300945922594" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; CURSOR: hand; TEXT-ALIGN: center" alt="" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgdR_IPLuF2BG0B6kVpAI8GAhkO2ihv8yhPErBI_TGL-q_tY0rmtn6nWeAjZeFPomF4qEVHqwzOVfvNse5t3f6y9lIIBPB3DiviWG0Olzn_2mjXTSRLdcYcENT7SB7LucApnYSw/s320/kunnakudi.jpg" border="0" /></a><br /><table bordercolor="silver" cellspacing="0" cellpadding="0" width="90%" align="center" border="1" valign="top"><tbody><tr><td valign="top">1</td><td valign="top"><p><strong>புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் நடித்த ஒரு படத்துக்கு, குன்னக்குடி தான் இசை.</strong></p><p>படத்தில் கர்நாடக இசைப் பாடல்களைக் கேலி பேசும் நவநாகரீகப் பெண்மணிகளுக்குப் போட்டியாகச் சில தியாகராஜ கீர்த்தனைகளை மேற்கத்திய இசையில் பாடுவார் எம்.ஜி.ஆர்! :))</p><p>ட்யூன் போட்டது சாட்சாத் நம்ம குன்னக்குடி தான்! என்ன படம்? - சாரி, நோ சாய்ஸ்! :)</p></td><td valign="top"><p><span style="color:#3333ff;">1 </span></p><p><span style="color:#3333ff;"><strong>நவரத்தினம்</strong></span></p><p><span style="font-size:85%;color:#3333ff;">எம்.ஜி.ஆர்-உடன், ஒன்பது கதாநாயகிகள்-ன்னு நினைக்கிறேன்! லதா, ஜெயசித்ரா, ஸ்ரீப்ரியா, ஜரீனா வகாப் -ன்னு பட்டாளம்! பின்னூட்டத்தில் மற்ற தகவல்களைச் சொல்கிறேன்!</span></p></td></tr><tr><td valign="top">2</td><td valign="top"><p>கொட்டாம் பட்டி ரோட்டிலே, குட்டி போற ஷோக்கிலே, நான் ரொட்டியைத் தான் தின்பேனா? குட்டியைத் தான் பார்ப்பேனா-ன்னு ஒரு சரி குத்துப் பாட்டைப் போட்டாரு குன்னக்குடி! வழக்கம் போல பயங்கர எதிர்ப்பு! :)</p><p><strong>அதுவும் ஒரு இசைக் கலைஞரைக் கதாநாயகனாகக் காட்டும் படம்! என்ன படம்?</strong></p></td><td valign="top"><p><span style="color:#3333ff;">2</span></p><p><span style="color:#3333ff;">அ) வா ராஜா வா</span></p><p><span style="color:#3333ff;"><strong>ஆ) தோடி ராகம்</strong></span></p><p><span style="color:#3333ff;">இ) உன்னால் முடியும் தம்பி</span></p><p><span style="color:#3333ff;">ஈ) சிந்து பைரவி</span></p></td></tr><tr><td valign="top">3</td><td valign="top"><p><strong>திருப்பதி மலை வாழும் வேங்கடேசா - சீர்காழி பாட, குன்னக்குடி இசையமைத்த பாட்டு!</strong> திருமலை தென்குமரி என்னும் படத்தில்!</p><p>பாட்டுக்காக கோயில் மணிகளை ஸ்டூடியோ முழுக்க அதிர விடுவாராம் குன்னக்குடி! நடு நடுவில் சுலோகங்களை வயலினில் வாசித்துக் காட்ட, உடனுக்குடன் சீர்காழி பாடினாராம்! </p><p>என்ன சுலோகத்தை வாசித்துக் காட்டினார்?</p></td><td valign="top"><p><p><span style="color:#3333ff;">3</span></p><p><span style="color:#3333ff;">அ) பல்லாண்டு-பல்லாண்டு</span></p><p><span style="color:#3333ff;">ஆ) புருஷ சூக்தம்</span></p><p><span style="color:#3333ff;"><strong>இ) சுப்ரபாதம்</strong></span></p><p><span style="color:#3333ff;">ஈ) விஷ்ணு சகஸ்ரநாமம்</span></p><p></p><p></p></td></tr><tr><td valign="top">4</td><td valign="top"><p><strong>மருதமலை மாமணியே முருகய்யா! - இதுக்கும் குன்னக்குடி தான் இசை!</strong> மெட்டுக்குப் பாட்டு எழுதாத கவிஞர் ஒருவர், குன்னக்குடி வயலினில் போட்டார் என்பதற்காகவே, மெட்டு போட்ட அடுத்த நிமிஷம், சுடச்சுட பாட்டும் எழுதிக் கொடுத்தாராம்!</p><p>தத்தித் தரிகட, தத்தித் தரிகிட தோம் தோம் - சத்தித் திருமகன், முத்துக் குமரனை மற வேன்! யான் மறவேன்! -<strong> யார் அந்தக் கவிஞர்?</strong></p></td><td valign="top"><p><span style="color:#3333ff;">4</span></p><p><span style="color:#3333ff;">அ) வாலி</span></p><p><span style="color:#3333ff;"><strong>ஆ) கண்ணதாசன்</strong></span></p><p><span style="color:#3333ff;">இ) பூவை செங்குட்டுவன்</span></p><p><span style="color:#3333ff;">ஈ) குன்னக்குடி வைத்தியநாதன்</span></p></td></tr><tr><td valign="top">5</td><td valign="top"><p>சென்னையில் தண்ணீர் பஞ்சம் வந்த போது, புழல் ஏரியில் நின்னு வயலின் வாசிச்சார் குன்னக்குடி! ஓரளவு மேகம் திரண்டு, மழையும் பெய்தது! </p><p><strong>அவர் வாசிச்ச மழை தருவிக்கும் ராகத்தின் பெயர் என்ன?</strong></p></td><td valign="top"><p><span style="color:#3333ff;">5 </span></p><p><span style="color:#3333ff;">அ) கல்யாணி</span></p><p><span style="color:#3333ff;">ஆ) மேக சந்தேசம்</span></p><p><span style="color:#3333ff;">இ) சங்கராபரணம்</span></p><p><span style="color:#3333ff;"><strong>ஈ) அம்ருத வர்ஷிணி</strong></span></p></td></tr><tr><td valign="top">6</td><td valign="top"><p><strong>திருப்பரங்குன்றத்தில் நீ சிரித்தால் முருகா, திருத்தணி மலை மீது எதிரொலிக்கும்!</strong> - இந்தப் பாட்டு முதலில் சினிமாப் பாட்டே அல்ல! குன்னக்குடி தன்னோட ஆல்பம் ஒன்றுக்காக இசையமைத்த பாட்டு! ஆனால் சினிமாவுக்கென்று குன்னக்குடி முதலில் "கொடுத்த" பாட்டு முருகன் பாட்டாக அமைந்ததும் முருகனருள் தான்!</p><p>கவிஞர் பூவை செங்குட்டுவனை, முருகா முருகா என்று வருமாறு பாட்டு போடச் சொன்னாராம் குன்னக்குடி! கவிஞரோ அப்போது நாத்திகர்! கொஞ்சம் தயங்கினாரு போல! ஆனால் குன்னக்குடி கேட்டாரே-ன்னு, பாட்டை எழுதிட்டாரு! சூலமங்கலம் சகோதரிகளும் பாடிட்டாங்க! </p><p>இந்த ஆல்பத்தை எங்கேயோ கேட்ட கண்ணதாசன், மெல்லிய இசையில் கிறங்கிப் போய், ஏ.பி நாகராஜனிடம் போட்டுக் கொடுக்க, குன்னக்குடியும் மனம் உவந்து, பாட்டைக் கந்தன் கருணை சினிமாவுக்குக் கொடுத்து விட்டார்! </p><p><strong>சினிமாவில் பாட்டைப் பாடிய வள்ளி-தேவயானை ஜோடி யார்?</strong></p></td><td valign="top"><p><span style="color:#3333ff;">6 </span></p><p><span style="color:#3333ff;">அ) சூலமங்கலம் ராஜலட்சுமி-ஜெயலட்சுமி</span></p><p><span style="color:#3333ff;"><strong>ஆ) சூலமங்கலம் ராஜலட்சுமி - பி.சுசீலா</strong></span></p><p><span style="color:#3333ff;">இ) சூலமங்கலம் ஜெய்லட்சுமி - எஸ். ஜானகி</span></p><p><span style="color:#3333ff;">ஈ) சூலமங்கலம் ஜெய்லட்சுமி - வாணி ஜெயராம்</span></p></td></tr><tr><td valign="top">7</td><td valign="top"><strong>அந்நியன் படத்தில், குன்னக்குடி ஒரு சீனில் தோன்றுவார்! எந்த சீன்?</strong> </td><td valign="top">7 <p><span style="color:#3333ff;">அ) சபா கச்சேரி சான்ஸ் கேட்டு வரும் விக்ரம் சீன்</span> </p><p><span style="color:#3333ff;">ஆ) விவேக் காமெடி செய்யும் ரயில் வண்டி சீன்</span></p><p><span style="color:#3333ff;"><strong>இ) திருவையாறு ஆராதனை சீன்</strong></span></p><p><span style="color:#3333ff;">ஈ) பிரகாஷ் ராஜ் மாறு வேடம் போட்டுக் கொண்டு விவேக்குடன் அம்பி வீட்டுக்கு வரும் சீன்! </span></p></td></tr><tr><td valign="top">8</td><td valign="top"><p>COLORS என்ற ஒரு ஆல்பம்! இதில் வயலின்-தபேலா என்று ஒரு Fusion! (தொகுப்பிசை).</p><p><strong>குன்னக்குடியும், ஜாஹீர் உசேனும் செய்த இந்த ஆல்பத்துக்கு, கீ-போர்ட் வாசித்த பிரபலம் யார்?</strong> அவர் அப்போதைய பெயர் என்ன? - சாரி நோ சாய்ஸ்! :)</p><p></p></td><td valign="top">8 </span><p></p><p><span style="color:#3333ff;"><strong>இன்றைய ஏ.ஆர்.ரகுமான்</strong></span></p><p><span style="color:#3333ff;"><strong>அன்றைய திலீப் குமார்</strong></span></p></td></tr><tr><td valign="top">9</td><td valign="top"><strong>குன்னக்குடி தானே "கண்டுபிடிச்ச" ராகத்தின் பெயர் என்ன?</strong> :)</td><td valign="top"><p><span style="color:#3333ff;">9</span></p><p><span style="color:#3333ff;">அ) மஹதி</span></p><p><span style="color:#3333ff;">ஆ) ராமச்சந்திரிகா</span></p><p><span style="color:#3333ff;"><strong>இ) ஜெயலலிதா</strong></span></p><p><span style="color:#3333ff;">ஈ) இளையராகம்</span></p></td><tr><td valign="top">10</td><td valign="top"><p>சினிமாவில் பாடகர்கள் முகம் காட்டுவது என்பது கொஞ்சம் அரிதான விஷயம் தான்! குன்னக்குடி, தான் இசையமைத்த பல படங்களில், தன்னை மட்டும் முன்னிறுத்திக் கொள்ளாது, தன் அணியினரையும் முன்னிறுத்துவார்! புகழ்ச்சி விரும்பி என்று அவரைப் பல பேர் சொன்னாலும், அவரின் இந்த நல்ல முகத்தை மட்டும் பார்க்க அவர்கள் மறந்து விடுகின்றனர்!</p><p>பித்துக்குளி முருகதாஸ், சீர்காழி, டி.எம்.எஸ், ரமணி அம்மாள், மதுரை சோமு என்று <strong>குன்னக்குடி இசையில் பாடிய அத்தனை பேரும் முகம் காட்டிய திரைப்படம் எது?</strong></p></td><td valign="top"><p><span style="color:#3333ff;">10</span></p><p><span style="color:#3333ff;">அ) கந்தன் கருணை</span> </p><p><span style="color:#3333ff;"><strong>ஆ) தெய்வம்</strong></span> </p><p><span style="color:#3333ff;">இ) அகத்தியர்</span></p><p><span style="color:#3333ff;">ஈ) ராஜ ராஜ சோழன்</span></p></td></tr></tbody></table><p><hr size="0"><br />மருதமலை மாமணியே முருகய்யா, வயலினில்!<br /><object height="344" width="425"><param name="movie" value="http://www.youtube.com/v/htzqrzpDRnE&hl=en&fs=1"><param name="allowFullScreen" value="true"><br /> <embed src="http://www.youtube.com/v/htzqrzpDRnE&hl=en&fs=1" type="application/x-shockwave-flash" allowfullscreen="true" width="425" height="344"></embed></object><br /><br />ஒட்டகத்தைக் கட்டிக்கோ, வயலினில்!<br /><object height="344" width="425"><param name="movie" value="http://www.youtube.com/v/rDLKLLKJowY&hl=en&fs=1"><param name="allowFullScreen" value="true"><embed src="http://www.youtube.com/v/rDLKLLKJowY&hl=en&fs=1" type="application/x-shockwave-flash" allowfullscreen="true" width="425" height="344"></embed></object><br /><p></p><p>இது காப்பி பேஸ்ட் செய்யும் கண்மணிகளின் வசதிக்காக. விடைகளைக் கீழேயிருந்து காப்பி பேஸ்ட் செய்ய எளிதாக இருக்கும்! கலக்குங்க! </p><table bordercolor="silver" cellspacing="0" cellpadding="0" width="90%" align="center" border="1" valign="top"><tbody><tr><td><p>1 </p></td></tr><tr><td><p>2 அ) வா ராஜா வா ஆ) தோடி ராகம் இ) உன்னால் முடியும் தம்பி ஈ) சிந்து பைரவி</p></td></tr><tr><td>3 அ) பல்லாண்டு-பல்லாண்டு ஆ) புருஷ சூக்தம் இ) சுப்ரபாதம் ஈ) விஷ்ணு சகஸ்ரநாமம்</td></tr><tr><td>4 அ) வாலி ஆ) கண்ணதாசன் இ) பூவை செங்குட்டுவன் ஈ) குன்னக்குடி வைத்தியநாதன்</td></tr><tr><td>5 அ) கல்யாணி ஆ) மேக சந்தேசம் இ) சங்கராபரணம் ஈ) அம்ருத வர்ஷிணி</td></tr><tr><td>6 அ) சூலமங்கலம் ராஜலட்சுமி-ஜெயலட்சுமி ஆ) சூலமங்கலம் ராஜலட்சுமி - பி.சுசீலா இ) சூலமங்கலம் ஜெய்லட்சுமி - எஸ். ஜானகி ஈ) சூலமங்கலம் ஜெய்லட்சுமி - வாணி ஜெயராம்</td></tr><tr><td>7 அ) சபா கச்சேரி சான்ஸ் கேட்டு வரும் விக்ரம் சீன் ஆ) விவேக் காமெடி செய்யும் ரயில் வண்டி சீன் இ) திருவையாறு ஆராதனை சீன் ஈ) பிரகாஷ் ராஜ் மாறு வேடம் போட்டுக் கொண்டு விவேக்குடன் அம்பி வீட்டுக்கு வரும் சீன்! </td></tr><tr><td>8 </td></tr><tr><td>9 அ) மஹதி ஆ) ராமச்சந்திரிகா இ) ஜெயலலிதா ஈ) இளையராகம்</td></tr><tr><td>10 அ) கந்தன் கருணை ஆ) தெய்வம் இ) அகத்தியர் ஈ) ராஜ ராஜ சோழன்</td></tr></tbody></table>Kannabiran, Ravi Shankar (KRS)http://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.com63tag:blogger.com,1999:blog-36268584.post-8840850521482166922008-07-23T19:58:00.011-05:002008-07-24T21:09:33.155-05:00அவளுக்கு இன்னொரு பெயர்... சிவரஞ்சனி!<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh0YPLNoR_9H9VR7lQp6yWH8vF63iNvLpOuYfBIfkuHQR-pVBNmFu14hHRq0dxLaMedTcHrnlLuyTwXdAmRmVfsxVKulXhGDvzZPwnyVYtU-Vl6Bgmqlk7VvJ7dSLtX6H1LJOXa/s1600-h/saraswathi%5B1%5D.jpg"><img id="BLOGGER_PHOTO_ID_5226050249196705650" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; CURSOR: hand; TEXT-ALIGN: center" alt="" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh0YPLNoR_9H9VR7lQp6yWH8vF63iNvLpOuYfBIfkuHQR-pVBNmFu14hHRq0dxLaMedTcHrnlLuyTwXdAmRmVfsxVKulXhGDvzZPwnyVYtU-Vl6Bgmqlk7VvJ7dSLtX6H1LJOXa/s400/saraswathi%5B1%5D.jpg" border="0" /></a><br />ஒவ்வொருவருக்கு ஒரு விதமாக அவள் காட்சியளிப்பாள்.<br /><br />தாயாக, சகோதரியாக, மனைவியாக, காதலியாக, மனைவியாக, அல்லது வழிப்பாதையில் கடந்து போகிற ஒர் அழகியாக, இப்படி அவளுக்குப் பல வடிவங்களுண்டு.<br /><br />என்னைப் பொறுத்தவரை அவள் என் காதலி.<br /><br />அதே போல அவளுக்குப் பல பெயர்களுமுண்டு.<br />அத்தனையையும் எழுதத் நினைத்தால் அவை முடிவில்லாது நீளும்.<br /><br />அவற்றில் எனக்கு மிகப் பிடித்த பெயர் சிவரஞ்சனி.<br /><br />பெயரைச் சொல்லிப் பார்த்தாலே,<br />நாவில் தேன் சொட்டி,<br />ஒரு பெயர் தெரியாத இனிய பூவின் வாசம் வந்து முகத்தில் மோதும்.<br /><br />ஒரு முறை கடுமையான ஜுரம் வந்து, ஹாஸ்பிட்டலில் அட்மிட் ஆகிக் குணமாகி வந்த போது,<br />உடனிருந்து என்னைக் கவனித்துக் கொண்ட அண்ணன் பிள்ளைகள் சேவியரும், சின்னக்குட்டியும், கண்சிமிட்டியபடிக் கேட்டார்கள்.<br />"எப்பாவ், யாருப்பா அது சிவரஞ்சனி?<br />நீ லவ் பண்ற ஆண்ட்டியா?"<br /><br />வெட்கத்தில் என் முகம் சிவந்தாலும், ஜுர வேகத்திலும் அந்தப் பெயரை அரற்றிக் கொண்டிருந்திருக்கிறேன் என்பது,<br />அப்போதுதான் உறைத்தது.<br /><br />அந்த சமயம், "சின்னக் குஷ்பூ" என்றழைக்கப்பட்ட, "சிவரஞ்சனி" என்றொரு நடிகை, மார்க்கெட் இழந்து கொண்டிருந்த நேரம்.<br /><br />இது அவரல்ல என்று புரிய வைக்க நான் பெரும் பாடுபட வேண்டியிருந்தது.<br /><br />சரி! என் சிவரஞ்சனியின் அழகையும், குணத்தையும், உங்களுக்கு வர்ணித்துக் காட்ட வேண்டிய நேரம் வந்து விட்டது.<br /><br />மொத்தம் ஐந்தே ஸ்வரங்கள்தான்.<br /><br />//ஷட்ஜமம், "ஸ"<br />சதுஸ்ருதி ரிஷபம், "ரி1"<br />சாதாரண காந்தாரம், "க"<br />பஞ்சமம், "ப"<br />சதுஸ்ருதி தைவதம். "த"//<br /><br />ஸ, ரி, க, ப, த, ஸ<br />ஸ, த, ப, க, ரி, ஸ<br /><br />சோகம், சுகம், இரண்டுக்குமே பொருத்தமானவள்.<br /><br />முன்பெல்லாம் என் கீபோர்டில் மனம் போன போக்கில், இலக்கின்றி, ஒரு தனிக் குயில் பாடுவதைப்போல இந்த குறிப்பிட்ட ஸ்வரங்களைத் தடவிக் கொண்டிருப்பேன்.<br /><br />ஐயோ! அந்த சமயங்களில் அவள் அழகு இருக்கிறதே....<br /><br />சர்வாலங்காரத்துடன், ஜெக, ஜெகவென்று....<br /><br />கண்மூடினால் இரண்டு மைதீட்டிய விழிகள்...<br />என்னை உள்ளுக்குள் துளைத்துக் கொண்டிருப்பதாய் உணர்ந்திருக்கிறேன்.<br /><br />என் உயிர் அப்போது கிறு கிறுத்துப் போய், மெழுகாய் உருகிக் கொண்டிருக்கும்.<br /><br />நான் மனம் நொந்து அழுத வேளைகளில் இந்த ஸ்வரங்களால்,<br />"உனக்கு நானிருக்கேண்டா என் செல்லமே!" என்று<br />இறுக அணைத்து, தலைதடவி, உச்சிமோந்து, ஆறுதலளித்திருக்கிறாள்.<br /><br />சந்தோஷமாயிருந்த வேளைகளில்,அதை என்னுடன் பகிர்ந்து கொண்டு, என் மனத்தினுள்,<br />என்னுடன் கைகோர்த்து ஆடிப் பாடி மகிழ்ந்திருக்கிறாள்.<br /><br />இப்போது அவளைக் குறித்து நீங்கள் அறிந்த திரை இசை உதாரணங்களுடன்...<br /><br />ஒருமுறை இப்படி கீபோர்டில் வாசித்துக் கொண்டிருக்கையில், என் மாமா<br />கேட்டார்.<br />"என்னப்பா! 'வசந்த மாளிகை-ல வர்ற, 'கலைமகள் கைப்பொருளே' பாட்டு மாதிரி இருக்கு?"<br /><br />அவருக்கு இசைபற்றி ஏதும் தெரியாவிட்டாலும், மிக நல்ல ரசிகர்.<br /><br />ஆம்....<br />என்னையே அறியாமல் நான் அந்தப் பாடலின் முதல் வரியைப் பிரயோகித்திருக்கிறேன்.<br /><br />அதற்குப் பிறகுதான் நான் அடிக்கடி ரசிக்கும் அந்தப் பாடலும் சிவரஞ்சனியினால், இழைக்கப் பட்ட தங்க விக்ரகம் என்பதை உணர்ந்தேன்.<br /><br />பி. சுசீலாவின் குரலில்...<br />ஏதோ ஒரு சொல்ல முடியாத ஏக்கத்தையும், சோகத்தையும் அந்தப் பாடல் பிரதிபலிக்கும்.<br /><br />கேட்டுப் பாருங்கள்.<br /><table bgcolor="#000000" cellpadding="0" cellspacing="0"><tr><td><embed quality="high" pluginspage="http://www.macromedia.com/go/getflashplayer" type="application/x-shockwave-flash" bgcolor="#000" width="328" height="94" src="http://www.esnips.com//escentral/images/widgets/flash/esnips_player.swf" flashvars="theTheme=blue&autoPlay=no&theFile=http://www.esnips.com//nsdoc/cfd7f971-d527-480e-b014-2a709d96a124&theName=VMaaligai-KalaimagalKaiPorule&thePlayerURL=http://www.esnips.com//escentral/images/widgets/flash/mp3WidgetPlayer.swf"></embed></td></tr><tr><td><table cellpadding="2" style="font-family:Verdana, Arial, Helvetica, sans-serif; padding-left:2px; color:#FFFFFF; text-decoration:none ; ; font-size:10px; font-weight:bold"><tr><td><a style="color:#FFFFFF; text-decoration:none " href="http://www.esnips.com/CreateWidgetAction.ns?type=0&objectid=cfd7f971-d527-480e-b014-2a709d96a124"> Get this widget </a></td><td style="font-size:7px; font-weight:normal;">|</td><td align="center"><a align="center" style="color:#FFFFFF; text-decoration:none " href="http://www.esnips.com/doc/cfd7f971-d527-480e-b014-2a709d96a124/VMaaligai-KalaimagalKaiPorule/?widget=flash_player_esnips_blue"> Track details </a></td><td style="font-size:7px; font-weight:normal;">|</td><td><a align="center" style="color:#FF6600; text-decoration:none" href="http://www.esnips.com//adserver/?action=visit&cid=player_dna&url=/socialdna"> eSnips Social DNA </a></td></tr></table></td></tr></table><br /><a title="Anthoy" href="http://rapidshare.com/files/131216966/VMaaligai-KalaimagalKaiPorule.mp3" target="Anthony">பாடலை டவுன்லோடு செய்ய இங்கே க்ளிக் செய்யுங்கள்</a><br /><br />அடுத்தது "நட்சத்திரம், படத்தில் 'அவள் ஒரு மேனகை' பாடல்."<br /><br />எஸ். பி. பி-.... சிவரஞ்சனீ....ஈ... என்று மேல் ஸ்தாயிக்குப் போகும் போது<br />அம்மாடீ... எங்கொ ஒரு மேகக் குவியலின் மேல் தூக்கிக் கொண்டு போய் விடுவதைப் போல உணர்வேன். இந்தப் பாடல் பக்திரசத்தையும், சந்தோஷத்தை தரும்.<br /><table bgcolor="#000000" cellpadding="0" cellspacing="0"><tr><td><embed quality="high" pluginspage="http://www.macromedia.com/go/getflashplayer" type="application/x-shockwave-flash" bgcolor="#000" width="328" height="94" src="http://www.esnips.com//escentral/images/widgets/flash/esnips_player.swf" flashvars="theTheme=blue&autoPlay=no&theFile=http://www.esnips.com//nsdoc/b390c541-8449-4be7-bf49-951cbed2bc44&theName=AvaloruMenagai- Natchathiram&thePlayerURL=http://www.esnips.com//escentral/images/widgets/flash/mp3WidgetPlayer.swf"></embed></td></tr><tr><td><table cellpadding="2" style="font-family:Verdana, Arial, Helvetica, sans-serif; padding-left:2px; color:#FFFFFF; text-decoration:none ; ; font-size:10px; font-weight:bold"><tr><td><a style="color:#FFFFFF; text-decoration:none " href="http://www.esnips.com/CreateWidgetAction.ns?type=0&objectid=b390c541-8449-4be7-bf49-951cbed2bc44"> Get this widget </a></td><td style="font-size:7px; font-weight:normal;">|</td><td align="center"><a align="center" style="color:#FFFFFF; text-decoration:none " href="http://www.esnips.com/doc/b390c541-8449-4be7-bf49-951cbed2bc44/AvaloruMenagai--Natchathiram/?widget=flash_player_esnips_blue"> Track details </a></td><td style="font-size:7px; font-weight:normal;">|</td><td><a align="center" style="color:#FF6600; text-decoration:none" href="http://www.esnips.com//adserver/?action=visit&cid=player_dna&url=/socialdna"> eSnips Social DNA </a></td></tr></table></td></tr></table><br /><a title="Anthoy" href="http://rapidshare.com/files/131211729/AvaloruMenagai-_Natchathiram.mp3" target="Anthony">பாடலை டவுன்லோடு செய்ய இங்கே க்ளிக் செய்யுங்கள்</a><br /><br />அடுத்து, "மைதிலி என்னைக் காதலி படத்தில், நானும் உந்தன் உறவை"<br />பாடலும் அப்படியே...<br /><br />அவளுடைய தனித்தன்மையே இதுதான்.<br />தார அதிதார ஸ்தாயி என்று உச்சத்துக்கு உச்சத்தில் வாசிக்கப் பட்டாலும் சரி,<br />மந்திர அதி மந்திர என்று வெகு வெகு கீழே, இசைக்கப் பட்டாலும் சரி, அவள் அழகு, மின்னல் வெட்டுகிற அழகுதான்.<br /><table bgcolor="#000000" cellpadding="0" cellspacing="0"><tr><td><embed quality="high" pluginspage="http://www.macromedia.com/go/getflashplayer" type="application/x-shockwave-flash" bgcolor="#000" width="328" height="94" src="http://www.esnips.com//escentral/images/widgets/flash/esnips_player.swf" flashvars="theTheme=blue&autoPlay=no&theFile=http://www.esnips.com//nsdoc/88863109-9802-417a-9dde-fce7f9f64c65&theName=MythiliEnnaiKathali-NaanumUnthan&thePlayerURL=http://www.esnips.com//escentral/images/widgets/flash/mp3WidgetPlayer.swf"></embed></td></tr><tr><td><table cellpadding="2" style="font-family:Verdana, Arial, Helvetica, sans-serif; padding-left:2px; color:#FFFFFF; text-decoration:none ; ; font-size:10px; font-weight:bold"><tr><td><a style="color:#FFFFFF; text-decoration:none " href="http://www.esnips.com/CreateWidgetAction.ns?type=0&objectid=88863109-9802-417a-9dde-fce7f9f64c65"> Get this widget </a></td><td style="font-size:7px; font-weight:normal;">|</td><td align="center"><a align="center" style="color:#FFFFFF; text-decoration:none " href="http://www.esnips.com/doc/88863109-9802-417a-9dde-fce7f9f64c65/MythiliEnnaiKathali-NaanumUnthan/?widget=flash_player_esnips_blue"> Track details </a></td><td style="font-size:7px; font-weight:normal;">|</td><td><a align="center" style="color:#FF6600; text-decoration:none" href="http://www.esnips.com//adserver/?action=visit&cid=player_dna&url=/socialdna"> eSnips Social DNA </a></td></tr></table></td></tr></table><br /><a title="Anthoy" href="http://rapidshare.com/files/131214424/MythiliEnnaiKathali-NaanumUnthan.mp3" target="Anthony">பாடலை டவுன்லோடு செய்ய இங்கே க்ளிக் செய்யுங்கள்</a><br /><br /><br />"நான் அடிமை இல்லை, படத்தில் 'ஒரு ஜீவன் தான்' பாடலை சந்தோஷமாக ஒரு முறை பாடுவார்கள்.<br />அப்போது இவள் சந்தோஷத்தை வெளிப்படுத்தும் பேரின்ப நாயகி.<br /><table bgcolor="#000000" cellpadding="0" cellspacing="0"><tr><td><embed quality="high" pluginspage="http://www.macromedia.com/go/getflashplayer" type="application/x-shockwave-flash" bgcolor="#000" width="328" height="94" src="http://www.esnips.com//escentral/images/widgets/flash/esnips_player.swf" flashvars="theTheme=blue&autoPlay=no&theFile=http://www.esnips.com//nsdoc/b15ff933-878d-4310-86d1-7eebae67c33c&theName=Oru jeevanthaan SPB & S. Janaki&thePlayerURL=http://www.esnips.com//escentral/images/widgets/flash/mp3WidgetPlayer.swf"></embed></td></tr><tr><td><table cellpadding="2" style="font-family:Verdana, Arial, Helvetica, sans-serif; padding-left:2px; color:#FFFFFF; text-decoration:none ; ; font-size:10px; font-weight:bold"><tr><td><a style="color:#FFFFFF; text-decoration:none " href="http://www.esnips.com/CreateWidgetAction.ns?type=0&objectid=b15ff933-878d-4310-86d1-7eebae67c33c"> Get this widget </a></td><td style="font-size:7px; font-weight:normal;">|</td><td align="center"><a align="center" style="color:#FFFFFF; text-decoration:none " href="http://www.esnips.com/doc/b15ff933-878d-4310-86d1-7eebae67c33c/Oru-jeevanthaan-SPB--S.-Janaki/?widget=flash_player_esnips_blue"> Track details </a></td><td style="font-size:7px; font-weight:normal;">|</td><td><a align="center" style="color:#FF6600; text-decoration:none" href="http://www.esnips.com//adserver/?action=visit&cid=player_dna&url=/socialdna"> eSnips Social DNA </a></td></tr></table></td></tr></table><br /><a title="Anthoy" href="http://rapidshare.com/files/131215601/Oru_jeevanthaan_SPB___S._Janaki.mp3" target="Anthony">பாடலை டவுன்லோடு செய்ய இங்கே க்ளிக் செய்யுங்கள்</a><br /><br />அதே பாடலைச் சோகமாக பாடுவார் எஸ். பி. பி.<br />அப்போது, "சீதையைப் பிரிந்த் ராமனின் சொல்லொணாச் சோகமும், அசோகவனத்துச் சீதையின் ஆற்ற முடியாத் துயரும்," வெளிப்படும் பாருங்கள்...<br /><table bgcolor="#000000" cellpadding="0" cellspacing="0"><tr><td><embed quality="high" pluginspage="http://www.macromedia.com/go/getflashplayer" type="application/x-shockwave-flash" bgcolor="#000" width="328" height="94" src="http://www.esnips.com//escentral/images/widgets/flash/esnips_player.swf" flashvars="theTheme=blue&autoPlay=no&theFile=http://www.esnips.com//nsdoc/abeacf2b-c4bf-40a8-a2cf-7cb605635f60&theName=orujeevanthaan&thePlayerURL=http://www.esnips.com//escentral/images/widgets/flash/mp3WidgetPlayer.swf"></embed></td></tr><tr><td><table cellpadding="2" style="font-family:Verdana, Arial, Helvetica, sans-serif; padding-left:2px; color:#FFFFFF; text-decoration:none ; ; font-size:10px; font-weight:bold"><tr><td><a style="color:#FFFFFF; text-decoration:none " href="http://www.esnips.com/CreateWidgetAction.ns?type=0&objectid=abeacf2b-c4bf-40a8-a2cf-7cb605635f60"> Get this widget </a></td><td style="font-size:7px; font-weight:normal;">|</td><td align="center"><a align="center" style="color:#FFFFFF; text-decoration:none " href="http://www.esnips.com/doc/abeacf2b-c4bf-40a8-a2cf-7cb605635f60/orujeevanthaan/?widget=flash_player_esnips_blue"> Track details </a></td><td style="font-size:7px; font-weight:normal;">|</td><td><a align="center" style="color:#FF6600; text-decoration:none" href="http://www.esnips.com//adserver/?action=visit&cid=player_dna&url=/socialdna"> eSnips Social DNA </a></td></tr></table></td></tr></table><br /><a title="Anthoy" href="http://rapidshare.com/files/131216509/orujeevanthaan.mp3" target="Anthony">பாடலை டவுன்லோடு செய்ய இங்கே க்ளிக் செய்யுங்கள்</a><br /><br />இசைஞானி இளையராஜா இசையமைத்த "என் ராசாவின் மனசிலே" படத்தில் "குயில் பாட்டு" பாடலிலும் ஒரு முறை சந்தோஷ ரசத்தையும், மறு முறை சோக ரசத்தையும் மிக அழகாக சிவரஞ்சனி மூலம் வெளிப்படுத்துவார்.<br /><br />அதில் பல்லவியில் ஒரே ஒரு முறை பிரதி மத்யமத்தை தொட்டுச் செல்லுவார் பாருங்கள்.<br /><br />ஆஹா இவளலல்லவோ அழகி என்று சொல்லத் தோன்றும்.<br /><br />இவ்விதம் அன்னிய ஸ்வரங்களைத் தொட்டு, அதே சமயம் அந்த ராகத்தின் இயல்பு கெடாமல், இனிமைக்கு இனிமை சேர்க்கும் வல்லமை இசைஞானிக்கு இறைவன் தந்த வரம். <br /><br />குயில் பாட்டை சந்தோஷ ரசம் ததும்பும் ஸ்வர்ணலதா-வின் குயில் குரலில் <a title="Anthoy" href="http://ww.smashits.com/player/flash/flashplayer.cfm?SongIds=27738" target="Anthony">இங்கே க்ளிக் செய்து</a> கேளுங்கள்.<br /><br />அதே குயில் பாட்டை சோக ரசம் ததும்ப இசைஞானியின் கம்பீரக் குரலில் <a title="Anthoy" href="http://ww.smashits.com/player/flash/flashplayer.cfm?SongIds=27737" target="Anthony">இங்கே க்ளிக் செய்து</a> கேளுங்கள்.<br /><br />ஸ்வர்ணலதாவின் குயில் பாடலை டவுன் லோடு செய்ய <a title="Anthoy" href="http://rapidshare.com/files/132243055/Kuyil_Paatu.mp3.html" target="Anthony">இங்கே க்ளிக் செய்யுங்கள்.</a><br /><br />இன்னும் சிவரஞ்சனியில் வெளிவந்த இங்கு குறிப்பிட மறந்த பாடல்கள் நிறைய உண்டு.<br /><br />நினைவிருக்கும் அன்பர்கள் பின்னூட்டத்தில் குறிப்பிடுங்கள்.<br /><br />இத்தனை அழகான, அன்பானவளையும், நான் மறந்து...<br /><br />இல்லை..., மறந்ததாக நினைத்துக் கொண்டு...<br /><br />சில காலம் என் குரல்வளையை நானே நெறித்துக்கொண்டு... <br /><br />அவளுடன் பேசாதிருந்தேன்.<br /><br /><a title="Anthony" href="http://positiveanthonytamil.blogspot.com/2008/03/blog-post_13.html" target="Anthony">தொடர்புடைய பதிவின் சுட்டி இதோ...</a><br /><br />இப்போதுதான் பேசத்துவங்கியிருக்கிறேன்.<br /><br />பார்க்கலாம்.+Ve Anthony Muthuhttp://www.blogger.com/profile/03316912421055901645noreply@blogger.com43tag:blogger.com,1999:blog-36268584.post-60794267395951442062008-07-23T17:27:00.001-05:002009-01-16T14:55:20.046-05:00+ve பதிவர் அந்தோணி வருகவே! ராஜாவின் ராஜாங்கம் தருகவே!பதிவர் <a href="http://mindpower1983.blogspot.com/" target="new">அந்தோணிமுத்துவை</a> நம்மில் பலரும் அறிவோம் இல்லையா? Positive அந்தோணி என்றால் அவர் தான்! எழுந்து நிற்க இயலாவிடினும், உலகத்தின் முன் எழுந்து நின்றவர்! தான் யார் என்பதைச் சொல்லி வென்றவர்! ஆனந்த விகடன், ஆறாம் திணை, நிலாச் சாரல் என்று வளைய வந்தவர்!<br /><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEicCCTNrMpY56aRMwRpx1fpLKkEWu08UDmkuffV1_aIGGOrTWWokHyD0Sz1J_jOhxcbWKbrgnUkC8ny54Rgm44NoaOTuFjs0AAQ3AcBa1UdRApQ1rKClTVmGxgQobybahN0IBCq/s1600-h/IMG_0248.jpg"><img id="BLOGGER_PHOTO_ID_5226229968876636178" style="DISPLAY: block; MARGIN: 0px 10px 10px 0px; CURSOR: hand; TEXT-ALIGN: center" alt="" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEicCCTNrMpY56aRMwRpx1fpLKkEWu08UDmkuffV1_aIGGOrTWWokHyD0Sz1J_jOhxcbWKbrgnUkC8ny54Rgm44NoaOTuFjs0AAQ3AcBa1UdRApQ1rKClTVmGxgQobybahN0IBCq/s320/IMG_0248.jpg" border="0" /></a>மதிப்பிடமுடியாத அளவுக்கு தன்னம்பிக்கை வரம் கைக்கொண்ட இளைஞர்! நெஞ்சில் உரமும் நேர்மைத் திறமும் இருந்தால், ஊனங்கள் ஓடியே ஒளியும்! உற்சாகம் தேடியே வருகும்! = இதை நம் அனைவருக்காகவும் இன்னொரு முறை மெய்ப்பிக்க வந்தவர் தான் அந்தோணி!<br />* அவர் <a href="http://balaji_ammu.blogspot.com/2008/03/427.html" target="new">எழுந்து நின்ற கதை இங்கே!</a><br />** அவர் வென்ற <a href="http://mindpower1983.blogspot.com/2008/07/blog-post_2909.html" target="new">முதல் பரிசு இங்கே!</a><br /><br />வெற்றியைப் படித்தல் பல நோய்களுக்கு நல்ல மருந்து! வெற்றிக் கதையைத் தந்த அந்தோணி அண்ணனும் ஒரு மருத்துவர் தான்!<br />அவர் கதையைப் படித்துப் பாருங்கள்! பிடித்துப் போகும்!<br /><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEipm3Ju1OzXLLITjyvjEXGaJMlyLz-BkZkGxKpwPYa_S8HjCrGWef6s3g42VqCKSsxyJuNsL26pcYItrt0Pt3-ko6dulUZnb58cuzD3skQwHZK6IYQ2jhlfnEm6OxWn8uwySUZm/s1600-h/IMG_0262.jpg"><img id="BLOGGER_PHOTO_ID_5226229976937950418" style="DISPLAY: block; MARGIN: 0px 10px 10px 0px; CURSOR: hand; TEXT-ALIGN: center" alt="" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEipm3Ju1OzXLLITjyvjEXGaJMlyLz-BkZkGxKpwPYa_S8HjCrGWef6s3g42VqCKSsxyJuNsL26pcYItrt0Pt3-ko6dulUZnb58cuzD3skQwHZK6IYQ2jhlfnEm6OxWn8uwySUZm/s320/IMG_0262.jpg" border="0" /></a><br /><strong>அந்தோணியிடம் ஒரு பெரிய புதையல் இருக்காம்!</strong> இந்த முறை சென்னை சென்றிருந்த போது (April-2008), அந்தோணி வீட்டுக்கு, நானும் <a href="http://madhumithaa.blogspot.com/" target="new">மதுமிதா அக்காவும்</a> சென்றிருந்தோம்! செம உபசரிப்பு!<br />அப்போ அவர் பாதுகாத்து வந்த புதையல் என் கண்ணில் பட்டு விட்டது!<br />அந்தப் புதையலை எப்படியும் பங்கு போட்டுக் கொள்ள வேண்டும் என்கிற பேராசை மதுமிதா அக்காவுக்கு!<br /><br />ராகங்களைப் புட்டு புட்டு வைக்கிறார்! ராகதேவன் இளையராஜாவின் இசையில் குறுக்குச் சந்துகளும் நெடுக்குச் சாலைகளுமாய் பைக் ஓட்டுகிறார்! <strong>உச்சி வகிந்தெடுத்து, பிச்சிப்பூ வச்ச கிளி</strong>-ன்னு ஒரு பாட்டை வேறு விதமான ராக ஆலாபனையுடன் எடுத்து விட்டார் பாருங்க!<br />அவருடன் மதுமிதா அக்காவும் நானும் கூட ஈடு கொடுக்க முடியாமல் பாடினோம்!<br /><br /><table align="center"><tbody><tr><td><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhca3ASRE-WZEcYQhnbnd5rkvBisrxx6AUHgA5unboPSC9oZw9W_XanZ4F0yv2epWHQWuiYWnWx9fVqYRroiJsFYsXTFBIpKfqiFkHt-pZlNdpq7AV-zszVKIVh1P30uqwBifAe/s1600-h/IMG_0257.jpg"><img id="BLOGGER_PHOTO_ID_5226229983657727810" style="FLOAT: left; MARGIN: 0px 10px 10px 0px; CURSOR: hand" height="181" alt="" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhca3ASRE-WZEcYQhnbnd5rkvBisrxx6AUHgA5unboPSC9oZw9W_XanZ4F0yv2epWHQWuiYWnWx9fVqYRroiJsFYsXTFBIpKfqiFkHt-pZlNdpq7AV-zszVKIVh1P30uqwBifAe/s320/IMG_0257.jpg" width="228" border="0" /></a></td><td><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg7Gf5jzwKTWElAMbt74-gusKcG-HxdIscokYZ1Jud8CTpLtY_vbAY88paVmDuxXAZwwwTp_z08nSJzAd4PHkrvn6OAEFgbtr1H1MpagSqrCRm4XGI8etIbUyjum43hTaxbaZPC/s1600-h/IMG_0256.jpg"><img id="BLOGGER_PHOTO_ID_5226229987903476322" style="FLOAT: left; MARGIN: 0px 10px 10px 0px; WIDTH: 181px; CURSOR: hand; HEIGHT: 252px" height="276" alt="" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg7Gf5jzwKTWElAMbt74-gusKcG-HxdIscokYZ1Jud8CTpLtY_vbAY88paVmDuxXAZwwwTp_z08nSJzAd4PHkrvn6OAEFgbtr1H1MpagSqrCRm4XGI8etIbUyjum43hTaxbaZPC/s320/IMG_0256.jpg" width="181" border="0" /></a></td></tr></tbody></table><p align="center"><span style="font-size:78%;">அன்தோணி அண்ணன் வீட்டுச் சுண்டைக்காயும் செம்பருத்தியும் கூட இசை பாடும்!</span></p>இசை இன்பம் குழு வலைப்பூவுக்குப் பிச்சிப்பூ வைத்திட, அவர் புதையலை அங்கேயே அபேஸ் பண்ண அக்காவும் அடியேனும் கூட்டுச் சதி செய்து விட்டோம்!<br /><strong>இதோ, அந்தோணி அண்ணன் இசை இன்பத்தில் உலா வரத் தொடங்கி விட்டார்!</strong><br /><br />அவர் முதல் காதலி பேரு ரஞ்சனி!<br />அந்த முதல் காதலைச் சொல்லப் போறாரு!<br />கதை கேளு கதை கேளு!<br />இசை கேளு இசை கேளு!....<br />பாசிடிவ் அந்தோணியின் இசையை நல்லா கேளு...<br /><hr size="0"><br />இசை இன்பம் வலைப்பூவில் சினிமா-காரம்-காபி, வாத்தியக் கருவிகள், அன்னமாச்சர்யர் கீர்த்தனை என்று பல அருமையான பதிவுகளைப் பதிந்த நண்பர் <a href="http://cvrintamil.blogspot.com/" target="new">CVR-க்கு</a> இன்று (Jul-24) பிறந்தநாள்! இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் சீவி! :)Kannabiran, Ravi Shankar (KRS)http://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.com10tag:blogger.com,1999:blog-36268584.post-85120013142729266402008-07-14T05:24:00.002-05:002008-07-14T05:32:00.657-05:00பிரம்மத்தை தேடுவதெங்கணம்.<p class="tamil"><span style="font-size:100%;">இப்பெரும் கேள்விக்கு விடைகாண இந்த <span style="font-weight: bold;">ஜென்மம் போதுமோ</span>, இல்லை <span style="font-weight: bold; color: rgb(102, 0, 0);">நம்மாழ்வார்</span> </span></p> <p class="tamil"><span style="font-size:100%;"><o:p> </o:p></span></p> <p class="tamil"><span style=";font-family:";font-size:100%;" >“</span><span style="font-size:100%;">பூவையும் காயாவும் நீலமும் பூக்கின்ற</span></p> <p class="tamil"><span style="font-size:100%;">காவிமலரென்றும் காண்தோறும் </span><span style=";font-family:";font-size:100%;" >–</span><span style="font-size:100%;"> பாவியேன்</span></p> <p class="tamil"><span style="font-size:100%;">மெல் ஆவி மெய் மிகவே பூரிக்கும் அவ்வவை</span></p> <p class="tamil"><span style="font-size:100%;">எல்லாம் பிரான் உருவே என்று</span><span style=";font-family:";font-size:100%;" >”</span></p> <p style="font-style: italic;" class="tamil"><span style="font-size:100%;"><o:p> </o:p></span></p> <p class="tamil"><span style="font-size:100%;"><span style="font-style: italic;">(பூவைப்பூ, காயாம்பூ, கருநெய்தல், செங்கழுநீர்ப்பூ, ஆகிய மலர்களைக் காணும்பொழுது அவை பெருமான் திருவடிவை நினைவு படுத்துகின்ரன். அவற்றை அவன் வடிவமாகவே எண்ணி பேறுடைய அடியேனின் உயிரும் உடம்பும் பூரித்துப்போகின்றன)</span> <span style="font-weight: bold;">என்றுணர்ந்து</span> </span></p> <p class="tamil"><span style="font-size:100%;">கூறியதுபோல் நம்மால் உணர்ந்து கூறத்தான் முடியுமோ.</span></p> <p class="tamil"><span style="font-size:100%;"><o:p> </o:p></span></p> <p class="tamil"><span style="font-size:100%;">இந்த கலியுகத்தில் நாம் நம்மாழ்வாரும் அல்ல, நால் வகை வேதங்கள் காட்டும் வழிச்சென்றடையும் ஸ்ததியுள்ளோரும் அல்ல பின் உய்யும் வழி எதென்று அலைபாயும் அனைவருக்கும்</span><span style=";font-size:100%;" > </span><span style="font-size:100%;">உபாயத்தை காட்டித்தருவது <span style="font-weight: bold;">ஊத்துக்காடு வேங்கட சுப்பையரின் வரிகள்</span>. காணும் பொருள்களிலெல்லாம் கண்ணனை, அந்த பிரம்ம ரூபத்தை காண்பது தானே உண்மையான உணர்தலாய் இருக்க முடியும். அது நீலக்கடலோ, நீள் வானமோ, இல்லை பாடித்திரியும் குயிலோ, கதிரோ, மதியோ</span><span style=";font-family:";font-size:100%;" >…</span><span style="font-size:100%;"> அனைத்தும் நீயென சொல்லும் இந்த பாடலை மீண்டும் மீண்டும் கேட்பது கூட பிரம்மத்தை உணரும் வழியாகக்கொள்ளலாம் என்றால் மிகையாகதன்றோ.</span></p> <p class="tamil"><span style="font-size:100%;"><o:p> </o:p></span></p> <p class="tamil"><span style="font-size:100%;"><o:p> </o:p></span></p> <p class="tamil"><span style="font-size:100%;"><o:p> </o:p></span></p> <p class="tamil"><span style="font-size:100%;">பால் வடியும் முகம் நினைந்து நினைந்தென் உள்ளம்<br />பரவசமிகவாகுதே - கண்ணா<br /><br />(பால் வடியும்)<br /><br />நீலக்கடல் போலும் நிறத்தழகா - எந்தன்<br />நெஞ்சம் குடிகொண்ட அன்று முதல் இன்றும்<br />எந்த பொருள் கண்டும் சிந்தனை செலாதொழிய<br /><br />(பால் வடியும்)<br /><br />வான முகட்டில் சற்றே மனம் வந்து நோக்கினும்<br />மோன முகம் வந்து தோன்றுதே<br />தெளிவான தண்ணீர் தடத்தில் சிந்தனை மாறினும்<br />சிரித்த முகம் காணுதே<br />கானக்குயில் குரலில் கருத்தமைந்திடினும் உன்<br />கானக்குழலோசை மயக்குதே<br /><br />கருத்த குழலொடு நிறுத்த மயில் சிறகினை இறுக்கி அமைத்த திரத்திலே<br />கான மயிலாடும் மோனக்குயில் பாடும் நீல நதியோடும் வனத்திலே<br />குழல்முதல் எழிலிசை குழைய வரும் இசையில் குழலொடு மிளிரிள ம் கரத்திலே<br />கதிரும் மதியும் என நயன விழிகளிரு நளினமான சலனத்திலே (2)<br />காளிங்கன் சிரத்திலே கதித்த பதத்திலே<br />கனவு நனவினொடு பிறவி பிறவி தொரும்<br />கனிந்துருக வரம் தருக பரங்கருணை</span></p> <p class="tamil"><span style="font-size:100%;"><o:p> </o:p></span></p> <p class="tamil"><span style="font-size:100%;">(பால் வடியும்)<br /><br /><br /><br /></span></p><span style="font-size:100%;"><br /></span><table style="border: 1px solid rgb(204, 204, 204); padding: 0px; background-color: rgb(0, 0, 0); color: rgb(255, 128, 0); font-family: Arial,Helvetica,sans-serif; font-size: 11px;" border="0" cellpadding="4" cellspacing="0"><tbody><tr><td align="center"><embed quality="high" pluginspage="http://www.macromedia.com/go/getflashplayer" type="application/x-shockwave-flash" bgcolor="#000" src="http://www.esnips.com//escentral/images/widgets/flash/candle.swf" flashvars="autoPlay=no&theFile=http://www.esnips.com//nsdoc/5218eb52-cb64-47b6-8047-d751ffb1b88f&theName=paalvadiyummugam&thePlayerURL=http://www.esnips.com//escentral/images/widgets/flash/mp3WidgetPlayer.swf" height="140" width="92"></embed></td></tr><tr><td style="font-size: 11px;" align="center" valign="bottom"><span style="font-size:100%;"><a style="color: rgb(255, 128, 0);" href="http://www.esnips.com/doc/5218eb52-cb64-47b6-8047-d751ffb1b88f/paalvadiyummugam/?widget=flash_player_candle">paalvadiyummugam.m...</a></span></td></tr></tbody></table><span style="font-size:100%;"><br /></span>கிருத்திகா ஸ்ரீதர் http://www.blogger.com/profile/13712191411995422467noreply@blogger.com15tag:blogger.com,1999:blog-36268584.post-44813446656757828912008-07-11T04:45:00.000-05:002010-03-01T14:49:53.549-05:00உளியின் ஓசை - ராஜாவின் ஓசைஇளையராஜாவின் இசையில் சமீபத்தில் வெளியாகியுள்ள இந்தப் பாடல் 'உளியின் ஓசை' படத்தில் இடம்பெற்றுள்ளது.<br /><br />பாடலின் துவக்கத்தில் இளையராஜா, கவிதை நடையில் என்ன சொல்லுகிறார்?<br /><br />நான் ஒரு சிற்பி, நடனக்கலை தெரிய தேவையில்லை.<br />இருப்பினும் உனக்கதை விளக்கிடவே...<br /><br />முதுநாரை, முதுகுருகு, இசை நுணுக்கம், களரியாவிரை, யாழ்நூல், பஞ்சமரபு<br />இவை இசை கூறும்.<br /><br />செயிற்றியம், கூத்தநூல்<br />நடன கலை வகை கூறும்.<br /><a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgz_giudJMOMiLl01_aS9jgACS18x017i-U0gXEwK4ltwa7QQtmwTL1UsS3gCYsj9lN169Aoj6h7mHGoDJ11sYkXwZ7l1VrGg39M8F9YQPIGXMHdkLHNnVDQ8V2mia1PQPS1zmSeQ/s1600-h/Mayilyazh.gif"><img style="margin: 0pt 0pt 10px 10px; float: right; cursor: pointer;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgz_giudJMOMiLl01_aS9jgACS18x017i-U0gXEwK4ltwa7QQtmwTL1UsS3gCYsj9lN169Aoj6h7mHGoDJ11sYkXwZ7l1VrGg39M8F9YQPIGXMHdkLHNnVDQ8V2mia1PQPS1zmSeQ/s400/Mayilyazh.gif" alt="" id="BLOGGER_PHOTO_ID_5221546002414649202" border="0" /></a><br />பல தொன்நூல்கள் கூறும்<br />தோற்கருவி, முழவு, முரசு, உடுக்கை,<br />மிருதங்க தாள மேளம் ஆகும்.<br /><br />துளைக்கருவி, புல்லாங்குழலொடு,<br />மரக்கிளை ஒடித்து மனைத்து சீவாளி பொருந்தும் முகவீணை,<br />திமிரி நாயனம் நாதஸ்வரமாகும்.<br />நரம்புக்கருவி மகரயாழ், சகோடயாழ், செங்கோட்டியாழ், <br />ஆயிரம் நரம்புகள் கொண்ட பேரியாழ்,<br />சாரங்கியொடு<br />என்றும் நிறை வீணையாகும்.<br /><br />மிடற்றுக்கருவி குரல் ஆகும்,<br />பண்பட்டு பண்பாடும் குரல் வகையாகும்.<br /><br />இத்தனையும் ஒருங்கிணைந்து<br /><span style="font-weight:bold;">குரல், துத்தம், கைக்கிளை, உழை, இளி, விளரி, தாரம்</span> என<br />ஏழிசை எழும்ப தாளம் தவறாமல், இசைந்தாடும் நடனக் கலைதனில்<br /><span style="font-size:180%;">எத்தனை பாவமுண்டு நடனத்திலே!!!</span><br /><br />குரல்: ஸ்ரீராம் பார்த்தசாரதி<br />இராகம்: மாயாமாளவகௌளை & (???நீங்களே சொல்லுங்க!)<br />பாவாசிரியர்: நா.முத்துலிங்கம்<br /><table border="0" cellpadding="4" cellspacing="0" style=" background-color: #FFFFFF ;border-color: #cccccc; color:#000 ; font-family:Arial, Helvetica, sans-serif; font-size:11px; padding:0px; border-width:1px; border-style:solid"><tr><td align="center"><embed quality="high" pluginspage="http://www.macromedia.com/go/getflashplayer" type="application/x-shockwave-flash" bgcolor="#FFFFFF" width="132" height="138" src="http://www.esnips.com//escentral/images/widgets/flash/dj1.swf" flashvars="autoPlay=no&theFile=http://www.esnips.com//nsdoc/d93f5b35-9791-41d5-a339-66d5a0726994&theName=Aganthaiyil Aaduvatha&thePlayerURL=http://www.esnips.com//escentral/images/widgets/flash/mp3WidgetPlayer.swf"></embed></td></tr><tr><td style="font-size:11px" valign="bottom" align="center"><a style="color: #000" href="http://www.esnips.com/doc/d93f5b35-9791-41d5-a339-66d5a0726994/Aganthaiyil-Aaduvatha/?widget=flash_player_dj">அகந்தையில்...</a></td></tr></table><br /><br /><blockquote>"மோனத்து இருந்த முன்னோன் கூத்தில்<br /><br />உடுக்கையில் பிறந்தது ஓசையின் சுழலே<br /><br />ஓசையில் பிறந்தது இசையின் உயிர்ப்பே<br /><br />இசையில் பிறந்தது ஆட்டத்து இயல்பே<br /><br />ஆட்டம் பிறந்தது கூத்தினது அமைவே<br /><br />கூத்தில் பிறந்தது நாட்டியக் கோப்பே<br /><br />நாட்டியம் பிறந்தது நாடக வகையே"<br /><br />- கூத்த நூல்</blockquote><br />இசை நூல்கள், இசைக் கருவிகள் பெயரெல்லாம் வருவது போலுளதே? எத்தனையோ காலம் முன்னரே நம் மரபில் திளைத்திட்ட இந்த இசை நயங்களை, இப்போது நினைவில் திருப்பிட, இவையெல்லாம் என்னவென்று விளக்கும் சுட்டிகளையும் இயன்றவரை இணைத்திருக்கிறேன்:<br /><br />* <a href="http://www.unarvukal.com/forum/index.php?showtopic=4766&pid=27326&st=0&#entry27326">தமிழ்ச்சங்கங்கள்</a><br />* <a href="http://www.tamilnation.org/culture/music/krishnamurthy.htm">இசைத்தமிழ்</a><br />* <a href="http://www.tamilnation.org/hundredtamils/vipulananda.htm">சுவாமி விபுலானந்தர் - யாழ்நூல்</a><br />* <a href="http://www.keetru.com/ungal_noolagam/mar07/thyagarajan.php">நாடகத்தமிழ்</a><br />* <a href="http://www.keetru.com/anaruna/jan07/valarmathi.php">முரசும் அரசும்</a><br />* <a href="http://thanjavure.blogspot.com/2008/06/blog-post_19.html">ஒரு நாகசுரம் உருவாகிறது</a><br />* <a href="http://www.keetru.com/puthiyakaatru/sep06/mammud.php">துளைக்கருவிகள்</a><br />* <a href="http://ta.wikipedia.org/wiki/%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D">விக்கியில் யாழ்</a><br />* <a href="http://isaiinbam.blogspot.com/2007/07/blog-post_04.html">இசை இன்பம் - சாரங்கி</a><br />* <a href="http://www.tamilnation.org/sathyam/east/thiruvasagam/vaiko.htm">வைகோ இசை உரை</a><br />*<a href="http://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%81"> விக்கியில் பஞ்சமரபு </a><br />* <a href="http://www.keetru.com/info_box/general/music.php">இசையின் கருவரைகள்</a>jeevagvhttp://www.blogger.com/profile/02747964167117423246noreply@blogger.com13tag:blogger.com,1999:blog-36268584.post-34240147726662230012008-07-07T06:12:00.003-05:002008-07-07T06:23:57.505-05:00கை தொழுது கர்ம வினையும் மன்றாடுமா ???<a href="http://kabeeran.blogspot.com">கபீரன்பன்</a> அவர்களின் ஒரு பதிவிற்கு நான் அளித்திருந்த பின்னூட்டத்தின் மறுமொழியாக அவர் இவ்வாறு கூறியிருந்தார்.அவர் விருப்பத்திற்கு இணங்க இந்தப்பதிவு எல்லா இசை பிரியர்களுக்குமாக சமர்ப்பணம்.<br /><br /><br /><span style="text-decoration: underline;">+++++</span><p class="tamil"><a href="http://kabeeran.blogspot.com/2008/06/blog-post_28.html">http://kabeeran.blogspot.com/2008/06/blog-post_28.html</a></p> <p class="tamil"><o:p> </o:p></p> <p class="tamil"><span style="font-family: "Courier New";">“</span>வருக கிருத்திகா,<br /><br />//"கை தொழுது கர்ம வினைகள் மன்றாடும் கைவிடாதே கண்ணா என்று சொல்லும்......" அவனின்று யாருண்டு இதற்கு... //<br /><br />கர்மவினைகள் மன்றாடுகின்றனவா ?! ரொம்ப சுவாரசியமாக இருக்கிறதே. நான் இந்த பாடலை கேட்டதில்லை.<br /><br />முழுபாடலையும் உங்கள் பதிவாக போட்டுவிடுங்கள். எல்லோருக்கும் பயனளிக்கும்.<br />நன்றி<span style="font-family: "Courier New";">”</span></p> +++++++<br /><br /><span style="font-weight: bold;">பாடல் வரிகள்</span><br /><br /> <p class="tamil">அழகர் மலையில் என் மனமோடி விளையாடும்</p> <p class="tamil">ஆயர் பாடியில் ஓர் குழைந்தை போலே<span style=""> </span>(2)</p> <p class="tamil"><o:p> </o:p>நீங்காத மணிநாதம் வேணுகாணம் காதில் </p> <p class="tamil">வழிந்தோடும் செந்தேன் அருவிபோலே (2)</p> <p class="tamil"><o:p> </o:p></p> <p class="tamil">அழகர் மலையில் என் மனமோடி விளையாடும்</p> <p class="tamil">ஆயர் பாடியில் ஓர் குழைந்தை போலே.</p> <p class="tamil"><o:p> </o:p></p> <p class="tamil">திருக்கோவில் முற்றமதில்</p> <p class="tamil">தாமரை மலர் மொட்டுபோல் உனது காலடிகள்<span style=""> </span>(2)</p> <p class="tamil">அவிமலர் இதழ் மீது வெண் பனித்துளியாக </p> <p class="tamil">ஆழ்வார்கள் பாசுர தேனடிகள் </p> <p class="tamil">அழகர் மலையில் என் மனமோடி விளையாடும்</p> <p class="tamil">ஆயர் பாடியில் ஓர் குழைந்தை போலே<span style=""> </span></p> <p class="tamil"><o:p> </o:p></p> <p class="tamil">காதல் மீதெழெ கண்ணனைச்சுற்றியே</p> <p class="tamil">களிப்புடன் மேய்ந்திடும் மோகங்களே (2)</p> <p class="tamil">கைதொழுது கர்ம வினைகள் மன்றாடும் </p> <p class="tamil">கைவிடாதே கண்ணா என்று சொல்லும் (2)</p> <p class="tamil"><o:p> </o:p></p> <p class="tamil">அழகர் மலையில் என் மனமோடி விளையாடும்</p> <p class="tamil">ஆயர் பாடியில் ஓர் குழைந்தை போலே<span style=""> </span>(2)</p> <br />இந்தப்பாடலை கே.ஜே.ஏஸ் தன் கம்பீரமான குரலில் பாடும்போது "யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்"<br /><br /><br /><table style="border: 1px solid rgb(204, 204, 204); padding: 0px; background-color: rgb(255, 255, 255); color: rgb(0, 0, 0); font-family: Arial,Helvetica,sans-serif; font-size: 11px;" border="0" cellpadding="4" cellspacing="0"><tbody><tr><td align="center"><embed quality="high" pluginspage="http://www.macromedia.com/go/getflashplayer" type="application/x-shockwave-flash" bgcolor="#FFFFFF" src="http://www.esnips.com//escentral/images/widgets/flash/dj1.swf" flashvars="autoPlay=no&theFile=http://www.esnips.com//nsdoc/e9f772f6-2351-4f83-b34b-9e0eb5f0b89f&theName=azagarmalayil&thePlayerURL=http://www.esnips.com//escentral/images/widgets/flash/mp3WidgetPlayer.swf" height="138" width="132"></embed></td></tr><tr><td style="font-size: 11px;" align="center" valign="bottom"><a style="color: rgb(0, 0, 0);" href="http://www.esnips.com/doc/e9f772f6-2351-4f83-b34b-9e0eb5f0b89f/azagarmalayil/?widget=flash_player_dj">azagarmalayil.mp3</a></td></tr></tbody></table>கிருத்திகா ஸ்ரீதர் http://www.blogger.com/profile/13712191411995422467noreply@blogger.com15tag:blogger.com,1999:blog-36268584.post-20425688014198647452008-07-03T02:52:00.005-05:002008-07-03T17:20:15.931-05:00இசைப் பேரறிஞர் பெ.தூரன் பிறந்தநாள் நூற்றாண்டுதமிழகத்தில் கவிஞனாக பிறப்பதே ஒரு வரம் போலும். அந்த வரம் பெற்று சாகாவரம் கொண்ட கவிதைகளை வடித்த செம்மல்கள் எத்தனை பேர்! செந்நெல் விளைந்து செழித்த பூமியில் நற்சொல் கவிதைப்பயிர் வளர்த்து மொழிக்கும், சமுதாயத்திற்கும், மக்கள் வாழ்தர மேம்பாட்டிற்கும் அருந்தொண்டு புரிந்திட்ட கவிஞர் வரிசையில் ம.பெ.பெரியசாமித்தூரன் அவர்கள் தனக்கென பெரியதோர் இடத்தினைப் பிடித்துள்ளார்.<br /><br />இந்த வருடம் பிறந்தநாள் நூற்றாண்டு காணும் அமரர் தூரன் அவர்களைப் "பல்கலைச் செம்மல்" எனவே சொல்லலாம். பகத்சிங் தூக்கிலேற்றப்பட்ட செய்தி கேட்டு, தன்னுடைய BA இளங்கலை பட்டத் தேர்வினைப் புறக்கணித்தது முதல் - விடுதலைப் போராட்டங்களிலும் பங்கெடுத்தவர். மகாகவி பாரதியால் பெரிதும் ஈர்க்கப்பட்டு, கவிதைகளையும், இசைப்பாடல்களையும் இயற்றியவர். அறுநூறுக்கும் மேற்பட்ட இவரது பாடல்களில் தேசிய, ஆன்மீக, சமுதாய நற்சிந்தனைகள் நிறைந்திருக்கும். இராக பாவத்துடன் அமைந்த பாடல்களாதலால், கச்சேரிகளிலும் இவரது பாடல்கள் இன்றுவரை இசைக்கப்படுகின்றன.<br />மிக எளிமையான பாடல்களில், மிக உயர்ந்த தத்துவக் கருத்துக்களை பாரமில்லாமல் சொல்லும் இவரது பாங்கு தன்னிகரில்லாதது. குழந்தைகளுக்காகவும் மழலைப்பாடல்களை இயற்றி உள்ளார். திருமதி.N.C.வசந்த கோகிலம், திருமதி.டி.கே.பட்டம்மாள், திருமதி.எம்.எஸ்.சுப்புலஷ்மி உட்பட பல பாடகர்களும் இவரது பாடல்களைப் பாடி பெருமைப்படுத்தினர். திருமதி.எம்.எஸ்.சுப்புலஷ்மி அவர்களின் ஐ.நா.சபைக் கச்சேரியில் இவரது 'முருகா, முருகா' பாடலும் இடம்பெற்றது.<br />இசைக் குறிப்புகளுடன் இவரது பாடல்கள் நான்கு தொகுப்புகளாக வெளியிடப்பட்டுள்ளன. அவை:<br /><br />1. இசைமணி மஞ்சரி (1970இல்)<br />2. முருகன் அருள்மணி மாலை (1972இல்)<br />3. கீர்த்தனை அமுதம் (1974இல்)<br />4. நவமணி இசைமாலை (19880இல்)<br /><blockquote style="color: rgb(51, 51, 255);">வடநாட்டினர் தமக்கு அருகிலுள்ள கர்நாடக நாட்டைப்பார்த்து அங்கும் அதற்கு தெற்கிலும் உள்ள இசைக்கு கர்நாடக இசை என்று பெயரிட்டு அழைத்தனர். </blockquote> எனத் தூரன் ஒரு சொற்பொழிவில் விளக்கம் அளித்துள்ளார். தமிழ் இசைச்சங்கம் தூரன் அவர்களில் இசைப் பங்களிப்புகளை பெருமைப்படுத்தும் விதம், 1972இல், 'இசைப் பேரறிஞர்' பட்டத்தினை வழங்கியது. தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம், 1970இல், 'கலைமாமணி' பட்டம் வழங்கியது.<br /><br />வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவையும்(Fetna) இந்த வருடம் ஒர்லாண்டோ,ஃப்ளோரிடாவில் பெரியசாமித்தூரன் அவர்கள் பிறந்த நூற்றாண்டினை விமர்சையாக <a href="http://www.fetna2008.org/">கொண்டாடுகிறது</a>, மூன்று நாட்களுக்கு, ஜூலை நான்கு முதல்!. அந்தப் பக்கத்தில் நீங்கள் இருந்தால், விழாவில் கலந்து கொள்ளலாமே?<br /><br /><a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhDMx581JhFgamePJLkzCU943RLTrIrVPSJlHGRlPh39SeNJultgUuo1svEWat5msVEO3Z_ctFd9GV9n3ce8zaO43ikxI-KEo2IGapoSEsiSHKkhrDJvPJfb2noSpVB1Vxr_03-aQ/s1600-h/thooran.jpg"><img style="float:right; margin:0 0 10px 10px;cursor:pointer; cursor:hand;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhDMx581JhFgamePJLkzCU943RLTrIrVPSJlHGRlPh39SeNJultgUuo1svEWat5msVEO3Z_ctFd9GV9n3ce8zaO43ikxI-KEo2IGapoSEsiSHKkhrDJvPJfb2noSpVB1Vxr_03-aQ/s400/thooran.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5217123778584455714" /></a>தூரனின் படைப்புகளில் ஒரு படைப்பாளியின் படைப்புலக ஆளுமைதனை பறைசாற்றும் அனைத்து இயல்புகளையும் கொண்டிருப்பதைப் பார்க்கலாம். கவிதை, சிறுகதை, நாடகம், கீர்த்தனம், கட்டுரை இலக்கியம், சிறுவர் இலக்கியம், அறிவியல் மற்றும் சிந்தனை எழுத்துக்கள், மொழிபெயர்ப்பு என பற்பல படைப்புப் பரிணாமங்கள்! "தமிழ் கலைக் களஞ்சியம்" என்னும் மிகப்பெரிய தகவல் களஞ்சிய நூலையும் பத்து பகுதிகளில் தொகுத்துள்ளார். பாரதியின் நூல்களை ஆய்வு செய்திருக்கிறார் 'பாரதியின் நூல்கள் - ஒரு திறனாய்வு' என்கிற தலைப்பில்! "<font style="color: rgb(0, 0, 153);">கம்பனுக்கு விருத்தம் போல், பாரதிக்குச் சிந்து</font>" எனத் தெளிவாக இனங்கண்டு சொல்கிறார்.<br /><br />தூரன் அவர்கள் இயற்றிய இசைப்பாடல்களின் பட்டியலை இங்கே பார்க்கலாம்:<br /><table style="border: 1px solid rgb(53, 53, 53); padding: 0px; background-color: rgb(93, 124, 186); font-family: Arial,Helvetica,sans-serif; font-size: 11px;" border="0" cellpadding="0" cellspacing="0"><tbody><tr style="background-color: rgb(255, 255, 255);"><td style="padding: 5px;" align="center"><a href="http://www.esnips.com/doc/02f1fc0c-58e8-4962-88ad-db5417db89f4/Thooran_Keerthanigal/?widget=documentIcon"><img alt="Thooran_Keerthanigal" title="click to ViewThooran_Keerthanigal" src="http://www.blogger.com/images/thumbs/thumb.pdf.gif" border="0"></a></td></tr><tr style="background-color: rgb(255, 255, 255);"><td style="padding: 5px;" align="center"><strong><a style="color: rgb(51, 51, 51);" href="http://www.esnips.com/doc/02f1fc0c-58e8-4962-88ad-db5417db89f4/Thooran_Keerthanigal/?widget=documentIcon">Thooran_Keerthanig...</a></strong></td></tr><tr><td style="padding: 5px; font-size: 9px; color: rgb(255, 255, 255);" valign="bottom">Hosted by <a href="http://www.esnips.com/" style="color: rgb(255, 255, 255);">eSnips</a></td></tr></tbody></table><br /><br />தூரன் அவர்கள் இயற்றிய பாடல்களில், நான் கேட்டு மெய்மறந்த பாடல்கள்:<br />* முருகா முருகா என்றால் உருகாதோ (சாவேரி)<br />* கொஞ்சிக் கொஞ்சி வா முருகா (கமாஸ்)<br />* கலியுகவரதன் கண்கண்ட தெய்வமாய் (ப்ருந்தாவன சாரங்கா)<br />* இன்னமும் அவர் மனம் (சஹானா)<br />* எங்கு நான் செல்வேன் ஐயா (த்வஜவந்தி)<br />* தொட்டு தொட்டு பேச வரான் (பேஹாக்)<br /><br />இந்த எல்லாப் பாடல்களையும் உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்பினாலும், இந்த இடுகைக்கு அவற்றில் ஒன்றினைப் பார்ப்போம்.<br /><br /><table border="0" cellpadding="4" cellspacing="0" style=" background-color: #FFFFFF ;border-color: #cccccc; color:#000 ; font-family:Arial, Helvetica, sans-serif; font-size:11px; padding:0px; border-width:1px; border-style:solid"><tr><td align="center"><embed quality="high" pluginspage="http://www.macromedia.com/go/getflashplayer" type="application/x-shockwave-flash" bgcolor="#FFFFFF" width="130" height="180" src="http://www.esnips.com//escentral/images/widgets/flash/guitar_test.swf" flashvars="autoPlay=no&theFile=http://www.esnips.com//nsdoc/4c003f30-80b3-4a2d-9890-ed7190f6c727&theName=Engu Naan - Dwijawanti_Kanda Chapu&thePlayerURL=http://www.esnips.com//escentral/images/widgets/flash/mp3WidgetPlayer.swf"></embed></td></tr><tr><td style="font-size:11px" valign="bottom" align="center"><a style="color: #000" href="http://www.esnips.com/doc/4c003f30-80b3-4a2d-9890-ed7190f6c727/Engu-Naan---Dwijawanti_Kanda-Chapu/?widget=flash_player_guitar">எங்கு நான்...</a></td></tr></table><br /><br /><font style="color: rgb(255, 0, 0);">எங்கு நான் செல்வேன் ஐயா </font><br />இராகம் : த்வஜவந்தி<br />பாடுபவர் : பாம்பே ஜெயஸ்ரீ<br /><br /><u>எடுப்பு</u><br /><font style="color: rgb(51, 204, 0);">எங்கு நான் செல்வேன் ஐயா - நீர் தள்ளினால்</font><br /><font style="color: rgb(51, 204, 0);">எங்கு நான் செல்வேன் ஐயா?</font><br /><br /><u>தொடுப்பு</u><br /><font style="color: rgb(204, 51, 204);">திங்கள் வெண் பிஞ்சினை செஞ்சடை</font><br /><font style="color: rgb(204, 51, 204);">தாங்கிடும் சங்கராம்பிகை தாய் வளர்மேனியா!</font><br /><br /><u>முடிப்பு</u><br /><font style="color: rgb(102, 0, 204);">அஞ்சினோர் இடரெல்லாம் அழிய ஓர் கையினால்</font><br /><font style="color: rgb(102, 0, 204);">அபயமே காட்டிடும் அருட்பெரும் அண்ணலே!</font><br /><font style="color: rgb(102, 0, 204);">நஞ்சினை உண்டுமே, வானுளோர் நலமுற</font><br /><font style="color: rgb(102, 0, 204);">நாடிடும் வள்ளலே, நான்மறை நாதனே!</font><br /><br />என்ன அருமையாக, வார்த்தைகள் வந்து விழுந்திருக்கு பாருங்க!.<br />வெண்மதியாம் வெண் அம்புலிதனை தன் செஞ்சடைதனில் அணிந்த சங்கரன்,<br />(சுருளார்ந்த செஞ்சடை என திருமந்திரத்தில் திருமூலர் குறிப்பிடுகிறார்.)<br />தன்னைப் பணிபவர் தீவினைதனை சங்காரம் செய்யும் சங்கரனைப் பாடுகிறார் தூரனார்.<br />அப்படிப்பட்ட சங்கரன், தன் மேனியில் அம்பிகையை, தாயை தன்னொரு பாகத்தில் தரித்திருக்கிறானாம்.<br />அஞ்சியவர் இடரெல்லாம் தவிடுபொடியாய் தகர்த்திட தனது கையினால்,<br />அபயம் காட்டிடும் அருட்பெரும் அண்ணல் இவனாம்.<br />(சிவனுக்கு 'கறை மிடறு அண்ணல்' என்றொரு பெயரும் உண்டு)<br />நான்மறைகளால் போற்றப்படும் நாதன், வானுளோர் நலம்பெற<br />நஞ்சினை உண்ட 'விடமுண்-கண்டனை' நாடிடுவார்களாம்.<br /><br />அப்படிப்பட்ட அண்ணல், என்னைப்பாராது புறம் தள்ளினால், நான் வேறெங்கு செல்வேன்?<br />எனக்கு வேறென்ன வழி? எல்லாமும் அவனாய் இருக்கும்போது?<br />அவன் இன்றி எதுவும் இல்லை எனப்படும் போது,<br />அவனே சரணம் என அவன் தாள் பணிவதன்றி வேறென்ன செய்வேன் யான்?<br /><br />பெ.தூரன் பற்றி மேலும் அறிய தொடர்புடைய சுட்டிகள்:<br />* <a href=" http://entertainment.vsnl.com/thooran/Thooran_Biography.html">தூரன் வாழ்க்கைக்குறிப்புகள் </a><br />* <a href="http://www.tamilonline.com/thendral/Content.aspx?id=89&cid=14">தென்றல் இதழில் திரு.மதுசூதனன்</a><br />* <a href="http://chennaionline.com/music/thamizhsongs/2004/song14.asp">சென்னை ஆன்லைன் தளம்</a>jeevagvhttp://www.blogger.com/profile/02747964167117423246noreply@blogger.com8tag:blogger.com,1999:blog-36268584.post-21631535833101984582008-06-22T21:15:00.001-05:002008-06-22T21:23:18.192-05:00தீராத விளையாட்டுப் பிள்ளைமகாகவி பாரதியின் இந்தப் பாடலை அறியாதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். <br /><br />இந்தப் பாடல் இராகமாலிகையில் அமைந்துள்ளது. இராகமாலிகை என்றால், இராகங்களின் மாலை - அதாவது ஒன்றுக்கும் மேற்பட்ட இராகங்களால் கோர்க்கப்பட்ட கீதமாலை! இங்கே, சிந்துபைரவி, கமாஸ், சண்முகப்பிரியா, மாண்டு ஆகிய இராகங்களால் அமைந்துள்ளது.<br /><br />இந்தக் கண்ணன் பாடலை எத்தனையோ முறை எத்தனையோ பேர் பாடிக் கேட்டிருப்போம். இந்த எளிய பாடலை, ஒரு எடுத்துக்காட்டாக எடுத்துக்கொண்டு, வெவ்வேறு இசைக்கருவிகளில் வாசிக்கக் கேட்போமா?<br /><br />முதலில் நமது பழம்பெரும் இசைக்கருவியான வீணையில், முதுபெரும் இசைக்கலைஞர் வீணை எஸ்.பாலச்சந்தர் அவர்கள் வாசித்திடக் கேட்கலாமா? (இந்தப் பாடலை பதிவு செய்தது 1965இல் - HMV Shellac LP கிராமபோன் இசைத்தட்டில்)<br /><br /><table border="0" cellpadding="4" cellspacing="0" style=" background-color: #FFFFFF ;border-color: #cccccc; color:#000 ; font-family:Arial, Helvetica, sans-serif; font-size:11px; padding:0px; border-width:1px; border-style:solid"><tr><td align="center"><embed quality="high" pluginspage="http://www.macromedia.com/go/getflashplayer" type="application/x-shockwave-flash" bgcolor="#FFFFFF" width="132" height="138" src="http://www.esnips.com//escentral/images/widgets/flash/dj1.swf" flashvars="autoPlay=no&theFile=http://www.esnips.com//nsdoc/53462739-0a2b-4e44-9fb4-91efed7f16ac&theName=15 Theeraatha Vilaiyaattu Pillai-Sindhubhairavai-Jampa-Subrahmanya Bharathi&thePlayerURL=http://www.esnips.com//escentral/images/widgets/flash/mp3WidgetPlayer.swf"></embed></td></tr><tr><td style="font-size:11px" valign="bottom" align="center"><a style="color: #000" href="http://www.esnips.com/doc/53462739-0a2b-4e44-9fb4-91efed7f16ac/15-Theeraatha-Vilaiyaattu-Pillai-Sindhubhairavai-Jampa-Subrahmanya-Bharathi/?widget=flash_player_dj">வீணை</a></td></tr></table><br /><br />தொடர்ந்து, புல்லாங்குழலில் நம்மை குழைத்தெடுப்பார், Dr.S.ரமணி அவர்கள்:<br /><br /><table border="0" cellpadding="4" cellspacing="0" style=" background-color: #FFFFFF ;border-color: #cccccc; color:#000 ; font-family:Arial, Helvetica, sans-serif; font-size:11px; padding:0px; border-width:1px; border-style:solid"><tr><td align="center"><embed quality="high" pluginspage="http://www.macromedia.com/go/getflashplayer" type="application/x-shockwave-flash" bgcolor="#FFFFFF" width="132" height="138" src="http://www.esnips.com//escentral/images/widgets/flash/dj1.swf" flashvars="autoPlay=no&theFile=http://www.esnips.com//nsdoc/81d0b31c-daf0-4009-8710-3d31877c6b0d&theName=5_theeradhavilayAttu_pillai_rA&thePlayerURL=http://www.esnips.com//escentral/images/widgets/flash/mp3WidgetPlayer.swf"></embed></td></tr><tr><td style="font-size:11px" valign="bottom" align="center"><a style="color: #000" href="http://www.esnips.com/doc/81d0b31c-daf0-4009-8710-3d31877c6b0d/5_theeradhavilayAttu_pillai_rA/?widget=flash_player_dj">புல்லாங்குழல்</a></td></tr></table><br /><br />அடுத்து, திரு.T.N.கிருஷ்ணன் வாசிக்க வயலின் இசையில் நனையலாமா?<br /><br /><table border="0" cellpadding="4" cellspacing="0" style=" background-color: #FFFFFF ;border-color: #cccccc; color:#000 ; font-family:Arial, Helvetica, sans-serif; font-size:11px; padding:0px; border-width:1px; border-style:solid"><tr><td align="center"><embed quality="high" pluginspage="http://www.macromedia.com/go/getflashplayer" type="application/x-shockwave-flash" bgcolor="#FFFFFF" width="132" height="138" src="http://www.esnips.com//escentral/images/widgets/flash/dj1.swf" flashvars="autoPlay=no&theFile=http://www.esnips.com//nsdoc/1ae4aa5f-eb8c-4d1e-bda9-ddab6f13a599&theName=05 Theeratha Vilayattu-Ragamalika&thePlayerURL=http://www.esnips.com//escentral/images/widgets/flash/mp3WidgetPlayer.swf"></embed></td></tr><tr><td style="font-size:11px" valign="bottom" align="center"><a style="color: #000" href="http://www.esnips.com/doc/1ae4aa5f-eb8c-4d1e-bda9-ddab6f13a599/05-Theeratha-Vilayattu-Ragamalika/?widget=flash_player_dj">வயலின்</a></td></tr></table><br /><br />தொடர்ந்து, மாண்டலின் U.ஸ்ரீநிவாஸ் வாசித்துக் கேட்கலாமா?<br /><table border="0" cellpadding="4" cellspacing="0" style=" background-color: #FFFFFF ;border-color: #cccccc; color:#000 ; font-family:Arial, Helvetica, sans-serif; font-size:11px; padding:0px; border-width:1px; border-style:solid"><tr><td align="center"><embed quality="high" pluginspage="http://www.macromedia.com/go/getflashplayer" type="application/x-shockwave-flash" bgcolor="#FFFFFF" width="132" height="138" src="http://www.esnips.com//escentral/images/widgets/flash/dj1.swf" flashvars="autoPlay=no&theFile=http://www.esnips.com//nsdoc/72845b84-4d61-4081-b923-668e8b3ddc71&theName=13_Theeratha-Vilayattu-Pillai-Ragamalika&thePlayerURL=http://www.esnips.com//escentral/images/widgets/flash/mp3WidgetPlayer.swf"></embed></td></tr><tr><td style="font-size:11px" valign="bottom" align="center"><a style="color: #000" href="http://www.esnips.com/doc/72845b84-4d61-4081-b923-668e8b3ddc71/13_Theeratha-Vilayattu-Pillai-Ragamalika/?widget=flash_player_dj">மாண்டலின்</a></td></tr></table><br /><br />அடுத்து, ஷேக் சின்ன மௌலானா சாஹிப் அவர்கள் நாயன வாசிப்பில் கேட்கலாம் <a href="http://www.musicindiaonline.com/p/x/pJb0EskAO9.As1NMvHdW/">இந்த</a> சுட்டியில்.<br /><br />இறுதியாக, பிரசன்னா அவர்களின் கிடார் வாசிப்பிலும் கேட்டு மகிழலாம். சுட்டி <a href="http://www.musicindiaonline.com/p/x/ZqO0EQkelS.As1NMvHdW/">இங்கே</a>.<br /><br />பல இசைக்கருவிகளில் கேட்டாயிற்று, பாடியும் கேட்டுவிடலாமா, திருமதி. நித்யஸ்ரீ மஹாதேவன் பாடிட:<br /><table border="0" cellpadding="4" cellspacing="0" style=" background-color: #FFFFFF ;border-color: #cccccc; color:#000 ; font-family:Arial, Helvetica, sans-serif; font-size:11px; padding:0px; border-width:1px; border-style:solid"><tr><td align="center"><embed quality="high" pluginspage="http://www.macromedia.com/go/getflashplayer" type="application/x-shockwave-flash" bgcolor="#FFFFFF" width="132" height="138" src="http://www.esnips.com//escentral/images/widgets/flash/dj1.swf" flashvars="autoPlay=no&theFile=http://www.esnips.com//nsdoc/009691fb-d3f4-41b0-bd5d-326c95684061&theName=THEERATHAVILAYATTU-RAGAMALIG&thePlayerURL=http://www.esnips.com//escentral/images/widgets/flash/mp3WidgetPlayer.swf"></embed></td></tr><tr><td style="font-size:11px" valign="bottom" align="center"><a style="color: #000" href="http://www.esnips.com/doc/009691fb-d3f4-41b0-bd5d-326c95684061/THEERATHAVILAYATTU-RAGAMALIG/?widget=flash_player_dj">வாய்ப்பாட்டு</a></td></tr></table><br /><br />இன்னும் எப்படி எல்லாம் இந்த இசை இன்பத்தினை பருகலாம்?<br />ம்ம்ம்ம்ம், நடனத்திலே! - ராஜஸ்ரீ கிருஷ்ணன் அவர்கள் ஆடும் ப(ர)தத்தில் தான் எத்தனை சக்தி! - பிரம்மிக்க வைக்கிறது! "கண்ணன் - விளையாட்டுப்பிள்ளை" என்ற தலைப்பிட்டு கவி எழுதிய பாரதி இந்த பரதத்தைப் பார்த்தால் நிச்சயம் பெருமிதம் அடைவான். குறிப்பாக "வன்னப்புதுச் சேலை தனிலே..." என்ற இடத்தில் பார்க்க வேண்டும்!<br /><br /><object width="425" height="344"><param name="movie" value="http://www.youtube.com/v/4-HnvRcONxY&hl=en"></param><embed src="http://www.youtube.com/v/4-HnvRcONxY&hl=en" type="application/x-shockwave-flash" width="425" height="344"></embed></object><br /><br />ஆகா, நமது இசையில்தான் எத்தனை பரிணாமங்கள், எத்தனை உயர் பாரம்பரியங்கள்!<br /><br />வாழ்க நமது இசை, வளர்க நமது இசை!jeevagvhttp://www.blogger.com/profile/02747964167117423246noreply@blogger.com14tag:blogger.com,1999:blog-36268584.post-30910817849528380132008-06-01T23:43:00.001-05:002008-06-02T21:59:56.847-05:00ஆனந்த விகடனில் இசை இன்பம் பதிவு!ஆனந்த விகடனில் இசை இன்பம் பதிவினை அறிமுகப்படுத்தியதோடு, முத்தாய்ப்பாய் இரண்டொரு வரிகளிலும் சொல்லி இருக்கிறார்கள், விகடனுக்கு நன்றி!:<br /><br /><blockquote>"இசைப் பிரியர்களுக்கு விருந்து படைத்திருக்கிறது இந்த வலைப்பூ. இசை ரசிகர்கள் சேர்ந்து உருவாக்கியிருக்கும் இந்த வலைப்பூ, கர்னாடக சங்கீத ராகங்கள் குறித்து எளிமையான அறிமுகம் தருகிறது. கூடவே,நாம் கேட்டு ரசித்த சினிமா பாடல்களில் உள்ள ராகம் பற்றிய சுவாரஸ்யமான குறிப்போடு, அந்தப் பாடல்களை மீண்டும் கேட்கவும் முடிகிறது!"</blockquote><br />இந்தச் செய்தினை முதன்முதலில் இவ்வலைப்பூவிற்கு <a href="http://isaiinbam.blogspot.com/2008/05/blog-post.html">பின்னூட்டமாக</a> தந்த திரு.ஜீவி அவர்களுக்கு நன்றி. அடுத்து விகடன் தளத்தில் இருந்த இந்தச் செய்தி வந்த பக்கத்தினை படமாகத் தருவித்திருந்தார் கே.ஆர்.எஸ். இதோ அந்தப் படம் உங்களுக்காக:<br /><br /><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiI9XjiO-Hvprdc9b03r9s7mSyYHaz1Nt6uvXIDdZ9W7ci6sMe9HZBK7S_Yuy_ScqC486Ij5fvgMxuFKFElXAELOj_vejiU_U-PjWfzBfkCUUUAn46ZnGRwLfsP2Cl1suaiCfHd/s1600-h/isaiinbam.jpg"><img id="BLOGGER_PHOTO_ID_5207484458928244130" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; CURSOR: hand; TEXT-ALIGN: center" alt="" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiI9XjiO-Hvprdc9b03r9s7mSyYHaz1Nt6uvXIDdZ9W7ci6sMe9HZBK7S_Yuy_ScqC486Ij5fvgMxuFKFElXAELOj_vejiU_U-PjWfzBfkCUUUAn46ZnGRwLfsP2Cl1suaiCfHd/s320/isaiinbam.jpg" border="0" /></a><br /><br />(படத்தை பெரிதாகப் பார்க்க படத்தின் மீது கிளிக் செய்யவும்)<br /><br />இசை இன்பம் - இந்த வலைப்பதிவினை தொடங்கிய கே.ஆர்.எஸ் அவர்களுக்கும், உறுதுணையாய் பல இசை இடுகைகளைத் தந்துள்ள இதர வலைப்பதிவர்களான - தி.ரா.ச, சி.வி.ஆர், சுதா பிரசன்னா ஆகியோருக்கும் வாழ்த்துக்களும், நன்றிகளும் உரித்தாகுக.<br /><br />அதுமட்டுமல்லாமல், அவ்வப்போது பல இடுகைகளில் தங்கள் கருத்துக்களையும், திருத்தங்களையும், மேலதிக செய்திகளையும் மறுமொழிகளாகத் தந்து வழிநடத்திய திரு.சிமுலேஷன், திரு.டுபுக்கு, திரு.சுப்புரத்தினம், திரு.ஓகை மற்றும் ஏனைய பலருக்கும் நன்றிகள். எல்லாவற்றுக்கும் மேலாக, தொடர்ந்து இந்த வலைப்பதிவிற்கு வந்து படித்து வரும் அனைத்து வாசகர்களுக்கும் நன்றிகள்.<br /><br />இசை என்பது ஒரு பெருங்கடல். அதைப்பற்றி என்றென்றைக்கும் எழுதிக் கொண்டே இருக்கலாம். எழுத எத்தனையோ தலைப்புகள் உள்ளன. எனக்குத் தோன்றியவற்றில் சில:<br />* தமிழிசை : வரலாறு, பண்கள் மற்றும் அவற்றிற்கும் ராகத்திற்கும் உள்ள தொடர்பு, பண்டைய தமிழிலக்கியங்களில் இசைக் குறிப்புகள்<br />* தமிழிசை வல்லுனர்கள் : சமயக் குரவர் நால்வர், தமிழ் மூவர், ஆழ்வார்கள், ஏன் இன்றைய திரை இசை அமைப்பாளர்கள் வரையிலும்.<br />* மரபிசை : பலநூறு இராகம், பல்வேறு தாளம், பலரச பாவம்.<br />தியாகராஜரின் மின்னும் ராக ரத்தினங்கள் பலப்பல கொட்டிக்கிடக்கு. இன்னும் எத்தனை எத்தனை கவிகள், எத்தனை எத்தனை உன்னத படைப்புகள்!<br />* இசைக்கருவிகள்<br />* இசை நாடகம், இசை நாட்டியம், வில்லுப்பாட்டு, ஹரிகதை காலட்சேபம் இன்னும் பல.<br />* பல வகைப் பாடல்கள், பாடகர்கள், பாடலாசிரியர்கள்<br />* மேலை நாட்டிசைத் தாக்கங்கள், தொகுப்பிசை<br />* சுவையான இசை நிகழ்வுகள்<br /><br />வாசகர் உங்களுக்குத் தோன்றுபவற்றையும் சீட்டில் எழுதிச் சேர்த்து விடுங்கள்!<br /><br />வாசகராக மட்டுமே நீங்கள் இருக்க வேண்டியதும் இல்லை.<br />நீங்களும் இசை இன்பத்திலோ உங்கள் பதிவிலோ எழுதலாம். இதற்கு ஏதோ பெரிய இசை அறிவெல்லாம் தேவையே இல்லை. சாதாரண இசை ரசனை போதும். எனக்குப் பிடித்த இசை, ஏன் பிடிக்குது என எழுதிப்போட எவ்வளவு நேரம் பிடிக்கும்? என்ன, இசைக்க இறங்கிட்டீங்களா?jeevagvhttp://www.blogger.com/profile/02747964167117423246noreply@blogger.com14tag:blogger.com,1999:blog-36268584.post-36800847683362775372008-05-19T07:15:00.001-05:002008-05-19T19:33:47.189-05:00தக தீம் த தீம் தில்லானா!நமது இந்திய இசையில் பல்வேறு பரிணாமங்களைப் பார்க்கலாம். நடனஇசை, அந்த பல்வேறு பரிணாமங்களுள் ஒன்றாகும். ஒன்றுதானே என்று ஓரமிடாமல், ஓங்கி வளர்ந்த நடனஇசை. நமது பாரம்பரிய மணம் கமழும் அற்புதக் கலையான பரத நாட்டியத்தின் பக்கபலமான இசையும் அதன் மாண்புகளும் தான் என்னே! பல்வேறு "அடவு"களை கைகளில் காட்டி, இசையின் வளைவுகளுக்கு ஏற்ப உடலை வளைத்து, அனைத்து ரசங்களையும் முகத்தில், குறிப்பாக கண்களில் காட்டி, அபிநயம் செய்யும் பரதக் கலைஞரின் பெருமைகள்தான் என்னே!<br /><br />பத்மினி / சிவ பக்தா / 1954<br /><object height="355" width="425"><param name="movie" value="http://www.youtube.com/v/0x9s0KLSVqU&hl=en"><param name="wmode" value="transparent"><embed src="http://www.youtube.com/v/0x9s0KLSVqU&hl=en" type="application/x-shockwave-flash" wmode="transparent" height="355" width="425"></embed></object><br /><br />பாடல்களுக்கு ராகமும் தாளமும் இரு பரிணாமம் என்றால், இன்னொன்றும் இருக்கிறது. அதுவே பாவம் (Bhavam). நமது பாடல்களை பாவபூர்வமாக பார்ப்பதும் சிறப்பானதாகும். மதுரை T.N சேஷகோபாலன் மற்றும் பாம்பே ஜெயஸ்ரீ போன்றவர்கள் பாவபூர்வமாக பாடிக்கேட்டுத் திளைத்ததுண்டு. தில்லானா பாடல்கள் இந்த வகையைச் சார்ந்தவை. விறுவிறுப்பும், உணர்ச்சி மயமும் நிறைந்த தில்லானா பாடல்களின் என்ன விசேஷம் என்றால், பாடலில் பாடல் வரிகள் குறைவாக இருக்கும். ஆனால், ஜதி எனப்படும் சொற்கட்டுக்கள் நிறைந்து இருக்கும். அவற்றில் சில :<span style="font-style: italic;"> திரனா, தில்லில்லானா, தொந்திரனா, தனம்</span> போன்றவை. பாடல் வரிகளுடன் சேர்ந்த தில்லானாக்களை, கச்சேரிகளிலும் தனியான பாடல் உருப்படியாகவே பாடும் வழக்கமும் உள்ளது. அப்படிப்பட்டவற்றில் சிலவற்றை இங்கு பார்ப்போம்.<br /><br />பாம்பே ஜெயஸ்ரீ பாடிடும் இந்த தில்லானாவில் பாடல் வரிகள் இவ்வளவுதான்:<br /><blockquote style="color: rgb(0, 0, 153);">நின்னையே எண்ணி நிதம் ஏங்கிடும்<br /><br />என்னை ஆளவந்த மன்னா, மணிவண்ணா<br /><br />மனம் கொள்ளை கொண்ட கண்ணா - இனியுன்னை<br /><br />கனவிலும் நனவிலும் நான் பிரியேனே!</blockquote><object height="355" width="425"><param name="movie" value="http://www.youtube.com/v/l_Gftl4g19E&hl=en"><param name="wmode" value="transparent"><embed src="http://www.youtube.com/v/l_Gftl4g19E&hl=en" type="application/x-shockwave-flash" wmode="transparent" height="355" width="425"></embed></object>என்ன ராகம்? மதுவந்தி<br />யார் இசையமைத்தது? வேற யாரு, தில்லானா என்றவுடன் நினைவுக்கு வரும் நம்ம லால்குடி சார் தான்.<br />தமிழகம் தந்த தன்னிகரில்லாத இசை மேதை அல்லவா பத்மஸ்ரீ திரு.லால்குடி ஜெயராமன்!<br />நிறைய தில்லானாக்களை அவர் இசையமைத்திருக்கிறார். பட்டியலுக்கு விக்கிபீடியாவில் <a href="http://en.wikipedia.org/wiki/Lalgudi_Jayaraman">இங்கு</a> பார்க்கலாம்.<br /><br />இதே தில்லானாவை சிதாரில் வாசித்துக் கேட்கலாமா? <a href="http://www.esnips.com/doc/fcfe3fb3-2a4f-4d65-91de-787f62d337ab/Lalgudi-thillana">இங்கே.</a><br /><br />இங்கே கேளுங்கள் லால்குடி சாரின் இன்னொரு தில்லானா - ரேவதி ராகத்தில்:<br />திருமதி.விசாகா ஹரி பாடிட:<br /><blockquote><br /><span style="color: rgb(0, 0, 153);">கோலமுருகனை காண எண்ணி</span><br /><br /><span style="color: rgb(0, 0, 153);">காலமெல்லாம் காத்திருந்தேன்</span><br /><br /><span style="color: rgb(0, 0, 153);">வேலனோ என்னை ஏனோ மறந்தான்</span><br /><br /><span style="color: rgb(0, 0, 153);">ஜாலமோ, என் காலமோ அறியேன்!</span></blockquote><object height="355" width="425"><param name="movie" value="http://www.youtube.com/v/35RmPI_TTK4&hl=en"><param name="wmode" value="transparent"><embed src="http://www.youtube.com/v/35RmPI_TTK4&hl=en" type="application/x-shockwave-flash" wmode="transparent" height="355" width="425"></embed></object><br />லால்குடி சார், தில்லானாக்களைக் கொண்ட இசைத்தொகுப்புகளையும் இசையமைத்து வெளியிட்டிருக்கிறார். அவற்றில் ஒன்று "The Dance of Sound" (1980 இல்) என்கிற தலைப்பில். அந்த தொகுப்பில் தேஷ், த்வஜாவந்தி, ஹமீர் கல்யாணி, கானடா, காபி, கதன குதூகலம், மோகனகல்யாணி, பகடி ஆகிய ராகங்களில் அமைந்த தில்லானாக்கள் இடம்பெற்றுள்ளன. அவற்றுக்கான சுட்டிகள்:<br /><br />1. <a href="http://www.musicindiaonline.com/p/x/vqI0lGujO9.As1NMvHdW/">மோகனகல்யாணி </a>(ஆரோகணத்தில் மோகனமும், அவரோகணத்தில் கல்யாணியும் அமையப்பெற்ற ராகம்!)<br />2. <a href="http://www.musicindiaonline.com/p/x/v4I07yAlOt.As1NMvHdW/">த்வஜாவந்தி</a><br />3. <a href="http://www.musicindiaonline.com/p/x/tJI0NfO9-9.As1NMvHdW/">ஹமீர் கல்யாணி</a><br />4. <a href="http://www.musicindiaonline.com/p/x/t4I0EoG0-S.As1NMvHdW/">தேஷ்</a><br />5. <a href="http://www.musicindiaonline.com/p/x/tUI0fkzx-t.As1NMvHdW/">கதனகுதூகலம்</a><br />6. <a href="http://www.musicindiaonline.com/p/x/nUI0j3YsMd.As1NMvHdW/">கானடா</a><br />7. <a href="http://www.musicindiaonline.com/p/x/vJI08aXuOd.As1NMvHdW/">காபி</a><br />8. <a href="http://www.musicindiaonline.com/p/x/n4I0hz_wM9.As1NMvHdW/">பகடி</a>jeevagvhttp://www.blogger.com/profile/02747964167117423246noreply@blogger.com24tag:blogger.com,1999:blog-36268584.post-64830592960186692452008-02-10T21:32:00.000-05:002009-01-16T14:55:20.051-05:00Dating மோகனா/மோகினி/மோகனம்! - வெள்ளரிக்கா பிஞ்சு வெள்ளரிக்கா!வாங்க, இன்னிக்கி இசை இன்பத்தில், மோகனாவை டேட் பண்ணலாம்! <strong>மோகனாவை ஷார்ட் ஃபார்ம்ல எப்படிங்க கூப்பிடலாம்? மோகினி? மோகி? மோகு? மோக்ஸ்? மோனா? மோமோ?</strong><br />அட என்ன-ன்னு பாக்குறீங்களா? தமிழ் சினிமாவுல எங்க பார்த்தாலும் இந்த மோகனா தாங்க சூப்பர் ஸ்டார்! இவங்க இல்லாத ஹிட் படமே இல்லைங்கறேன்!<br /><br />அட, யாருப்பா இந்த மோகனா?<br />இப்ப எல்லாம் ஸ்ரேயா, அமோகா, சுஜா தானே! இலியானா கூட இல்லீயே! ஒரு வேளை மேகா நாயரைத் தான் மோகா, மோகி-ன்னு சொல்லுறாரோ?<br /><br />அட, இது அச்சு அசல் அக்மார்க் மோகனா-ங்க!<br />காதல் கோட்டை படம் பாத்திருப்பீங்களே! அதுல "<strong>வெள்ளரிக்கா பிஞ்சு வெள்ளரிக்கா, என்னைப் பாக்காமப் போறாளே சந்திரிகா</strong>"-ன்னு ஒரு பாட்டு கேட்டீங்களா? பிடிச்சிருந்துச்சா?<br />இந்தா, இன்னொரு தபா கேளுங்க! அதுல மோகனாவையும் க்ரீட்டாக் கண்டுபுடிங்க பார்ப்போம்!<br /><object height="355" width="425"><param name="movie" value="http://www.youtube.com/v/h1Q7CpxW7BY&rel=1"><param name="wmode" value="transparent"><br /><embed src="http://www.youtube.com/v/h1Q7CpxW7BY&rel=1" type="application/x-shockwave-flash" wmode="transparent" width="425" height="355"></embed></object><br />தெலுங்குல ப்ரேமலேகா-ன்னு அதே படம் வந்துச்சி...ஜிராகாரு, வெட்டிகாரு அதில் இருந்தும் கண்டுபுடிக்கலாம்!<br /><object height="355" width="425"><param name="movie" value="http://www.youtube.com/v/4L38AS2e88E&rel=1"><param name="wmode" value="transparent"><br /><embed src="http://www.youtube.com/v/4L38AS2e88E&rel=1" type="application/x-shockwave-flash" wmode="transparent" width="425" height="355"></embed></object><br /><hr size="0"><br />என்ன கண்டுபுடிச்சாச்சா? ஹிஹி!<br /><strong>மோகனம் என்னும் ராகம் இல்லாத ஹிட் படங்களே தமிழ் சினிமாவில் இல்லைன்னு சொல்லி விடலாம்</strong>! அந்த அளவுக்கு மோகனத்தில், தமிழ்த் திரை இசை ஊறிப் போயிருக்கு!<br /><br />மோகனம்-ங்கிற சொல்லுக்கே பொருள் என்னன்னா அழகு, மோகித்துப் போதல், சொக்கிப் போதல்!<br />வாங்க இன்னிக்கி மோகனத்தை டேட் பண்ணலாம், இசை இன்பத்தில்!<br />டேட்டிங்-னு சொன்னவுடனேயே, எனக்கு டேட்டிங் பாட்டு தான் ஞாபகம் வருது! <strong>பாய்ஸ் படத்தில் ஒரு அருமையான மோகனம்</strong>!<br /><br /><span style="color:#6600cc;">D-A-T-ING...You and me are meant to be!<br />Yeah..I can clearly see! Dating is a fantasy!!</span> என்று ஆங்கிலச் சொற்கள் நிறைய வந்தாலும்...<br /><span style="color:#6600cc;">பாய்ஸை ஏங்க வைக்காதே, ஹார்ட்டுல ஹெல்மெட் மாட்டாதே!</span> என்று செந்தமிழ்ச் சொற்களும் பாட்டில் விளையாடும்! :-))<br /><span style="color:#6600cc;">I dont want to love! I dont want to love!<br />Love is not a game!! Love is not a game!!-</span>ன்னு மோகனம் அப்படியே குழையும்! கேளுங்க!<br /><object height="355" width="425"><param name="movie" value="http://www.youtube.com/v/VbHCacirnPQ&rel=1"><param name="wmode" value="transparent"><br /><embed src="http://www.youtube.com/v/VbHCacirnPQ&rel=1" type="application/x-shockwave-flash" wmode="transparent" width="425" height="355"></embed></object><br /><hr size="0"><br />மோகனம்-ன்னாலே கொள்ளை அழகு-ன்னு பார்த்தோம்! அதான் கரெக்டா இந்த ராகத்துக்கும் மோகனம்-ன்னே பேரு வச்சிருக்காய்ங்க! <strong>மோகனத்துல எந்த ரசம் வேணும்னாலும் கொடுக்கலாம்!<br /></strong>அட மிளகு ரசம், தக்காளி ரசம், பைனாப்பிள் ரசம் எல்லாம் இல்லீங்க! நான் சொல்லும் ரசம் - காதல் ரசம், சிருங்கார ரசம், ஏக்க ரசம், வீர ரசம், பக்தி ரசம், காருண்ய ரசம்!<br /><br /><strong>ஆனாப் பொதுவா மோகனம்-னா அது காதலுக்கு உரிய ராகம்-னு ஆகிப் போச்சுது! </strong>அதுவும் மயக்கும் மாலை/இனிக்கும் இரவு நேர ராகம்-னா அது மோகனம் தான்!<br /><br />மோகனம் தான் இசையிலேயே மிகப் பழமையான ராகம் என்பது அறிஞர் பலரின் கருத்து!<br />சிலப்பதிகாரத்தில் வரும் பண்கள் பலவற்றுள் மோகனம் மிக முக்கியமான ஒன்று! <strong>முல்லைப் பண் - மோகன ராகம்</strong> அப்படியே அச்சு அசலாக ஒத்துப் போகிறது! அதன் நோட்ஸ், cycle of fifths வரிசையில் இருப்பதை இசை அறிஞர் டாக்டர். S. இராமநாதன் உறுதிப்படுத்தியுள்ளார்!<br /><br />தேவாரத் திருமுறைகள், ஆழ்வார்களின் அருளிச் செயல்கள் பலவற்றை மோகனத்தில் தான் இன்றும் பாடுகிறார்கள்! "நாயகனாய் நின்று" என்ற திருப்பாவைப் பாடலும் மோகனம் தான்! சீன, ஜப்பானிய, ஸ்வீடிஷ் மற்றும் ஜிப்சி இசையில் கூட மோகனம் தொனிக்கிறது! இந்துஸ்தானியில் இதுக்குப் பேரு "பூப்"/"பூபாளி" (பூபாளம் அல்ல!)<br /><br /><strong>இப்பேர்பட்ட மோகனத்தை, இசைஞானி இளையராஜா சும்மா விடுவாரா?</strong>நின்னுக்கோரி வர்ணம் வர்ணம் - இசைத்திட என்னைத் தேடி வரணும் வரணும்! -அக்னி நட்சத்திரம் படத்துல, யாரையோ மயக்க ஆடுவாங்க! யாரை மயக்க-ன்னு சரியா நினைவில்ல! ஆனா ஆடுறது அமலா! அது மட்டும் நினைவிருக்கு! :-)<br /><br />(சரி...அமலா இப்போ எங்க இருக்காங்க சாமீ? அம்மா, அக்கா ரோல்-ல கூட வரதில்லையா என்ன? அமலா காலத்துல நான் பச்சைப் புள்ளையா தான் இருந்தேன்! ஆனாலும் அவிங்க நடிச்ச வேதம் புதிது, அக்னி நட்சத்திரம், வேலைக்காரன் படமெல்லாம் இப்ப பார்க்கும் போது கூட, அக்கால ஜோதிகாவோ-ன்னு எண்ணத் தோனுது...)<br /><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiU42XK8CSb9n2_6gJOjg9AX5KXLvXPinlEj-tPzeOgY21UQcUU0Ih0b_IUl1bBQYgEBj55-Pk1xc5_br1vJrThr8IOkA8YiWFIWBUoI9I5IlcU3t5Zhwog9bmIPZHddPkszv_J/s1600-h/amala-cool-gallery.jpg"><img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiU42XK8CSb9n2_6gJOjg9AX5KXLvXPinlEj-tPzeOgY21UQcUU0Ih0b_IUl1bBQYgEBj55-Pk1xc5_br1vJrThr8IOkA8YiWFIWBUoI9I5IlcU3t5Zhwog9bmIPZHddPkszv_J/s320/amala-cool-gallery.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5165553717776127586" /></a><br />சரி, நாம மோகனம் மேட்டருக்கு வருவோம்!<br />அக்னி நட்சத்திரம் படத்துல, இளையராஜா இதைப் போட்ட விதமே சூப்பர்! நின்னுக் கோரி-ன்னு கர்நாடக இசை வர்ணத்தின் சொற்களைப் பாட்டில் அப்படியே எடுத்தாண்டு இருக்கிறார்! அந்தப் பாடல் முழுதுமே மோகனம் தான்! கேளுங்க!<br /><object width="425" height="355"><param name="movie" value="http://www.youtube.com/v/MJ-68ASnkDw&rel=1"></param><param name="wmode" value="transparent"></param><embed src="http://www.youtube.com/v/MJ-68ASnkDw&rel=1" type="application/x-shockwave-flash" wmode="transparent" width="425" height="355"></embed></object><br /><hr size="0"><br />கொஞ்சமா மோகனத்தைப் பத்திச் சொல்லிக்கிறேன். அப்பாலிக்கா இளையராஜா முதற்கொண்டு ஒவ்வொரு இசையமைப்பாளரும் மோகனத்தை எப்படிக் கையாண்டாங்கன்னு பார்த்துவிடலாம்!<br /><br />மோகன ராகத்தில் உள்ள எல்லா ஸ்வரங்களையும் "<strong>கமகம்</strong>" என்று சிறப்பாகச் சொல்லப்படும் ஒரு தொனியில் தர முடியும்! அதுனால இதுக்கு சர்வ ஸ்வர கமக ராகம்-ன்னே பேரு! திருமணங்களில் மோகனம் வாசிப்பது மங்களகரமானது! எல்லாக் காலங்களிலும் வாசிக்கலாம் என்றாலும், காதல் ராகம் அல்லவா? மாலை/இரவு வேளைகளில் இன்னும் நல்லா இருக்கும்!<br /><br />கர்நாடக இசையில் மோகனத்தைக் கட்டியாண்டது மகராஜபுரம் வழி வந்த பாடகர்கள்! முத்துசாமி தீட்சிதரின் "கோபிகா மனோகரம் பஜேகம்" என்பது மகராஜபுரம் சந்தானத்தின் ஃபேவரிட் பாடல்!<br /><br />மோகனத்தின் பேரையே வைத்து, <a href="http://www.musicindiaonline.com/p/x/mJb2P8Hc1d.As1NMvHdW/" target="new">மோகன ராமா</a> என்று தியாகராஜர் பாடியிருக்கும் பாட்டு, மற்றும் அவரின் <a href="http://www.musicindiaonline.com/p/x/VUX2t9u4eS.As1NMvHdW/" target="new">நன்னு பாலிம்ப</a> - இவை இரண்டும் மதுரை மணியின் ஃபேவரிட்!<br /><br />தமிழிசைப் பாடல்களில்<br />அருணாச்சலக் கவிராயரின் <a href="http://www.musicindiaonline.com/p/x/nUO2ikEUp9.As1NMvHdW/" target="new">ஏன் பள்ளி கொண்டீர் ஐயா</a>, மற்றும் பாபநாசம் சிவனின் <a href="http://www.musicindiaonline.com/p/x/wJX2mPA8g9.As1NMvHdW/" target="new">நாராயண திவ்ய நாமம்</a> - இவையும் மோகனம் தான்! <a href="http://www.musicindiaonline.com/p/x/f4X2t7P8OS.As1NMvHdW/" target="new">ஸ்வாகதம் கிருஷ்ணா</a> என்னும் ஊத்துக்காடு வேங்கட கவியின் மோகனப் பாடல் மிகவும் பிரபலம்!<br /><br /><a href="http://www.musicindiaonline.com/p/x/C4y273TopS.As1NMvHdW/" target="new">மயில் வாகனா, வள்ளி மண மோகனா</a> என்னும் பாட்டும் முருகப் பெருமான் மேல் அமைந்த மோகனம்! இம்புட்டுச் சொல்லிட்டு, <a href="http://www.musicindiaonline.com/p/x/jJK2Hny.7d.As1NMvHdW/" target="new">நம்ம கேபி சுந்தராம்பாள்</a> பாடுற மோகனத்தைச் சொல்லாம விட முடியுமா? - ஆனந்த தாண்டவம் என்னும் பாட்டு!<br /><br />உஷ்...அப்பா, மூச்சு வாங்குதே!...சினிமாவுக்குப் போகலாம்-பா!<br /><hr size="0"><br /><a href="http://www.musicindiaonline.com/p/x/EUCgI29cwt.As1NMvHdW/" target="new">பூவில் வண்டு கூடும் கண்டு பூவும் கண்கள் மூடும் - காதல் ஓவியம் - SPB - இளையராஜா</a><br /><object width="425" height="355"><param name="movie" value="http://www.youtube.com/v/V69pGaQpen8&rel=1"></param><param name="wmode" value="transparent"></param><embed src="http://www.youtube.com/v/V69pGaQpen8&rel=1" type="application/x-shockwave-flash" wmode="transparent" width="425" height="355"></embed></object><br /><br />கம்பன் ஏமாந்தான் - நிழல் நிஜமாகிறது - SPB - MSV (ஜிரா-வுக்காக பதிவிட்ட பின்னர் சேர்த்தது :-)<br /><object width="425" height="355"><param name="movie" value="http://www.youtube.com/v/orS3YMtZJuc&rel=1"></param><param name="wmode" value="transparent"></param><embed src="http://www.youtube.com/v/orS3YMtZJuc&rel=1" type="application/x-shockwave-flash" wmode="transparent" width="425" height="355"></embed></object><br /><br /><a href="http://musicmazaa.com/MMaPlayer/playsongs.php?id=3841&lan=2" target="new">கீதம் சங்கீதம் - நீ தானே என் காதல் வேதம் - கொக்கரக்கோ - SPB/Shylaja - இளையராஜா</a><br /><object width="425" height="355"><param name="movie" value="http://www.youtube.com/v/G1JIKFoEzgQ&rel=1"></param><param name="wmode" value="transparent"></param><embed src="http://www.youtube.com/v/G1JIKFoEzgQ&rel=1" type="application/x-shockwave-flash" wmode="transparent" width="425" height="355"></embed></object><br /><br /><a href="http://musicmazaa.com/MMaPlayer/playsongs.php?id=1176&lan=2" target="new">கண்மணியே காதல் என்பது - ஆறில் இருந்து அறுபது வரை - இளையராஜா</a><br /><object width="425" height="355"><param name="movie" value="http://www.youtube.com/v/jHBHfUVgjDg&rel=1"></param><param name="wmode" value="transparent"></param><embed src="http://www.youtube.com/v/jHBHfUVgjDg&rel=1" type="application/x-shockwave-flash" wmode="transparent" width="425" height="355"></embed></object><br /><br /><a href="http://www.musicindiaonline.com/p/x/PVOgf1IpxS.As1NMvHdW/" target="new">வான் போல வண்ணம் கொண்டு வந்து - சலங்கை ஒலி - SPB/Shylaja - இளையராஜா</a><br /><object width="425" height="355"><param name="movie" value="http://www.youtube.com/v/QegFOMbp_94&rel=1"></param><param name="wmode" value="transparent"></param><embed src="http://www.youtube.com/v/QegFOMbp_94&rel=1" type="application/x-shockwave-flash" wmode="transparent" width="425" height="355"></embed></object><br /><br /><a href="http://www.musicindiaonline.com/p/x/OJ2gbrKHFt.As1NMvHdW/" target="new">மீன் கொடி தேரில் மன்மத ராஜன் ஊர்வலம் போகின்றான்! - கரும்பு வில் - யேசுதாஸ் - இளையராஜா</a><br /><br /><a href="http://www.youtube.com/watch?v=irCFv-xxok8" target=new>கங்கை-யமுனை-இங்கு தான் சங்கமம்! - இமயம் - யேசுதாஸ்/வாணி ஜெயராம் - மெல்லிசை மன்னர் எம்.எஸ்.வி</a><br /><br />இன்னும் ரஹ்மான், ஹாரிஸ், தேவான்னு வரிசையா மோகனத்தை எல்லாம் பின்னூட்டத்தில் சொல்லுங்கப்பா!<br /><br />அது இல்லாம மோகனமும் கல்யாணியும் கலந்தடிச்சி மோகனகல்யாணி ன்னு வேற இருக்காமே! மோகனகுறிஞ்சி, மோகனசந்திரிகா, மோகனவராளி, மோகனாங்கி...ன்னு இன்னும் எத்தனையோ மோகனாஸ்!<br />சரி அடுத்த யாரை டேட் பண்ணலாம்? யோசிச்சிச் சொல்லுறேன்! வர்ட்டா? :-)<br /><br /><span style="font-size:85%;"><strong>References (உசாத்துணை):</strong><br />http://www.carnatica.net/special/raganubhava-mohanam-ppn.htm</span><br />நண்பர் சிமுலேஷனின் மோகனம் பற்றிய பதிவு <a href="http://simulationpadaippugal.blogspot.com/2006/09/04.html" target=new>இங்கே!</a>Kannabiran, Ravi Shankar (KRS)http://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.com54tag:blogger.com,1999:blog-36268584.post-60096783911092972382008-02-05T21:09:00.000-05:002009-01-16T14:55:20.055-05:00ஐ.நா.சபையில் எம்.எஸ்.சுப்புலட்சுமி! பாடிக் கேட்டிருக்கீங்க! பேசிக் கேட்டிருக்கீங்களா?"இங்கு எத்தனை பதிவர்கள் நல்லாப் பாடுவீங்க? கை தூக்குங்க!"<br /><br />"இல்ல......என் குரல் நலமா, வளமாத் தான் இருக்கும்! பேசும் போது கூட, பல பேர் சொக்கிப் போயிடுவாங்க! ஆனா கொஞ்சம் லைட்டாப் பாடினாத் தான் மக்கள் வீறு கொண்டு எழுந்து, பின்னூட்டத்தில் கல்லெறிவாய்ங்க!"<br /><br />"ஹா ஹா ஹா! பேசும் போது நல்லா இருக்கும்! ஆனாப் பாடும் போது தான் அவ்வளவா நல்லா இருக்காது! அதானே சொல்ல வரீங்க?"<br /><br />"ஆமாங்க! சரி நமக்குத் தான் இப்படி! பிரபலமான பாடகர்கள் எல்லாம் எப்படிங்க? பாடும் போது நல்லாப் பாடுவாங்க! ஆனாப் பேசும் போது அவிங்க குரல் எப்படி இருக்குமோ?"<br /><br />"இம்புட்டுச் சந்தேகம் எதுக்கு? இசையரசி எம்.எஸ்.சுப்புலட்சுமி அம்மா பாடிக் கேட்காதவங்க இருக்கவே முடியாது! - <strong>அவங்க பாடிக் கேட்டிருக்கீங்க! ஆனால் பேசிக் கேட்டிருக்கீங்களா?"<br /></strong><br />"ஆகா...அவங்க பேசின டேப்பு ஏதாச்சும் வச்சிருக்கீங்களா என்ன?"<br /><br />"டேப்பும் இல்ல, சோப்பும் இல்ல! அசைபடமே இருக்கு! பாருங்க! <strong>பாடும் போது இருக்கும் குரலுக்கும், பேசும் போது இருக்கும் குரலுக்கும் என்ன வித்தியாசம் தெரியுது-ன்னு பார்த்துச் சொல்லுங்க பார்ப்போம்!"</strong><strong></strong><br /><hr size="0"><br />நியூயார்க் ஐ.நா. சபையில் நடந்த தனது இசை நிகழ்ச்சி பற்றியும்,<br />அதற்கு ஒரு நாள் முன்பு, தன் தொண்டை கட்டிக் கொண்டதைப் பற்றியும்,<br />எம்.எஸ்.அம்மா ஒரு பேட்டியில் சொல்லறாங்க! பேச்சைக் கேளுங்க! இதோ அசைபடம்.<br /><object height="355" width="425"><param name="movie" value="http://www.youtube.com/v/-QQBdvkkNPc&rel=1"><param name="wmode" value="transparent"><br /><br /><embed src="http://www.youtube.com/v/-QQBdvkkNPc&rel=1" type="application/x-shockwave-flash" wmode="transparent" width="425" height="355"></embed></object><br /><br /><hr size="0"><br /><strong>இசை வாணியின் பேசும் குரல் கேட்டீங்களா மக்களே?</strong><br />அவர்களின் பாடும் குரலும் கேட்டு விடலாமா? சரி, அவங்க பேட்டியில் சொல்லும் அந்த ஐ.நா.சபை நிகழ்ச்சி! <strong>இதோ அந்தச் சிறப்பு மிக்க நிகழ்ச்சி!</strong><br /><br /><p><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg5deYIYFS0WGbvJBgRCfdaBUBcfcUuZkasJd9387EnlvApib_yeGrKwNPoDzoOFbAIksZCdbWzkG8l23HTm3CRuA-C37FnJknZYk8xOSLg1sSsjdf4_Lid4lw70Vs_yrOPgD6z/s1600-h/2005091600270301.jpg"><img id="BLOGGER_PHOTO_ID_5163683329490904482" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; CURSOR: hand; TEXT-ALIGN: center" alt="" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg5deYIYFS0WGbvJBgRCfdaBUBcfcUuZkasJd9387EnlvApib_yeGrKwNPoDzoOFbAIksZCdbWzkG8l23HTm3CRuA-C37FnJknZYk8xOSLg1sSsjdf4_Lid4lw70Vs_yrOPgD6z/s320/2005091600270301.jpg" border="0" /></a>அதுக்கு முன்னாடி ஒரு சின்ன முன்னுரை.<br />Oct 23 1966.<br />ஐ.நா. தினத்தை முன்னிட்டு, பொதுச் செயலாளர் யூ தாண்ட் (U Thant) அவர்களூடைய சிறப்பு அழைப்பின் பேரில், எம்.எஸ் நியூயார்க் சென்றார்.<br /><br />அமெரிக்காவில் வாய்ப்பாட்டை விட, இசைக்கருவிக்கு மவுசு அதிகம். பாடறவங்க கூட, கருவிகளை நல்லா பலமா ஒலிக்க விட்டுப் பாடுவாங்க! இங்கே இது மாதிரி மெல்லிய இசை எல்லாம் எடுபடுமா என்று கேள்வி வந்ததாம் ஐ.நா. சபையில்!<br /><br />நியூயார்க் டைம்ஸ் வேறு, பிச்சி உதறி எடுக்கும் பத்திரிகை! நிகழ்ச்சிக்கு முதல் நாள் மாலையில் அவ்வளவா வரவேற்போ, கவரேஜோ எதுவுமே இல்லை பத்திரிகைகளில்!<br />ஆனால் ஐ.நா. ஜெனரல் அசெம்ப்ளி ஹாலில் (United Nations-General Assembly Hall), இசை நிகழ்ச்சியைக் கேட்ட பின்னர்.......அடுத்த நாள் காலைச் செய்திகளில் எங்கும் இதைப் பற்றியே பேச்சு! பின்னர் இன்னொரு நாள் நியூயார்க் Carnegie Hall-இல் எம்.எஸ். பாடிய போது, கூட்டம் நிரம்பி வழிந்ததாம்!<br /><br /><strong>The New York Times said</strong>: "Subbulakshmi's vocal communication trancends words. The cliche of 'the voice used as an instrument` never seemed more appropriate. It could fly flutteringly or carry on a lively dialogue with the accompanists. Subbulakshmi and her ensemble are a revelation to Western ears. Their return can be awaited with only eagerness."<br /><br /><strong>Dr. W. Adriaansz, Professor of Music, University of Washington, wrote</strong>: "For many, the concert by Mrs. Subbulakshmi meant their first encounter with the music of South India and it was extremely gratifying that in her the necessary factors for the basis of a successful contact between her music and a new audience - highly developed artistry as well as stage presence - were so convincingly present...without any doubt (she) belongs to the best representants of this music." <hr size="0"><br /><p align="center"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg7iR12Un-ZstgqjUMDKcAM56ediLBd7OS0f3FVSKN4SH8BEoaAC0vKNtPLDabM3wpWXF6xGLf2Y_rtEkwoqJIqkjzgki5tgM3PYQyxLrhJdN5yY3uZS2lOvySG3M_5f_r9md98/s1600-h/16190972.jpg"><img id="BLOGGER_PHOTO_ID_5163682333058491794" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; CURSOR: hand; TEXT-ALIGN: center" alt="" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg7iR12Un-ZstgqjUMDKcAM56ediLBd7OS0f3FVSKN4SH8BEoaAC0vKNtPLDabM3wpWXF6xGLf2Y_rtEkwoqJIqkjzgki5tgM3PYQyxLrhJdN5yY3uZS2lOvySG3M_5f_r9md98/s320/16190972.jpg" border="0" /></a><span style="font-size:78%;">ஐ.நா. செயலர் யூ தாண்ட்-உடன், குழுவினர் (pic courtesy: The Hindu)</span></p>இதில் நாம் பார்க்கப் போகும் வீடியோ, <strong>ஜகதோத்தாரணா</strong> என்னும் கன்னடப் பாட்டு! புரந்தரதாசர் காபி ராகத்தில் எழுதியது! இன்னும் வேறு சில இந்திய மொழிப் பாடல்களும் அந்த நிகழ்ச்சியில் எம்.எஸ். பாடியிருக்காங்க! ஆனா எல்லாத்துக்கும் சுட்டியோ, அசைபடமோ கிடைக்கல!<br />தமிழ்நாட்டுப் பாடகி, ஐ.நா.வரைக்கும் போய், தமிழ்ப் பாட்டெல்லாம் பாட மாட்டாங்களோ? -அப்படின்னு யாரும் கேட்கலையா என்ன? :-)<br /><br />முக்கியமாக சிலப்பதிகாரத்தில் இருந்து "வடவரையை மத்தாக்கி" என்னும் ஆய்ச்சியர் குரவைப் பாட்டு! முல்லை நிலத் தமிழ்க் கடவுள் கண்ணபிரான் மேல் இளங்கோவடிகள் புனைந்த பாட்டு!<br /><span style="color:#6600cc;">கரியவனைக் காணாத கண் என்ன கண்ணே! கண் இமைத்துக் காண்பார் தம் கண் என்ன கண்ணே! திருமால் சீர் கேளாத செவி என்ன செவியே!</span><br /><a href="http://www.musicindiaonline.com/p/x/CqQ2Z4XjNt.As1NMvHdW" targte="new">இதை மிகவும் அழகிய ராக மாலிகையாக</a> எம்.எஸ், அந்த நிகழ்ச்சியில் பாடி இருக்காங்க! (இந்தச் சுட்டியில் கேட்பது, அப்போது ஒலிப்பதிவு செய்யப்பட்டது அல்ல); இந்தப் பாட்டின் வரிகளுக்கும், பொருளுக்கும் <a href="http://koodal1.blogspot.com/2006/01/127.html" target="new">இங்கே செல்லவும்!</a><br /><br />காந்தியடிகளுக்கு மிகவும் பிடித்தமான <strong>ஹரி தும் ஹரோ</strong> என்னும் மீரா பஜன், மற்றும் மறைந்த காஞ்சிப் பெரியவர் எழுதிய <strong>மைத்ரீம் பஜத</strong> என்னும் உலக அமைதிப் பாடல் - இவையும் நிகழ்ச்சியில் இடம் பெற்றன! மைத்ரீம் பஜத பாடல் வரி/பொருள் <a href="http://koodal1.blogspot.com/2005/10/blog-post_112882554482724624.html" target="new">இங்கே!</a><br /><br /><span style="font-size:85%;">குரல்: எம்.எஸ்.சுப்புலட்சுமி<br />உடன்: ராதா விஸ்வநாதன்<br />தம்பூரா: விஜயா இராஜேந்திரன்<br />வயலின்: V.V.சுப்ரமணியன்<br />மிருதங்கம்: T.K.மூர்த்தி<br />கடம்: T.H.விநாயக்ராம்</span><br /><br /><span style="color:#660000;">ஜகதோத்தாரணா, ஆடிசிடலு யசோதே!<br /></span><strong><span style="color:#006600;">உலகைப் புரப்பவா - உடன் ஆடினளே யசோதை!</span><br /></strong><br /><span style="color:#660000;">ஜகதோத்தாரணா, மகனென்டு தில்லியுதா<br />மகுகல மாணிக்யான, ஆடிசிடலு யசோதே!<br /></span><strong><span style="color:#006600;">உலகைப் புரப்பவா - மகனென்று தெரியாதா?<br />சிறுவருடன் முத்தாடி - உடன் ஆடினளே யசோதை! </span></strong><br /><object height="355" width="425"><param name="movie" value="http://www.youtube.com/v/qli9tU5MJa0&rel=1"><param name="wmode" value="transparent"><br /><br /><embed src="http://www.youtube.com/v/qli9tU5MJa0&rel=1" type="application/x-shockwave-flash" wmode="transparent" width="425" height="355"></embed></object><br /><br /><hr size="0"><br />என்னாங்க, முடிவுக்கு வந்தாச்சா?<br /><strong>பாடும் குரலா? பேசும் குரலா?</strong> - எம்.எஸ் பேசும் குரலே இனிப்பாகத் தான் உள்ளது! பேசும் குரல் கட்சிக்காரங்க எல்லாம், காலரைத் தூக்கி விட்டுக்குங்க! நீங்களும் நல்லாவே பேசறவங்களாச்சே! :-)<br /><br /><span style="font-size:85%;"><u>References (உசாத்துணை):</u><br />Ramon Magsaysay Award for Public Service - Article -http://www.rmaf.org.ph/Awardees/Biography/BiographySubbulakshmiMon.htm<br />Dhool.com Article - http://www.dhool.com/phpBB2/viewtopic.php?t=3323<br />Medieval.org song list at the UN - http://www.medieval.org/music/world/cds/rpg5306.html</span>Kannabiran, Ravi Shankar (KRS)http://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.com28tag:blogger.com,1999:blog-36268584.post-5139986399944405352008-01-27T12:30:00.000-05:002008-01-30T08:16:50.148-05:00திரை இசையில் தர்பாரி கனடா ராகம்கல்யாணத் தேன் நிலா / கே.ஜே.ஜேசுதாஸ், சித்ரா / மௌனம் சம்மதம்<br /><object height="355" width="425"><param name="movie" value="http://www.youtube.com/v/vkUqCOaePo0&rel=1"><param name="wmode" value="transparent"><embed src="http://www.youtube.com/v/vkUqCOaePo0&rel=1" type="application/x-shockwave-flash" wmode="transparent" height="355" width="425"></embed></object><br /><br />மலரே மௌனமா / எஸ்.பி.பாலா, எஸ்.ஜானகி / கர்ணா<br /><object height="355" width="425"><param name="movie" value="http://www.youtube.com/v/9l7Rl5s5k7w&rel=1"><param name="wmode" value="transparent"><embed src="http://www.youtube.com/v/9l7Rl5s5k7w&rel=1" type="application/x-shockwave-flash" wmode="transparent" height="355" width="425"></embed></object><br /><br />நீ காற்று / ஹரிஹரன் / நிலாவே வா<br /><object height="355" width="425"><param name="movie" value="http://www.youtube.com/v/b4zH8r4Y3Bo&rel=1"><param name="wmode" value="transparent"><embed src="http://www.youtube.com/v/b4zH8r4Y3Bo&rel=1" type="application/x-shockwave-flash" wmode="transparent" height="355" width="425"></embed></object><br /><br />ஆகாய வெண்ணிலாவே / கே.ஜே.ஜேசுதாஸ் / அறங்கேற்ற வேளை<br /><object height="355" width="425"><param name="movie" value="http://www.youtube.com/v/4ArDnX-RUWU&rel=1"><param name="wmode" value="transparent"><embed src="http://www.youtube.com/v/4ArDnX-RUWU&rel=1" type="application/x-shockwave-flash" wmode="transparent" height="355" width="425"></embed></object><br /><br />ஒரே மனம் ஒரே குணம் / ஹரிஹரன், சாதனா சர்கம் / வில்லன்<br /><object height="355" width="425"><param name="movie" value="http://www.youtube.com/v/F7vfNe_yIi0&rel=1"><param name="wmode" value="transparent"><embed src="http://www.youtube.com/v/F7vfNe_yIi0&rel=1" type="application/x-shockwave-flash" wmode="transparent" height="355" width="425"></embed></object><br /><br />ஹிந்துஸ்தானியில் புகழ்பெற்ற இந்த ராகம், அக்பரின் அரசவையில் இசைக் கலைஞர் தான்சேனால் தென் இந்தியாவில் இருந்து அறிமுகப்படுத்தப் பட்டது என்பார்கள். அக்பரின் அரசைவையில் பெருமிதத்துடன் இசைக்கப்பட்ட ராகமாதலால் 'தர்பாரி' கனடா எனப் பெயர் பெற்றது போலும்.<br /><br />சாந்தமும், அமைதியும் தரவல்லதான இந்த ராகத்தில் அமைக்கப்பட்ட பாடல்கள் தமிழ்த் திரை இசையில் இன்னும் நிறைய உண்டு. உங்களுக்கு தெரிந்தவற்றை எடுத்து விடுங்களேன்...!jeevagvhttp://www.blogger.com/profile/02747964167117423246noreply@blogger.com17tag:blogger.com,1999:blog-36268584.post-88425085125561473962008-01-14T22:23:00.001-05:002009-01-16T14:55:20.058-05:00தமிழ் சினிமாவில் பொங்கல் பாடல்கள்!<strong><span style="color:#006600;">நண்பர்கள் அனைவருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துக்கள்!</span></strong><br />எங்கூரு வாழைப்பந்தலில், இன்னிக்கி யாரைப் பார்த்தாலும், பால் பொங்குச்சா?-ன்னு கேப்பாங்க! அட வெண்ணெ, பால் பொங்காம, பானையா பொங்கும்? அப்படின்னு எதிர்க்கேள்வி எல்லாம் யாரும் கேக்க மாட்டாங்க! :-)<br /><br />பொங்கலோ பொங்கல்-ன்னு ஜாலியா பதில் சொல்லிட்டு, பாடிக்கிட்டே போயிக்கிட்டு இருப்பாங்க! அப்படி ஒரு பாட்டு மூட் வந்துரும் எல்லாருக்கும்!<br />மாலையில் பெருமா கோயிலு மண்டபத்து வாசப்பக்கம் சடக்கு சடக்கு-ன்னு பெண்கள் கும்மி வேற! அப்படி நாள் முழுக்க சந்தோசமா, பாட்டு பாடியே, பொங்க பொங்கும்!<br /><table align="center"><tbody><tr><td><a title="Photo Sharing" href="http://www.flickr.com/photos/48933488@N00/357864993/"><img height="180" alt="6AA76" src="http://farm1.static.flickr.com/139/357864993_ae526a7e23_m.jpg" width="240" /></a></td><td><a title="Photo Sharing" href="http://www.flickr.com/photos/48933488@N00/357864996/"><img height="181" alt="12AA62" src="http://farm1.static.flickr.com/133/357864996_2abfa5ed80_m.jpg" width="240" /></a></td></tr></tbody></table><br />இப்பெல்லாம் வானொலி, தொலைக்காட்சியில் பொங்கல் அன்னிக்கி ஒரே சத்தமா இருக்குல்ல? காலையில் கொஞ்ச நேரம் வேணும்னா ஏதோ பொங்கல் விழா பத்திக் காட்டுவாய்ங்க!<br />மீதி நேரம் எல்லாம் பட்டிமண்டபம், பாட்டிமண்டபம், அரட்டை அரங்கம், சினிமாப் பாட்டு, புது ரிலீஸ், இந்தியத் தொலைக்காட்சிகளில் முதல் முறையாக-ன்னு ரெண்டு சிறப்புப் படம் - இப்படியே பொங்கல் ஓடிடும்! போதாக்கொறைக்கு பொன்னம்மா, நடிகைங்க எப்படி கேஸ் அடுப்பில் பொங்கல் வைக்கறாங்க - அப்படி இப்படின்னு, கும்மாளத்துக்கு இடையில் கூச்சலும் கொஞ்சம் அதிகம் தான்! :-)<br /><br />நம்ம மக்கள்ஸ்-உம் பொங்கல் அன்னிக்கி டிவி பெட்டி முன்னாடி உக்காந்துட்டா சொல்லவே வேணாம்! பொங்கல் பொங்கும் சமயமாப் பார்த்து, அம்மா அடுக்களையில் இருந்து கூப்பிட்டாக் கூட, ஆடி அசைஞ்சி தான் சிலது வருதுங்க!<br />மஞ்சக் கொத்து, முழுக் கரும்பு, மொச்சை, காராமணி, வள்ளிக் கிழங்கு, பூசணிப் பத்தை! பரங்கிப்பூ இலையில் அத்தனையும் கொட்டிப் பொங்கல் பரப்பி வைக்கறது எல்லாம் சென்னையில் இன்னும் எம்புட்டு நாள் இருக்கும்-னு நினைக்கிறீங்க? :-)<br /><br />சும்மா டிவி பொட்டிய மட்டும் கட்டிக்கினு அழாம, <strong>நம்ம தமிழ் சினிமாப் பாடல்களில் பொங்கல் பத்திய பாட்டெல்லாம் என்ன-ன்னு ஒரு கணக்கு எடுக்கலாம் வாரீகளா?<br /></strong>எனக்குத் தெரிஞ்சதை நான் துவங்கி வைக்கிறேன்!<br />பழசோ, புதுசோ எல்லாப் பாட்டையும் பின்னூட்டத்தில் சொல்லுங்க மக்கா!<br /><strong><span style="color:#006600;">பொங்கலோ பொங்கல்!</span></strong><br /><hr size="0"><br />1.<br /><a href="http://www.musicindiaonline.com/p/x/RUXgkyJfvd.As1NMvHdW/" target="new">காட்டுக்குயிலு மனசுக்குள்ள, பாட்டுக்கொன்னும் பஞ்சமில்ல, பாடத் தான்!</a><br />படம்: தளபதி<br />குரல்: SPB, ஜேசுதாஸ் | இசை: இளையராஜா<br /><br /><strong>தை பொறக்கும் நாளை விடியும் நல்ல வேளை<br />பொங்கப் பான வெள்ளம் போலப் பாயலாம்<br />அச்சு வெல்லம் பச்சரிசி வெட்டி வெச்ச செங்கரும்பு<br />அத்தனையும் தித்திக்கிற நாள் தான்....ஹோய்</strong><br /><object height="355" width="425"><param name="movie" value="http://www.youtube.com/v/M5onAObhwcE&rel=1"><param name="wmode" value="transparent"><embed src="http://www.youtube.com/v/M5onAObhwcE&rel=1" type="application/x-shockwave-flash" wmode="transparent" width="425" height="355"></embed></object><br /><br />2.<br /><strong>தைப் பிறந்தா வழி பிறக்கும் தங்கமே தங்கம்!<br />தங்கச் சம்பா நெல் விளையும் தங்கமே தங்கம்!</strong><br />(இதுக்கு ஒலிச்சுட்டி யாரிடமாச்சும் இருக்கா?)<br />படம்: தைப் பிறந்தால் வழி பிறக்கும்<br />குரல்: மருதகாசி(?) | இசை: கே.வி. மகாதேவன்<br /><br />3. பொங்கலை பொங்கல வைக்க, மஞ்சள மஞ்சள எடு, தங்கச்சி தங்கச்சி தங்கச்சி!<br /><a href="http://www.musicindiaonline.com/p/x/U5Cgi9Rgsd.As1NMvHdW/" target="new">பூ பூக்கும் மாசம் தை மாசம்!</a><br />படம்: வருஷம் 16<br />குரல்: சித்ரா | இசை: இளையராஜா<br /><br />4. <a href="http://www.musicindiaonline.com/p/x/.Jyg5JmE.t.As1NMvHdW/" target="new">தைப்பொங்கலும் வந்தது, பாலும் பொங்குது</a><br />படம்: மகாநதி<br />குரல்: சித்ரா | இசை: இளையராஜா<br /><br />5. <a href="http://www.musicindiaonline.com/p/x/PAvg_9aket.As1NMvHdW/" target="new">ஐ.ஆர். நாட்டுக்கட்டு</a><br />படம்: மஜா<br />குரல்: சங்கர் மகாதேவன், அனுராதா ஸ்ரீராம் | இசை: வித்யாசாகர்<br /><object height="355" width="425"><param name="movie" value="http://www.youtube.com/v/dDpgSJ_O7HI&rel=1"><param name="wmode" value="transparent"><embed src="http://www.youtube.com/v/dDpgSJ_O7HI&rel=1" type="application/x-shockwave-flash" wmode="transparent" width="425" height="355"></embed></object><br /><br />6. <a href="http://www.musicindiaonline.com/p/x/yUvg2XV4g9.As1NMvHdW/" target="new">தை மாதப் பொங்கலுக்கு, தாய் தந்த செங்கரும்பே!</a><br />படம்: நிலவே நீ சாட்சி<br />குரல்: பி.சுசீலா | இசை: MSV<br /><br />7. <a href="http://www.musicindiaonline.com/p/x/SJpgG-gWat.As1NMvHdW/" target="new">பொதுவாக என் மனசு தங்கம்</a><br />படம்: முரட்டுக் காளை<br />குரல்: மலேசியா விஸ்வநாதன் | இசை: இளையராஜா<br /><object height="355" width="425"><param name="movie" value="http://www.youtube.com/v/dJeW9LKQhMQ&rel=1"><param name="wmode" value="transparent"><embed src="http://www.youtube.com/v/dJeW9LKQhMQ&rel=1" type="application/x-shockwave-flash" wmode="transparent" width="425" height="355"></embed></object><br /><br />8. <a href="http://www.musicindiaonline.com/p/x/Tr2g1phhBd.As1NMvHdW/" target="new">கடவுள் என்னும் முதலாளி, கண்டெடுத்த தொழிலாளி...விவசாயி..</a><br />படம்: விவசாயி<br />குரல்: TMS | இசை: KVM<br /><br />9. <a href="http://www.musicindiaonline.com/p/x/JACgEYjhlt.As1NMvHdW/" target="new">நல்ல நல்ல நிலம் பார்த்து</a><br />படம்: விவசாயி<br />குரல்: TMS | இசை: KVM<br /><br />10.<a href="http://www.musicindiaonline.com/p/x/9V2gjYNKgt.As1NMvHdW/" target=new>அஞ்சாத சிங்கம் என் காளை</a><br />படம்: வீரபாண்டிய கட்டபொம்மன்<br />குரல்: பி.சுசீலா | இசை: ஜி.ராமநாதன்<br /><object width="425" height="355"><param name="movie" value="http://www.youtube.com/v/4L3neWTLRzg&rel=1"></param><param name="wmode" value="transparent"></param><embed src="http://www.youtube.com/v/4L3neWTLRzg&rel=1" type="application/x-shockwave-flash" wmode="transparent" width="425" height="355"></embed></object><br /><br />11.<a href="http://www.musicindiaonline.com/p/x/WJygFFvFRt.As1NMvHdW/" target=new>மணப்பாறை மாடு கட்டி</a><br />படம்: மக்களைப் பெற்ற மகராசி<br />குரல்: TMS | இசை: KVM<br /><br />12.<a href="http://www.musicindiaonline.com/p/x/TJ3gZOMgG9.As1NMvHdW/" target=new>இந்தப் பூமியே எங்க சாமீயம்மா</a><br />படம்: புதுப் பாட்டு<br />குரல்: ஜானகி, மனோ | இசை: இளையராஜா<br /><br /><br />அப்படியே கன்டினியூ பண்ணுங்க மக்கா!<br />தலைவர் எம்.ஜி.ஆர் பாட்டு எத்தினி இருக்கு?<br />விவசாயி - எங்க இருக்கீங்க? வாங்க கோதாவுக்குள்ள! உங்க திருநாள் இது! :-)Kannabiran, Ravi Shankar (KRS)http://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.com12tag:blogger.com,1999:blog-36268584.post-13353480282673170402008-01-06T19:09:00.000-05:002008-01-13T09:57:28.930-05:00தமிழ்த் திரை இசையில் டாப் டென் 20072007 ஆம் வருடமும் முடிந்து விட்டது. ஆண்டாண்டு வழக்கம்போல, இந்த வருடமும் டாப் டென் பாடல்களை வரிசைப்படுத்துகிறேன். இதுதான் இசை இன்பத்தில் இந்த இடுகையைத் தருவது முதல் முறை என்றாலும், சென்ற சில வருடப் பட்டியல்களை இந்தப் பதிவின் இறுதியில் பார்க்கலாம். இந்தப் பதிவு எழுதுத் துவங்குமுன் எனக்குப் பிடித்திருந்த பாடல்கள் - இரண்டு மூன்றுதான். இந்தப் பதிவு எழுதுவதற்காக, சென்ற வருடத்தில் வந்த திரைப்படங்களில் இருந்து முடிந்த அளவிற்கு கேட்டபின், ஏனைய பாடல்களை கேட்டறிந்தேன்! இவற்றில் விட்டுப்போன பாடல்களும் இருக்கலாம். இன்னமும் சிலமுறை கேட்டுப்பார்த்தால், இன்னபிறவும் பிடித்துப்போகலாம். வரிசைப்படுத்துகையில் நான் கணக்கில் கொண்டது பாடலின் இசையும், பாடகர் குரலுமே பெரிதுமாக - பாடலின் காட்சி அமைப்பல்ல. சில பாடல்கள் ஏற்கனேவே வெளிவந்த ஏதோ ஒரு பாடலின் சாயலிலும் இருக்கலாம். அதைப்பற்றி எல்லாம் கவலைப்படாமல், சென்ற வருடத்துப் பாடல்களை கேட்டுப் பார்ப்போம் - வரும் வருடத்தில் இன்னமும் சிறப்பான பாடல்கள் வெளிவர வேண்டும் என்ற எதிர்பார்ப்புடன்.<br /><br />என் ரசனையில் எனக்குப் பிடித்த பாடல்களை இங்கே வரிசைப்படுத்தி இருக்கிறேன். இதில் இதுவரை நீங்கள் கேட்காத பாடல்கள் இருந்தால், அவற்றை தவறாமல் கேட்டுப் பார்க்கவும்.<br /><br />(பாடல் / பாடுபவர் / படம் / இசையமைப்பாளர்)<br />1. <a href="http://www.musicindiaonline.com/p/x/U6fgx4D8US.As1NMvHdW/">காற்றின் மொழியே</a> / சுஜாதா / மொழி / வித்யாசாகர்<br /><br />இதமாக வருடிச் செல்லும் இனிதான பாடல். மேலே சுஜாதாவின் குரலிலும், கீழே பலராம் குரலிலும் கேட்கலாம்.<br />முன்னீடு தனில் வரும் கிடாருக்கும், தொடரும் பலராமின் குரலுக்கும் அப்படி ஒரு ஹார்மொனி. தொடர்ந்து வரும் குழலோசை உள்ளத்தை உருக்குகிறது. இடையூட்டில் வரும் பியானோ துளிகளின் சாரலில் நனைந்த சுகம் சுகமே. குரலும் இசைக் கருவிகளும் இரண்டற கலந்த இனிய சங்கமம்.<br /><br />பலராம் குரலில்:<br /><object height="355" width="425"><param name="movie" value="http://www.youtube.com/v/KH4IRqcuT20&rel=1"><param name="wmode" value="transparent"><embed src="http://www.youtube.com/v/KH4IRqcuT20&rel=1" type="application/x-shockwave-flash" wmode="transparent" width="425" height="355"></embed></object><br /><br /><br />2. <a href="http://www.musicindiaonline.com/p/x/tWOgBSe8r9.As1NMvHdW/">விழியில் உன் விழியில் </a>/ ஸ்வேதா, சோனு நிகம் / கிரீடம் / GV பிரகாஷ்குமார்<br />மெலடியில் இந்தப் பாடல் மனதைத் தொட்டது. சேனு நிகமின் குரல் இனிதாய் இழைந்தோடுகிறது. ஸ்வேதாவின் குரலும் நன்று. பாடலில் எளிமை பாடலை உயரத் தூக்கி நிறுத்துகிறது. வீணை வாசிப்புகள் ஒரு கிளாசிகல் உருவகத்தை ஏற்படுத்துகிறது.<br />கீழே கொடுத்துள்ள வீடியோ பாடலில் இடையிடையே வசனங்கள் வரும். வசனங்களில்லாமல் இடையூடுகளை மேலே உள்ள சுட்டியில் கேட்கலாம்.<br /><object height="355" width="425"><param name="movie" value="http://www.youtube.com/v/luEpWlMzrjo&rel=1"><param name="wmode" value="transparent"><embed src="http://www.youtube.com/v/luEpWlMzrjo&rel=1" type="application/x-shockwave-flash" wmode="transparent" height="355" width="425"></embed></object><br />மேலும் இந்தப் படத்தில் இன்னொரு டூயட் பாடலும் பிரபலம்:<br />& <a href="http://www.musicindiaonline.com/p/x/nBOg8.Vyqd.As1NMvHdW/">அக்கம் பக்கம்</a> / சாதனா சர்கம் / கிரீடம் / GV பிரகாஷ்குமார்<br /><br />3. <a href="http://www.musicindiaonline.com/p/x/HsOgFgM8BS.As1NMvHdW/">பறபற பட்டாம்பூச்சி </a>/ ராகுல் நம்பியார்/ கற்றது தமிழ் / யுவன் சங்கர் ராஜா<br />பியானோவில் துவங்கும் இந்தப் பாடலின் எனக்குப் பிடித்தது - பாடல் துறுதுறுவென ஊக்கத்தினை ஏற்படுத்துவதுதான். பற, பற... என மொத்தம் ஐந்து 'பற' போட்டு, ந.முத்துக்குமாரின் வரிகளுக்கு வேகம் கொடுத்திருக்கிறார் யுவன். விரும்பிக் கேட்கச் செய்யும் கம்பி வாத்தியங்களில் மீண்டும் பழைய யுவனைக் கேட்கப் பிடிக்கிறது, இதமானதொரு மெலடியில்.<br /><br />4. <a href="http://www.musicindiaonline.com/p/x/16XgrD9Cld.As1NMvHdW/">அலைகளின் ஓசை</a> / ஹரிசரண், கல்யாணி / ராமேஸ்வரம் / நிரு<br />அசத்தலான முன்னீடுடன் அருமையாக தொடங்கும் பாடல். முடியும் முன்னீடுக்கு முத்தாய்ப்பாய் ஒற்றை மணி ஒலி. அழகான மெலடியில், ஹரிசரண் மற்றும் கல்யாணி இருவரும் நன்றாக பாடி உள்ளார்கள். இலேசான சோகமும் குரலில் இழையோடுவது தெரிகிறது. சாரங்கி, செலோ மற்றும் புல்லாங்குழல் இடையூடுகளில் தனியில் பிராகசிக்கின்றன. இரண்டு முறை இந்தப்பாடலைக் கேட்டுவிட்டு கண்களை மூடுங்கள், உங்கள் தோள்கள் தானாக குலுங்கும், பாடலின் ரிதத்தில்.<br /><object height="355" width="425"><param name="movie" value="http://www.youtube.com/v/BqVxXIobyYo&rel=1"><param name="wmode" value="transparent"><embed src="http://www.youtube.com/v/BqVxXIobyYo&rel=1" type="application/x-shockwave-flash" wmode="transparent" height="355" width="425"></embed></object><br /><br />5. <a href="http://www.musicindiaonline.com/p/x/-BOgDsapZS.As1NMvHdW/">எனதுயிரே </a>/ சின்மயி, சாதனா சர்கம், நிகில் மேத்யூ / பீமா / ஹேரிஸ் ஜெயராஜ்<br />இன்னமும் திரைப்படம் வெளிவராவிட்டாலும், ஒலிக்கோப்புகள் வந்து விட்டன. பாடலின் பின்னணியில் சின்மயி 'ஹம்' செய்யும் ரிதம் அழகு. சாதனாவின் உச்சரிப்பில் கொச்சையைத் தவிர்த்தால், இதர அனைத்தும் இந்தப் பாடலில் அருமை. நிகிலும் அழகாக பாடி இருக்கிறார். சந்தூர் மற்றும் தபலா, ஹிந்துஸ்தானி இசையின் பரிணாமங்களை கண்முன் கொண்டுவந்து நிறுத்துகிறது.<br /><object height="355" width="425"><param name="movie" value="http://www.youtube.com/v/PTeFuq5zj1w&rel=1"><param name="wmode" value="transparent"><embed src="http://www.youtube.com/v/PTeFuq5zj1w&rel=1" type="application/x-shockwave-flash" wmode="transparent" height="355" width="425"></embed></object><br />இந்தப் படத்தில் இன்னொரு பாடலையும் அழகாக வடித்திருக்கிறார் ஹேரிஸ்:<br /><a href="http://www.youtube.com/watch?v=X0j-2hWbXxc&feature=related">ரகசிய கனவுகள்</a>, ஹரிஹரனின் இனிமையான குரலில்.<br /><br />6. <a href="http://www.musicindiaonline.com/p/x/_6Xg4QsP1S.As1NMvHdW/">உன்னருகில் வருகையில்</a> / ஹரிணி சுதாகர், ஹரிசரண் / கல்லூரி / ஜோ.ஸ்ரீதர்<br />நீளமான இடையூடுகளில் அசத்துகிறார் ஜோ.ஸ்ரீதர். பாடலின் ஜீவன் அவரது இசையில் மிளிர்வதைப் பார்க்கலாம்.கனமான மேளங்களுக்கு நடுவேயும் பாடல் வரிகளும் இசையும் ரசிக்கும்படியாக இருக்கிறது.<br /><object height="355" width="425"><param name="movie" value="http://www.youtube.com/v/Bl4w5qVjsM0&rel=1"><param name="wmode" value="transparent"><embed src="http://www.youtube.com/v/Bl4w5qVjsM0&rel=1" type="application/x-shockwave-flash" wmode="transparent" height="355" width="425"></embed></object><br /><br />7. <a href="http://www.musicindiaonline.com/p/x/iBfgBKDiqS.As1NMvHdW/">ஆருயிரே மன்னிப்பாயா</a> / சின்மயி, குவாதீர், மதாஷா, ஏ.ஆர்.ரஹ்மான் / குரு / ஏ.ஆர். ரஹ்மான்<br />ஒரே பாடலில் இத்தனை குரல்களா? இத்தனை இசைக்கருவிகளா? வியப்பே வேண்டாம் - இது ரஹ்மான் இசை. தனக்கு மிகவும் பரிச்சயமான குவாலி வகை பாடலில் கலக்குகிறார் ரஹ்மான். பாடலில் ஒவ்வொரு நொடியும், ஏன் இறுதியில் கடைசி சப்தம் தானாக தேய்ந்து மறைகிற வரையும், இசையின் பிரம்மாண்டம் இனிதாகவும் இருக்கிறது.<br /><object height="355" width="425"><param name="movie" value="http://www.youtube.com/v/maeeCHA4CUo&rel=1"><param name="wmode" value="transparent"><embed src="http://www.youtube.com/v/maeeCHA4CUo&rel=1" type="application/x-shockwave-flash" wmode="transparent" height="355" width="425"></embed></object><br /><br /><br />8. <a href="http://www.musicindiaonline.com/p/x/gBXgDnJC2S.As1NMvHdW/">மார்கழியில்</a> / ஸ்ரீநிவாஸ் / ஒன்பது ரூபாய் நோட்டு / பரத்வாஜ்<br />பாட்டென்றால் இப்படித்தான் இயற்கையாக இருக்க வேண்டும் என்று சொல்ல வைக்கும் அளவிற்கு அருமை. பாடலாசிரியர் வைரமுத்து நிச்சயம் வாழ்த்துவார். 'என்னைப்போல சுகமான ஆளிருந்தா காமி' என்ற வரிகளுக்கு பதிலாக - இந்தப் பாடலைக் கேட்கும் ஒவ்வொருவரையும் காட்டலாம்!.<br />& <a href="http://www.musicindiaonline.com/p/x/3WXgcVQf0S.As1NMvHdW/">வேலாயி</a> / குணசேகரன் / ஒன்பது ரூபாய் நோட்டு / பரத்வாஜ்<br />இதே படத்தில் இன்னொரு பாடலும் அசத்துகிறது. இந்தப் பாடல் முழுதும் வீசும் மண்ணின் மணத்தை அப்படியே எடுத்து உடலெங்கும் பூசிக் கொள்ளலாம்!. இரண்டாவது இடையூடில் வரும் மணிஓசைகளும், குழலும் இன்பம்.<br /><br />9. <a href="http://www.musicindiaonline.com/p/x/P6bgVqmAJ9.As1NMvHdW/">உன்னாலே உன்னாலே</a> / ஹரிணி, கார்த்திக், க்ருஷ்/ உன்னாலே உன்னாலே /ஹேரிஸ் ஜெயராஜ்<br />வழக்கமான ஹேரிஸ் ஜெயராஜ் பாடல் என்றாலும், கார்த்திக்கின் இனிமையான குரல் - கேட்பதற்கு நன்றாக உள்ளது. இரண்டாவது இடையூடில் கிடார் வாசிப்ப்பும், தொடர்ந்து கிடார் எப்படி ராப் செய்வதற்காக வழி அமைத்துக் கொடுக்கிறது என்பதை கேட்கவும் ரசிக்கும்படியாக உள்ளது. தொடரும் ஹரிணியின் குரலும் - ஒன்றுக்கொன்று பொருத்தமாக உருவாக்கப்பட்டது போன்ற அழகு.<br /><object height="355" width="425"><param name="movie" value="http://www.youtube.com/v/WYpbz6dFOE0&rel=1"><param name="wmode" value="transparent"><embed src="http://www.youtube.com/v/WYpbz6dFOE0&rel=1" type="application/x-shockwave-flash" wmode="transparent" height="355" width="425"></embed></object><br /><br />10. <a href="http://www.musicindiaonline.com/p/x/sBOgazhp59.As1NMvHdW/">ஏழேழு ஜென்மம்</a> / முகமது அஸ்லம் / பரட்டை (எ) அழகுசுந்தரம்/யுவன் சங்கர் ராஜா<br />முகமது அஸ்லாமின் மாறுபாட்ட குரலில் தாயின் பெருமையைப் போற்றும் பாடல். இந்தப் பாடலிலும் பாடல் வரிகளை தெளிவாக கேட்டு, பாடல் தரும் சுகத்தை அனுபவிக்கலாம். தாலாட்டுப்பாடல் கேட்பது போன்று சுகமான அனுபவம் வரும். இடையூடுகளில் இசைக்கருவிகளும் சேர்ந்து இனிமையைத் தரும்.<br /><br />------------------------------------------------------------------------------------<br />இந்தப் பத்தில் இடம் பெறாமல் போன, இதர ஐந்து பாடல்களையும், இங்கு தந்திருக்கிறேன். அவையும் உங்களுக்குப் பிடித்திருக்கலாம் - கேட்டுப்பாருங்கள்.<br /><br />11. <a href="http://www.musicindiaonline.com/p/x/rBOgIyak7t.As1NMvHdW/">சஹானா பூக்கள் </a>/ சின்மயி, உதித் நாராயணன் / சிவாஜி / ஏ.ஆர்.ரஹ்மான்<br /><br />12. <a href="http://www.musicindiaonline.com/p/x/-sXgTh7uf9.As1NMvHdW/">மெதுவா மெதுவா</a> / கார்த்திக், ஹரிணி / பிரிவோம் சந்திப்போம் / வித்யாசாகர்<br /><br />13. <a href="http://www.musicindiaonline.com/p/x/36fglj1vrS.As1NMvHdW/">இது என்ன மாயம்</a> / சங்கர் மஹாதேவன், அல்கா யக்நிக் /ஓரம் போ/ GV பிரகாஷ்குமார்<br /><br />14. <a href="http://www.musicindiaonline.com/p/x/msfgfaDg2d.As1NMvHdW/">உனக்குள் நானே</a> / பாம்பே ஜெயஸ்ரீ / பச்சைக்கிளி முத்துச்சரம் / ஹேரிஸ் ஜெயராஜ்<br /><br />15. <a href="http://www.musicindiaonline.com/p/x/EWOg1BhvPt.As1NMvHdW/">பேசப் பேராசை</a> / கார்த்திக், பவதாரிணி / நாளைய பொழுதும் உன்னோடு / ஸ்ரீகாந்த் தேவா<br /><br /><br /><br />---------------------------------------------------------------------------------------<br /><br />சென்ற சில வருட டாப் டென் வரிசைகள்:<br /><a href="http://jeevagv.blogspot.com/search/label/%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%20%E0%AE%9F%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D">2003 முதல் 2006 வரை</a>jeevagvhttp://www.blogger.com/profile/02747964167117423246noreply@blogger.com23