Saturday, May 09, 2009

உளறினாலும் அழகிய பாட்டு வருமா?

ரொம்ப நாள் ஆச்சு இசை இன்பத்துல பதிவு போட்டு.. ( என்னோட ப்ளாக்ல கூட பதிவு போட்டு ரொம்ப நாள் ஆனது வேற கதை)... ஏர்டல் சூப்பர் சிங்கர் எத்தனை பேரு பார்கறீங்கனு தெரியாது ... என்னை மாதிரி ஆளுங்க பாட தெரியாததுனால இந்த மாதிரி நிகழ்ச்சி எல்லாம் நல்ல பார்பாங்கனு நினைக்கிறேன் .. அதை பார்த்ததுனால வந்த வினை தான் உங்களுக்கு எல்லாம் இந்த பதிவு.. (விதி யாரை விட்டுது).. சரி சரி விஷயத்துக்கு வரேன்..
ஹரிஹரன் சார் எப்படி பாடுவார்னு எல்லாருக்கும் தெரியும்.... அவரை கௌரவபடுத்தும் வகையில் அவர் பாடிய பாடல்கள் பாடனும்னு ஒரு சுற்று.. அதுல ஒருத்தர் பாடினது உதயா படத்துல வர "உதயா உதயா உளறுகிறேன்" பாட்டு மிக அருமையாக இருந்தது.. நீங்களும் கேளுங்களேன்.. சாதனா சர்கமும் சேர்ந்து பாடி இருக்காங்க. நான் மிகவும் ரசிச்ச பாட்டு.. கேட்டுட்டு உங்க கருத்துகளை சொல்லுங்களேன்..

உதயா உதயா உளறுகிறேன்
உயிரால் உனையே எழுதுதிறேன்
காதல்

காதல் ...தீண்டவே .... காதல் ...தீண்டவே
கடல் தாகம் தீர்ந்ததே
உன்னாலே தன்னாலே
உதயா உதயா உளறுகிறேன்
உயிரால் உனையே எழுதுதிறேன்
காதல் காதல் காதல்

உன் பாதி வாழ்கிறேன்
என் பாதி தேய்கிறேன்
உன்னாலே தன்னாலே
என்னாளும் ...
உதயா உதயா உளறுகிறேன்
உயிரால் உனையே எழுதுதிறேன்
காதல் காதல் காதல்

என்னை தொலைத்துவிட்டேன்
ஏன் உன்னை அடைந்துவிட்டேன்
உன்னை அடைந்ததனால்
என் என்னை தொலைத்துவிட்டேன்
ஏனோ ஏனேனோ தொலைந்தே நீந்தேனோ
ஏனோ ஏனேனோ மீண்டும் தொலைவேனோ
ஆயுள் ஆனவளே
உன் கூந்தல் இருட்டில் என் கிழக்கு தொலைந்தும்
காதல்...தீண்டவே
மூச்சின் குழிகளிலே ... உயிர் ஊற்றி அனுப்பிவைத்தேன்
கூச்சம் வருகையிலே ...உடல் மாற்றி நுழைந்துவிட்டேன்
ஏனோ ஏனேனோ ஏதோ ஆனேனோ
ஏனோ ஏனேனோ நீயாய் ஆனேனோ
தாயுமானவனே
என் நெற்றி பாலையில் ஊற்றை திறந்து
காதல்...
காதல். ..தீண்டவே... காதல்...தீண்டவே
கடல் தாகம் தீர்ந்ததே
உன்னாலே தன்னாலே
உயிரே உயிரே உளறுகிறேன்
உளறியும் கவிதைகள் எழுதுகிறேன்

உதயா உதயா உளறுகிறேன்
உயிரால் உனையே எழுதுகிறேன்
காதல் ...காதல் ...

  © Blogger template 'Sunshine' by Ourblogtemplates.com 2008

Back to TOP